151-160 |
151 |
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, |
|
காணிய சென்ற மட நடை நாரை |
|
மிதிப்ப, நக்க கண் போல் நெய்தல் |
|
கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு |
|
5 |
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே. |
வாயில் வேண்டிய தோழிக்கு தலைமகள் வாயில் மறுப்பாள் சொல்லியது. 1 |
152 |
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, |
|
காணிய சென்ற மட நடை நாரை |
|
கையறுபு இரற்று கானல்அம் புலம்பந் |
|
துறைவன் வரையும் என்ப; |
|
5 |
அறவன் போலும்; அருளுமார் அதுவே. |
தலைமகள் வாயில் மறுத்துழி, 'இவன் நின்மேல் தொடர்ச்சியில் குறைவிலன்; அருளும் உடையான்; ஆதலால் நீ இவனோடு புலத்தல் தகாது' என நெருங்கி, வாயில் நேர்விக்கும் தோழிக்கு அவள் சொல்லியது. 2 |
153 |
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, |
|
காணிய சென்ற மட நடை நாரை |
|
உளர, ஒழிந்த தூவி குவவு மணல் |
|
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை |
|
5 |
நல்நெடுங் கூந்தல் நாடுமோ மற்றே? |
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிய தலைமகன் கேட்குமாற்றால் வாயிலாய்ப் புகுந்தாற்குத் தோழி கூறியது. 3 |
154 |
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, |
|
காணிய சென்ற மட நடை நாரை |
|
கானல் சேக்கும் துறைவனோடு |
|
யான் எவன் செய்கோ? பொய்க்கும் இவ் ஊரே? |
|
தோழி வாயில் வேண்டி நெருங்கியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 4 |
155 |
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, |
|
காணிய சென்ற மட நடை நாரை |
|
பதைப்ப, ததைந்த நெய்தல் கழிய |
|
ஓதமொடு பெயரும் துறைவற்குப் |
|
5 |
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென், யானே! |
பல வழியானும் வாயில் நேராளாகிய தலைமகள், 'மகப் பேற்றிற்கு உரித்தாகிய காலம் கழிய ஒழுகுகின்றாய்' என நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. 5 |
156 |
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, |
|
காணிய சென்ற மட நடை நாரை |
|
பதைப்ப, ஒழிந்த செம் மறுத் தூவி |
|
தெண் கழிப் பரக்கும் துறைவன் |
|
5 |
எனக்கோ காதலன்; அனைக்கோ வேறே! |
பரத்தையிடத்து வாயில் விட்டு ஒழுகுகின்ற தலைமகனது வாயிலாய் வந்தார்க்குத் தோழி வாயில் மறுத்தது. 6 |
157 |
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, |
|
காணிய சென்ற மட நடை நாரை |
|
காலை இருந்து மாலைச் சேக்கும் |
|
தெண் கடற் சேர்ப்பனொடு வாரான், |
|
5 |
தான் வந்தனன், எம் காதலோனே! |
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டி ஒழுகுகின்ற தலைமகன், 'புதல்வன் வாயிலாக வரும்' எனக் கேட்டு, அஞ்சிய தலைமகள் புதல்வன் விளையாடித் தனித்து வந்துழிச் சொல்லியது. 7 |
158 |
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, |
|
காணிய சென்ற மட நடை நாரை |
|
கானல்அம் பெருந் துறைத் துணையொடு கொட்கும் |
|
தண்ணம் துறைவ! கண்டிகும், |
|
5 |
அம் மா மேனி எம் தோழியது துயரே. |
பரத்தை புலந்துழிப் புலவி நீக்குவானாய், அஃது இடமாக வந்தமை அறிந்த தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. 8 |
159 |
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, |
|
காணிய சென்ற மட நடை நாரை |
|
பசி தின, அல்கும் பனி நீர்ச் சேர்ப்ப! |
|
நின் ஒன்று இரக்குவென் அல்லேன்; |
|
5 |
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே? |
மறாமற்பொருட்டு உண்டிக் காலத்து வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 9 |
160 |
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, |
|
காணிய சென்ற மட நடை நாரை |
|
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ! |
|
பண்டையின் மிகப் பெரிது இனைஇ, |
|
5 |
முயங்குமதி, பெரும! மயங்கினள் பெரிதே! |
புலந்த காதல் பரத்தை புலவி தீராது தலைமகன் வாயில் வேண்டி வந்தான் என்றது அறிந்த தலைமகள் வாயில் மறுத்தது. 10 |