281-290 |
281 |
வெள்ள வரம்பின் ஊழி போகியும் |
|
கிள்ளை வாழிய, பலவே ஒள் இழை |
|
இரும் பல் கூந்தல் கொடிச்சி |
|
பெருந் தோள் காவல் காட்டியவ்வே. |
|
ஆயத்தோடு விளையாட்டு விருப்பினால் பொழிலகம் புகுந்த தலைவியை எதிர்ப்பட்டு ஒழுகுகின்ற தலைமகன், அவள் புனங்காவற்கு உரியளாய் நின்றது கண்டு, மகிழ்ந்து சொல்லியது. 1 |
282 |
சாரல் புறத்த பெருங் குரல் சிறு தினைப் |
|
பேர் அமர் மழைக்கண் கொடிச்சி கடியவும் |
|
சோலைச் சிறு கிளி உன்னும் நாட! |
|
ஆர் இருள் பெருகின; வாரல் |
|
5 |
கோட்டு மா வழங்கும் காட்டக நெறியே. |
இரவுக்குறி நேர்ந்த தோழி தலைமகன் வந்து புணர்ந்து நீங்குழி, அவனை எதிர்ப்பட்டுச் சொல்லியது. 2 |
283 |
வன்கட் கானவன் மென் சொல் மட மகள் |
|
புன்புல மயக்கத்து உழுத ஏனல் |
|
பைம் புறச் சிறு கிளி கடியும் நாட! |
|
பெரிய கூறி நீப்பினும், |
|
5 |
பொய்வலைப் படூஉம் பெண்டு தவப் பலவே. |
தோழி வாயில் மறுக்கவும், தலைமகன் ஆற்றாமை கண்டு, தலைமகள் வாயில் நேர, அவன் பள்ளியிடத்தானாய் இருந்துழிப் புக்க தோழி கூறியது. 3 |
284 |
அளியதாமே, செவ் வாய்ப் பைங் கிளி |
|
குன்றக் குறவர் கொய் தினைப் பைங் கால் |
|
இருவி நீள்புனம் கண்டும். |
|
பிரிதல் தேற்றாப் பேர் அன்பினவே. |
|
தினை அரிந்துழி, கிளியை நோக்கிக் கூறுவாள் போல், சிறைப்புறமாக ஒம்படுத்தது. 4 |
285 |
பின் இருங் கூந்தல் நல் நுதல் குறமகள் |
|
மென் தினை நுவணை உண்டு, தட்டையின் |
|
ஐவனச் சிறு கிளி கடியும் நாட! |
|
வீங்குவளை நெகிழப் பிரிதல் |
|
5 |
யாங்கு வல்லுநையோ, ஈங்கு இவள் துறந்தே? |
ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 5 |
286 |
சிறு தினை கொய்த இருவி வெண் கால் |
|
காய்த்த அவரைப் படு கிளி கடியும் |
|
யாணர் ஆகிய நல் மலை நாடன் |
|
புகர் இன்று நயந்தனன் போலும்; |
|
5 |
கவரும் தோழி! என் மாமைக் கவினே. |
உடன்போக்குத் துணிந்த தலைமகன் அஃது ஒழிந்து, தானே வரைவிடை வைத்துப் பிரிய நினைந்ததனைக் குறிப்பினான் உணர்ந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகன், 'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்றவழித் தலைமகள் தோழிக்குச் சொல்ல |
287 |
நெடு வரை மிசையது குறுங் கால் வருடை |
|
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட! |
|
வல்லை மன்ற பொய்த்தல்; |
|
வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே. |
|
'இன்ன நாளில் வரைவல்' எனக் கூறி, அந்நாளில் வரையாது, பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது. 7 |
288 |
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து |
|
யாம் எவன் செய்குவம்? நெஞ்சே! காமர் |
|
மெல் இயல் கொடிச்சி காப்பப் |
|
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே. |
|
'கிளிகள் புனத்தின்கண் படியாநின்றன' என்று, தலைவியைக் காக்க ஏவியவழி, அதனை அறிந்த தலைமகன் உவந்து, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 8 |
289 |
'கொடிச்சி இன் குரல் கிளி செத்து, அடுக்கத்துப் |
|
பைங் குரல் ஏனல் படர்தரும் கிளி' எனக் |
|
காவலும் கடியுநர் போல்வர் |
|
மால் வரை நாட! வரைந்தனை கொண்மோ! |
|
இற்செறித்த பின்னர்த் தோழி வரைவு கடாவுழி, 'முதிர்ந்த தினைப்புனம் இவள் காத்தொழிந்தால் வரைவல்' என்றாற்கு அவள் சொல்லியது. 9 |
290 |
அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி |
|
சிறந்தன போலும், கிள்ளை பிறங்கிய |
|
பூக் கமழ் கூந்தல் கொடிச்சி |
|
நோக்கவும் படும்; அவள் ஓப்பவும் படுமே. |
|
காவல் மிகுதியான் இரவுக்குறி மறுக்கப்பட்டு நீங்கிய தலைமகன் வந்துழி, அவன் கேட்டு வெறுப்புத் தீர்த்தற் பொருட்டால், தினைப்புனம் காவல் தொடங்காநின்றாள் என்பது தோன்ற, தோழி கூறியது. 10 |