தண் புனல் ஆடும் தடங் கோட்டு

98
தண் புனல் ஆடும் தடங் கோட்டு எருமை
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர!
ஒண் தொடி மட மகள் இவளினும்
நுந்தையும் ஞாயும் கடியரோ, நின்னே?

புறத்தொழுக்கம் உளது ஆகிய துணையானே புலந்து வாயில் நேராத தலைமகள் கொடுமை தலைமகன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது. 8

உரை

Home
HOME