171-180 |
171 |
திரை இமிழ் இன் இசை அளைஇ, அயலது |
|
முழவு இமிழ் இன் இசை மறுகுதொறு இசைக்கும் |
|
தொண்டி அன்ன பணைத் தோள், |
|
ஒண் தொடி, அரிவை என் நெஞ்சு கொண்டோளே! |
|
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் ஆயத்தோடு சொல்லும் தலைமகளைக் கண்டு சொல்லியது. 1 |
172 |
ஒண் தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே! |
|
வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண் |
|
உரவுக் கடல் ஒலித் திரை போல, |
|
இரவினானும் துயில் அறியேனே! |
|
'கண் துயில்கின்றிலை; இதற்குக் காரணம் என்?' என்று வினவிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. 2 |
173 |
இரவினானும் இன் துயில் அறியாது |
|
அரவு உறு துயரம் எய்துப தொண்டித் |
|
தண் நறு நெய்தல் நாறும் |
|
பின் இருங் கூந்தல் அணங்குற்றோரே. |
|
தலைமகன் குறிவழிச் சென்று தலைமகளைக் கண்ட பாங்கன் தன்னுள்ளே சொல்லியது. 3 |
174 |
அணங்குடைப் பனித் துறைத் தொண்டி அன்ன |
|
மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்குஇழை |
|
பொங்கு அரி பரந்த உண்கண், |
|
அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே. |
|
குறிவழிச் சென்று தலைமகளைக் கண்டு வந்த பாங்கன், 'அவள் நின்றுழி நின்றாள்' என்று கூறியவழி, ஆண்டுச் செல்லக் கருதிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. 4 |
175 |
எமக்கு நயந்து அருளினைஆயின், பணைத் தோள் |
|
நல் நுதல் அரிவையொடு மென்மெல இயலி, |
|
வந்திசின் வாழியோ, மடந்தை! |
|
தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே. |
|
பாங்கற் கூட்டங் கூடி நீங்கும் தலைமகன், 'இனி வருமிடத்து நின் தோழியோடும் வர வேண்டும்' எனத் தலைமகட்குச் சொல்லியது. 5 |
176 |
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித் |
|
தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி, |
|
ஐது அமைந்து அகன்ற அல்குல், |
|
கொய் தளிர் மேனி! கூறுமதி தவறே. |
|
தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழிச் சென்ற தலைமகன், 'இவள் என்னை இவை கோடற்குக் காரணம் என்?' என்று தோழியை வினாவியது. 6 |
177 |
தவறு இலராயினும், பனிப்ப மன்ற |
|
இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடுங் கோட்டு |
|
முண்டக நறு மலர் கமழும் |
|
தொண்டி அன்னோள் தோள் உற்றோரே. |
|
தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழி, 'இவள் என்னை வருத்துதற்குச் செய்த தவறு என்?' என்று வினாய தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. 7 |
178 |
தோளும் கூந்தலும் பல பாராட்டி, |
|
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல் |
|
குட்டுவன் தொண்டி அன்ன |
|
எற் கண்டு நயந்து நீ நல்காக்காலே? |
|
தலைமகன் தோழியை இரந்து குறையுறுவான் சொல்லியது. 8 |
179 |
நல்குமதி, வாழியோ! நளி நீர்ச் சேர்ப்ப! |
|
அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும் |
|
இன் ஒலித் தொண்டி அற்றே, |
|
நின் அலது இல்லா இவள் சிறு நுதலே. |
|
குறியிடத்து வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது. |
180 |
சிறு நணி வரைந்தனை கொண்மோ பெருநீர் |
|
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப் |
|
பறை தபு முது குருகு இருக்கும் |
|
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே. |
|
தாழ்த்து வரையக் கருதிய தலைமகனைத் தோழி நெருங்கி, 'கடிதின் வரைய வேண்டும்' எனச் சொல்லியது. 10 |