231-240 |
231 |
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப! |
|
இரும் பல் கூந்தல் திருந்துஇழை அரிவை |
|
திதலை மாமை தேயப் |
|
பசலை பாயப் பிரிவு? தெய்யோ! |
|
ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 1 |
232 |
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க |
|
ஏதிலாட்டியை நீ பிரிந்ததற்கே, |
|
அழல் அவிர் மணிப்பூண் நனையப் |
|
பெயல்ஆனா, என் கண்ணே தெய்யோ! |
|
ஒருவழித் தணந்து வந்த தலைமகன் 'நான் பிரிந்த நாட்கண் நீர் என் செய்தீர்?' எனக் கேட்க, தோழி அவற்குச் சொல்லியது. 2 |
233 |
வருவைஅல்லை; வாடை நனி கொடிதே |
|
அரு வரை மருங்கின் ஆய்மணி வரன்றி, |
|
ஒல்லென இழிதரும் அருவி நின் |
|
கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ! |
|
ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 3 |
234 |
'மின் அவிர் வயங்குஇழை ஞெகிழச் சாஅய், |
|
நன்னுதல் பசத்தல் யாவது?' துன்னிக் |
|
கனவில் காணும் இவளே |
|
நனவில் காணாள், நின் மார்பே தெய்யோ!' |
|
இடைவிடாது வந்தொழுகாநின்றே களவு நீடாமல் வரைதற்கு முயல்கின்ற தலைமகன் தலைமகள் வேறுபாடு கண்டு, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவியவழி, 'நின்னைக் கனவில் கண்டு, விழித்துக் காணாளாய் வந்தது' எனத் தோழி சொல்லி வரைவு முடுக் |
235 |
கையற வீழ்ந்த மை இல் வானமொடு |
|
அரிது காதலர்ப் பொழுதே; அதனால், |
|
தெரிஇழை தெளிர்ப்ப முயங்கி, |
|
பிரியலம் என்கமோ? எழுகமோ? தெய்யோ! |
|
உடன்போக்கு நேர்வித்த பின்பு தலைமகன் உடன்கொண்டு போவான் இடை யாமத்து வந்துழி, தலைமகட்குத் தோழி சொல்லியது. 5 |
236 |
அன்னையும் அறிந்தனள்; அலரும் ஆயின்று; |
|
நல் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும், |
|
இன்னா வாடையும் மலையும்; |
|
நும் ஊர்ச் செல்கம்; எழுகமோ? தெய்யோ! |
|
களவொழுக்கம் வெளிப்பட்டமையும் தம் மெலிவும் உணர்த்தி, தோழி உடன்போக்கு நயந்தாள் போன்று, வரைவு கடாயது. 6 |
237 |
காமம் கடவ, உள்ளம் இனைப்ப, |
|
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின், |
|
ஓங்கித் தோன்றும் உயர் வரைக்கு |
|
யாங்கு எனப்படுவது, நும் ஊர்? தெய்யோ! |
|
அல்லகுறிப்பட்டு நீங்கிய தலைமகனை வந்திலனாகக் கொண்டு, அவன் பின்பு வந்துழி, அவற்குத் தோழி சொல்லியது. 7 |
238 |
வார் கோட்டு வயத் தகர் வாராது மாறினும், |
|
குரு மயிர்ப் புருவை நசையின் அல்கும் |
|
மாஅல் அருவித் தண் பெருஞ் சிலம்ப! |
|
நீ இவண் வரூஉம்காலை, |
|
5 |
மேவரும் மாதோ, இவள் நலனே தெய்யோ! |
வரையாது வந்தொழுகும் தலைமகனுக்கு, 'இவள் கவின் நீ வந்த காலத்து வருதலால், நீ போன காலத்து அதன் தொலைவு உனக்கு அறியப்படாது' எனத் தோழி சொல்லி, வரைவு கடாயது. 8 |
239 |
சுரும்பு உணக் களித்த புகர் முக வேழம் |
|
இரு பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம் நின் |
|
குன்று கெழு நல் நாட்டுச் சென்ற பின்றை, |
|
நேர் இறைப் பணைத் தோள் ஞெகிழ, |
|
5 |
வாராய்ஆயின், வாழேம் தெய்யோ! |
'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 9 |
240 |
அறியேமஅல்லேம்; அறிந்தனம் மாதோ |
|
பொறி வரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச் |
|
சாந்தம் நாறும் நறியோள் |
|
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ! |
|
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதானமை அறிந்து தலைமகள் புலந்துவழி, அவன் அதனை 'இல்லை' என்று மறைத்தானாக, தோழி சொல்லியது. 10 |