121-130

121
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
முண்டகக் கோதை நனைய,
தெண் திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே!

பரத்தை தலைமகற்குச் சொல்லியது; 'பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையோடு கூடி மறைந்து ஒழுகாநின்றான்' என்பது அறிந்து தலைவி புலந்துழி, 'இத் தவறு என் மாட்டு இலை; நீ இப் புலவியை நீக்க வேண்டும்' என்று தோழிக்குத் தலைமகன் கூற, புலவ

122
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்தென,

வெள்ளாங் குருகை வினவுவோளே! 2

123
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப,

தண்ணென் பெருல் கடல் திரை பாய்வோளே! 3

124
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
வண்டற் பாவை வௌவலின்,

நுண் பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே! 4

125
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
தெண் திரை பாவை வௌவ,

உண்கண் சிவப்ப அழுது நின்றோளே! 5

126
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
உண்கண் வண்டினம் மொய்ப்ப,

தெண் கடல் பெருந் திரை மூழ்குவோளே! 6

127
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
தும்பை மாலை இள முலை

நுண் பூண் ஆகம் விலங்குவோளே! 7

128
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
உறாஅ வறு முலை மடாஅ,

உண்ணாப் பாவையை ஊட்டுவோளே! 8

129
--------------------------------------------
--------------------------------------------
--------------------------------------------

(இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 9

130
--------------------------------------------
--------------------------------------------
--------------------------------------------

(இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 10

உரை

Home
HOME