41-50 |
41 |
'தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு |
|
வெண் பூம் பொய்கைத்து, அவன் ஊர்' என்ப; அதனால் |
|
தன் சொல் உணர்ந்தோர் மேனி |
|
பொன் போல் செய்யும் ஊர்கிழவோனே. |
|
கழறித் தெருட்டற் பாலராகிய அகம் புகல் மரபின் வாயில்கள் புகுந்துழி, தலைவனையும் பாணன் முதலாகிய பக்கத்தாரையும் இகழ்ந்து, தலைவி கூறியது. 1 |
42 |
மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ |
|
யாணர் ஊர! நின் மாண் இழை அரிவை? |
|
காவிரி மலிர்நிறை அன்ன நின் |
|
மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே. |
|
தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, 'தலைவன் பிற பரத்தையருடன் ஒழுகினான்' என்று புலந்தாளாக, அதனை அறிந்த தலைவி, அவன் தன் இல்லத்துப் புகுந்துழி, தான் அறிந்தமை தோன்றச் சொல்லியது. 2 |
43 |
அம்பணத்து அன்ன யாமை ஏறி, |
|
செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் |
|
யாணர் ஊர! நின்னினும் |
|
பாணன் பொய்யன்; பல சூளினனே. |
|
பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப மறுத்த தலைமகள், பாணனோடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது. 3 |
44 |
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத் |
|
தாய் முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு, |
|
அதுவே ஐய, நின் மார்பே; |
|
அறிந்தனை ஒழுகுமதி; அறனுமார் அதுவே. |
|
பரத்தையர் மனைக்கண்ணே பல் நாள் தங்கி, தன் மனைக்கண்ணே வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 4 |
45 |
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து, |
|
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும் |
|
யாறு அணிந்தன்று, நின் ஊரே; |
|
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந! என் கண்ணே. |
|
நெடுநாள் பரத்தையர் இடத்தனாய் ஒழுகிய தலைமகன் மனைவயின் சென்றுழித் தோழி சொல்லியது. 5 |
46 |
நினக்கே அன்று அஃது, எமக்குமார் இனிதே |
|
நின் மார்பு நயந்த நல் நுதல் அரிவை |
|
வேண்டிய குறிப்பினை ஆகி, |
|
ஈண்டு நீ அருளாது, ஆண்டு உறைதல்லே. |
|
மனைக்கண் வருதல் பரத்தை விலக்க விலங்கி, பின்பு, உலகியல் பற்றி, அவள் குறிப்பினோடும் வந்தமை அறிந்த தோழி தலைமகனைப் புலந்து சொல்லியது. 6 |
47 |
முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த |
|
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள் |
|
அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர! |
|
மாண் இழை ஆயம் அறியும் நின் |
|
5 |
பாணன் போலப் பல பொய்த்தல்லே. |
பாணற்கு வாயில் மறுத்த தலைமகள் பின் அப் பாணனோடு தலைமகன் புகுந்து, தன் காதன்மை கூறியவழிச் சொல்லியது. 7 |
48 |
வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் |
|
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள் |
|
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர! |
|
வேண்டேம், பெரும! நின் பரத்தை |
|
5 |
ஆண்டுச் செய் குறியொடு ஈண்டு நீ வரலே. |
பரத்தையர்மாட்டு ஒழுகாநின்று தன் மனைக்கண் |
|
சென்ற தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. 8 |
49 |
அம் சில் ஓதி அசைநடைப் பாண்மகள் |
|
சில் மீன் சொரிந்து, பல் நெற்பெறூஉம் |
|
யாணர் ஊர! நின் பாண்மகன் |
|
யார் நலம் சிதையப் பொய்க்குமோ, இனியே? |
|
பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினான் என்பது கேட்ட தலைமகள் தனக்கும் பாணனால் காதன்மை கூறுவிப்பான் புக்க தலைமகற்குச் சொல்லியது. 9 |
50 |
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் |
|
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர! |
|
தஞ்சம் அருளாய் நீயே; நின் |
|
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே. |
|
மனையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பல் நாள் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 10 |