முகப்பு |
வாளை |
8. மருதம் |
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் |
||
பழன வாளை கதூஉம் ஊரன் |
||
எம் இல் பெருமொழி கூறி, தம் இல், |
||
கையும் காலும் தூக்கத் தூக்கும் |
||
ஆடிப் பாவை போல, |
||
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. |
உரை | |
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஆலங்குடி வங்கனார். |
164. மருதம் |
கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு |
||
துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம் |
||
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது |
||
தண் பெரும் பௌவம் அணங்குக-தோழி!- |
||
மனையோள் மடமையின் புலக்கும் |
||
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே! |
உரை | |
காதல்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது. - மாங்குடிமருதன் |
364. மருதம் |
அரில் பவர்ப் பிரம்பின் வரி புற நீர்நாய் |
||
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் |
||
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி |
||
எற் புறங்கூறும் என்ப; தெற்றென |
||
வணங்கு இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர் |
||
துணங்கை நாளும் வந்தன அவ் வரைக் |
||
கண் பொர, மற்று அதன்கண் அவர் |
||
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே. |
உரை | |
வேறு ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது. - ஒளவையார் |