91-100 |
91 |
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து |
|
வெறி மலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும் |
|
கழனி ஊரன் மகள் இவள்; |
|
பழன வெதிரின் கொடிப் பிணையலளே. |
|
குறைவேண்டிப் பின்னின்று வந்த தலைமகற்குத் தோழி, 'இவள் இளையள் விளைவு இலள்' எனச் சேட்படுத்தது. 1 |
92 |
கருங் கோட்டு எருமைச் செங் கண் புனிற்று ஆ |
|
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் |
|
நுந்தை, நும் ஊர் வருதும் |
|
ஒண் தொடி மடந்தை! நின்னை யாம் பெறினே. |
|
'நினக்கு வரைந்து தருதற்குக் குறை நின் தமர் அங்கு வந்து கூறாமையே' எனத் தோழி கூறினாளாக, தலைமகள் முகம் நோக்கி, 'இவள் குறிப்பினால் கூறினாள்' என்பது அறிந்த தலைமகன், 'வரைவு மாட்சிமைப்படின் நானே வருவல்' எனத் தலைமகட்குச் செ |
93 |
எருமை நல் ஏற்றினம் மேயல் அருந்தென, |
|
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா, |
|
செய்த வினைய மன்ற பல் பொழில் |
|
தாது உண் வெறுக்கைய ஆகி, இவள் |
|
5 |
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே. |
முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால் பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவிய செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. 3 |
94 |
மள்ளர் அன்ன தடங் கோட்டு எருமை |
|
மகளிர் அன்ன துணையொடு வதியும் |
|
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே |
|
கழனித் தாமரை மலரும், |
|
5 |
கவின் பெறு சுடர்நுதல் தந்தை, ஊரே. |
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீள்கின்றான் சொல்லியது. 4 |
95 |
கருங் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ, |
|
நெடுங் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் |
|
புனல் முற்று ஊரன், பகலும், |
|
படர் மலி அரு நோய் செய்தனன், எமக்கே. |
|
உண்டிக்காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கி, பரத்தையிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயிலாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது. 5 |
96 |
அணி நடை எருமை ஆடிய அள்ளல், |
|
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் |
|
கழனி ஊரன் மகள், இவள்; |
|
பழன ஊரன் பாயல் இன் துணையே. |
|
பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு பொறாதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்கண் புகுந்துழி, உடன்படுதல் கண்ட வாயில்கள் தம்முள்ளே சொல்லியது. 6 |
97 |
பகன்றை வால் மலர் மிடைந்த கோட்டைக் |
|
கருந் தாள் எருமைக் கன்று வெரூஉம், |
|
பொய்கை, ஊரன் மகள், இவள்; |
|
பொய்கைப் பூவினும் நறுந் தண்ணியளே. |
|
புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும், 'உளது' என்று புலந்த தலைமகளைப் புலவி நீக்கிய தலைமகன், புணர்ச்சியது இறுதிக்கண், தன்னுள்ளே சொல்லியது. 7 |
98 |
தண் புனல் ஆடும் தடங் கோட்டு எருமை |
|
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர! |
|
ஒண் தொடி மட மகள் இவளினும் |
|
நுந்தையும் ஞாயும் கடியரோ, நின்னே? |
|
புறத்தொழுக்கம் உளது ஆகிய துணையானே புலந்து வாயில் நேராத தலைமகள் கொடுமை தலைமகன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது. 8 |
99 |
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை, |
|
கழனி எருமை, கதிரொடு மயக்கும் |
|
பூக் கஞல் ஊரன் மகள், இவள்; |
|
நோய்க்கு மருந்து ஆகிய பணைத் தோளோளே. |
|
தோழி முதலாயினோர் தலைமகன் கொடுமை கூறி விலக்கவும் வாயில் நேர்ந்துழி, அவன் உவந்து சொல்லியது. 9 |
100 |
புனலாடு மகளிர் இட்ட ஒள் இழை, |
|
மணல் ஆடு சிமையத்து, எருமை கிளைக்கும் |
|
யாணர் ஊரன் மகள், இவள்; |
|
பாணர் நரம்பினும் இன் கிளவியளே. |
|
வாயில் நேர்தற்பொருட்டு முகம்புகுவான் வேண்டி இயற்பழித்துழி, தலைமகள் இயற்பட மொழிந்த திறம் தலைமகற்குத் தோழி சொல்லியது. 10 |