முகப்பு |
காயாம்பூ |
183. முல்லை |
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ |
||
நம் போல் பசக்கும் காலை, தம் போல் |
||
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு |
||
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?- |
||
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை |
||
மென் மயில் எருத்தின் தோன்றும் |
||
புன் புல வைப்பிற் கானத்தானே. |
உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார் |