241-250 |
241 |
நம் உறு துயரம் நோக்கி, அன்னை |
|
வேலன் தந்தனள் ஆயின், அவ் வேலன் |
|
வெறி கமழ் நாடன் கேண்மை |
|
அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே! |
|
இற்செறித்தவழித் தலைமகட்கு எய்திய மெலிவு கண்டு, 'இஃது எற்றினான் ஆயிற்று?' என்று வேலனைக் கேட்பத் துணிந்துழி, அறத்தொடுநிலை துணிந்த தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 1 |
242 |
அறியாமையின், 'வெறி' என மயங்கி, |
|
அன்னையும் அருந் துயர் உழந்தனள்; அதனால், |
|
எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ் |
|
ஆய் மலர் உண்கண் பசப்ப, |
|
5 |
சேய் மலை நாடன் செய்த நோயே. |
தலைமகள் அறத்தொடுநிலை நயப்ப வேண்டித் தோழி அவட்குச் சொல்லியது. 2 |
243 |
கறி வளர் சிலம்பிற் கடவுள் பேணி, |
|
அறியா வேலன், 'வெறி' எனக் கூறும்; |
|
அது மனம் கொள்குவை, அனை! இவள் |
|
புது மலர் மழைக் கண் புலம்பிய நோய்க்கே. |
|
தாயுழை அறியாமை கூறித் தோழி வெறி விலக்கியது. 3 |
244 |
அம்ம வாழி, தோழி! பல் மலர் |
|
நறுந் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை |
|
குன்றம் பாடான் ஆயின், |
|
என் பயம் செய்யுமோ வேலற்கு வெறியே? |
|
வெறியாடல் துணிந்துழி, விலக்கலுறுந் தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 4 |
245 |
பொய்யா மரபின் ஊர் முது வேலன் |
|
கழங்கு மெய்ப்படுத்து, கன்னம் தூக்கி, |
|
'முருகு' என மொழியும்ஆயின், |
|
கெழுதகைகொல் இவள் அணங்கியோற்கே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. 5 |
246 |
வெறி செறித்தனனே, வேலன் கறிய |
|
கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப்படூஉ, |
|
.................................................................................................................. |
|
மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து, |
|
5 |
மன்றில் பையுள் தீரும் |
குன்ற நாடன் உறீஇய நோயே. |
|
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாய் நின்றுழி, அவன் கேட்குமாற்றால் வெறி நிகழாநின்றமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 |
247 |
அன்னை தந்தது ஆகுவது அறிவென்: |
|
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி, |
|
'முருகு' என மொழியும் ஆயின், |
|
அரு வரை நாடன் பெயர்கொலோ, அதுவே? |
|
வெறி விலக்கலுறும் தோழி தமர் கேட்பத் தலைமகளை வினவுவாளாய்ச் சொல்லியது. 7 |
248 |
பெய்ம்மணல் முற்றம் கவின் பெற இயற்றி, |
|
மலை வான் கொண்ட சினைஇய வேலன் |
|
கழங்கினான் அறிகுவது என்றால், |
|
நன்றால்அம்ம, நின்ற இவள் நலனே! |
|
'தலைமகள் வேறுபாடு கழங்கினால் தெரியும்' என்று வேலன் கூறியவழி, அதனைப் 'பொய்' என இகழ்ந்த தோழி வெறி விலக்கிச் செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8 |
249 |
பெய்ம்மணல் வரைப்பில் கழங்கு படுத்து, அன்னைக்கு, |
|
'முருகு' என மொழியும் வேலன்; மற்று அவன் |
|
வாழிய இலங்கும் அருவிச் |
|
சூர் மலை நாடனை அறியாதோனே! |
|
வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது. 9 |
250 |
பொய் படுபு அறியாக் கழங்கே! மெய்யே |
|
மணி வரைக் கட்சி மட மயில் ஆலும் நம் |
|
மலர்ந்த வள்ளிஅம் கானங் கிழவோன்; |
|
ஆண்தகை விறல் வேள் அல்லன் இவள் |
|
5 |
பூண் தாங்கு இளமுலை அணங்கியோனே. |
'தலைமகட்கு வந்த நோய் முருகனால் வந்தமை இக் கழங்கு கூறிற்று' என்று வேலன் சொன்னான் என்பது கேட்ட தோழி அக் கழங்கிற்கு உரைப்பாளாய், செவிலி கேட்குமாற்றால் அறத்தொடுநிலை குறித்துச் சொல்லியது. 10 |