சான்றோர் பொய் உரையார்

184. நெய்தல்

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;

குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே-

இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு,

ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்-

மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை

நுண் வலைப் பரதவர் மட மகள்

கண் வலைப் படூஉம் கானலானே.

உரை

கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்