51-60 |
51 |
நீர் உறை கோழி நீலச் சேவல் |
|
கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர! |
|
புளிங்காய் வேட்கைத்து அன்று, நின் |
|
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே. |
|
வாயில் பெற்றுப் புகுந்து போய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது. 1 |
52 |
வயலைச் செங் கொடிப் பிணையல் தைஇச் |
|
செவ் விரல் சிவந்த சேயரி மழைக் கண் |
|
செவ் வாய்க் குறுமகள் இனைய; |
|
எவ் வாய் முன்னின்று மகிழ்ந! நின் தேரே? |
|
வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. 2 |
53 |
துறை எவன் அணங்கும், யாம் உற்ற நோயே? |
|
சிறை அழி புதுப் புனல் பாய்ந்தெனக் கலங்கிக் |
|
கழனித் தாமரை மலரும் |
|
பழன ஊர! நீ உற்ற சூளே. |
|
தலைவி தன்னுடன் போய்ப் புனலாடிய வழி, 'இதுபரத்தையருடன் ஆடிய துறை' என நினைந்து பிறந்த மெலிவை மறைத்தமையை உணர்ந்த தலைமகன், மனைவயின் புகுந்துழி, 'தெய்வங்கள் உறையும் துறைக்கண்ணே நாம் ஆடினவதனால் பிறந்தது கொல், நினக்கு இவ் |
54 |
திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை |
|
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் |
|
தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ, |
|
ஊரின் ஊரனை நீ தர, வந்த |
|
5 |
பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு |
அஞ்சுவல், அம்ம! அம் முறை வரினே. |
|
வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது. 4 |
55 |
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும், |
|
தேர் வண் கோமான், தேனூர் அன்ன இவள் |
|
நல் அணி நயந்து நீ துறத்தலின், |
|
பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே. |
|
வரைந்த அணிமைக்கண்ணே புறத்தொழுக்கம் ஒழுகி, வாயில் வேண்டி வந்து, தன் மெலிவு கூறிய தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 5 |
56 |
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா, |
|
வெல் போர்ச் சோழர், ஆமூர் அன்ன இவள் |
|
நலம்பெறு சுடர் நுதல் தேம்ப, |
|
எவன் பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே? |
|
புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அஃது இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 6 |
57 |
பகலில் தோன்றும் பல் கதிர்த் தீயின் |
|
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன |
|
இவள் நலம் புலம்பப் பிரிய, |
|
அனைநலம் உடையோளோ மகிழ்ந! நின் பெண்டே? |
|
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று என்பது கேட்ட தோழி அவனை வினாயது. 7 |
58 |
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின், |
|
கை வண் விராஅன், இருப்பை அன்ன |
|
இவள் அணங்குற்றனை போறி; |
|
பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே! |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி கூறியது. 8 |
59 |
கேட்டிசின் வாழியோ, மகிழ்ந! ஆற்றுற, |
|
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர |
|
நினக்கு மருந்து ஆகிய யான், இனி, |
|
இவட்கு மருந்து அன்மை நோம், என் நெஞ்சே. |
|
தலைமகள் ஆற்றாளாம் வண்ணம் மனைக்கண் வரவு சுருங்கிய தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழி ஆற்றாளாகிய தோழி சொல்லியது. 9 |
60 |
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும் |
|
கழனி ஊர! நின் மொழிவல்: என்றும் |
|
துஞ்சு மனை நெடு நகர் வருதி; |
|
அஞ்சாயோ, இவள் தந்தை கை வேலே? |
|
வரையாது ஒழுகும் தலைமகன் இரவுக்குறி வந்துழித் தோழி சொல்லியது. 10 |