121-130 |
121 |
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே? |
|
முண்டகக் கோதை நனைய, |
|
தெண் திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே! |
|
பரத்தை தலைமகற்குச் சொல்லியது; 'பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையோடு கூடி மறைந்து ஒழுகாநின்றான்' என்பது அறிந்து தலைவி புலந்துழி, 'இத் தவறு என் மாட்டு இலை; நீ இப் புலவியை நீக்க வேண்டும்' என்று தோழிக்குத் தலைமகன் கூற, புலவ |
122 |
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? |
|
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்தென, |
|
வெள்ளாங் குருகை வினவுவோளே! 2 |
123 |
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? |
|
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப, |
|
தண்ணென் பெருல் கடல் திரை பாய்வோளே! 3 |
124 |
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? |
|
வண்டற் பாவை வௌவலின், |
|
நுண் பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே! 4 |
125 |
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? |
|
தெண் திரை பாவை வௌவ, |
|
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே! 5 |
126 |
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? |
|
உண்கண் வண்டினம் மொய்ப்ப, |
|
தெண் கடல் பெருந் திரை மூழ்குவோளே! 6 |
127 |
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? |
|
தும்பை மாலை இள முலை |
|
நுண் பூண் ஆகம் விலங்குவோளே! 7 |
128 |
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே? |
|
உறாஅ வறு முலை மடாஅ, |
|
உண்ணாப் பாவையை ஊட்டுவோளே! 8 |
129 |
-------------------------------------------- |
|
-------------------------------------------- |
|
-------------------------------------------- |
|
(இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 9 |
130 |
-------------------------------------------- |
|
-------------------------------------------- |
|
-------------------------------------------- |
|
(இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 10 |