இருஞ் சாய் அன்ன |
18 |
இருஞ் சாய் அன்ன செருந்தியொடு வேழம் |
|
கரும்பின் அலமரும் கழனி ஊரன், |
|
பொருந்து மலர் அன்ன என் கண் அழ, |
|
பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே? |
|
பரத்தையிற் பிரிந்து வந்து தெளித்துக் கூடிய தலைமகற்குப் பின் அவ் ஓழுக்கம் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது. 8 |