இது என் பாவைக்கு இனிய |
375 |
'இது என் பாவைக்கு இனிய நன் பாவை; |
|
இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி; |
|
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை' என்று, |
|
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் |
|
5 |
காண்தொறும் காண்தொறும் கலங்க, |
நீங்கினளோ என் பூங் கணோளே? |
|
சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு தலைமகள் தாய் சொல்லியது. 5 |