341-350 |
341 |
அவரோ வாரார்; தான் வந்தன்றே |
|
குயில் பெடை இன் குரல் அகவ, |
|
அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே! |
|
தலைமகன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைமகள் சொல்லியது. |
|
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும். |
342 |
அவரோ வாரார்; தான் வந்தன்றே |
|
சுரும்பு களித்து ஆலும் இருஞ் சினைக் |
|
கருங் கால் நுணவம் கமழும் பொழுதே! 2 |
343 |
அவரோ வாரார்; தான் வந்தன்றே |
|
திணி நிலைக் கோங்கம் பயந்த |
|
அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே! 3 |
344 |
அவரோ வாரார்; தான் வந்தன்றே |
|
நறும் பூங் குரவம் பயந்த |
|
செய்யாப் பாவை கொய்யும் பொழுதே! 4 |
345 |
அவரோ வாரார்; தான் வந்தன்றே |
|
புதுப் பூ அதிரல் தாஅய்க் |
|
கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே! 5 |
346 |
அவரோ வாரார்; தான் வந்தன்றே |
|
அம் சினைப் பாதிரி அலர்ந்தென, |
|
செங் கண் இருங் குயில் அறையும் பொழுதே! 6 |
347 |
அவரோ வாரார்; தான் வந்தன்றே |
|
எழில் தகை இள முலை பொலியப் |
|
பொரிப் பூம் புன்கின் முறி திமிர் பொழுதே! 7 |
348 |
அவரோ வாரார்; தான் வந்தன்றே |
|
வலம் சுரி மராஅம் வேய்ந்து, நம் |
|
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே! 8 |
349 |
அவரோ வாரார்; தான் வந்தன்றே |
|
பொரி கால் மாஞ் சினை புதைய |
|
எரி கால் இளந் தளிர் ஈனும் பொழுதே! 9 |
350 |
அவரோ வாரார்; தான் வந்தன்றே |
|
வேம்பின் ஒண் பூ உறைப்ப, |
|
தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே! 10 |