இது என் பாவைக்கு இனிய

375
'இது என் பாவைக்கு இனிய நன் பாவை;
இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி;
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை' என்று,
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல்
5
காண்தொறும் காண்தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங் கணோளே?

சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு தலைமகள் தாய் சொல்லியது. 5

உரை

Home
HOME