முகப்பு |
பயறு |
10. மருதம் |
யாய் ஆகியளே விழவு முதலாட்டி; |
||
பயறு போல் இணர பைந் தாது படீஇயர் |
||
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக் |
||
காஞ்சி ஊரன் கொடுமை |
||
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே. |
உரை | |
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - ஓரம்போகியர் |
338. குறிஞ்சி |
திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு |
||
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ, |
||
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல, |
||
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை, |
||
பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம் |
||
வந்தன்று, பெருவிறற் தேரே-பணைத் தோள் |
||
விளங்கு நகர் அடங்கிய கற்பின் |
||
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே. |
உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பெருங்குன்றூர் கிழார் |