தன் அமர் ஆயமொடு |
379 |
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின் |
|
இனிது ஆம்கொல்லோ தனக்கே பனி வரை |
|
இனக் களிறு வழங்கும் சோலை |
|
வயக்குறு வெள் வேலவற் புணர்ந்து செலவே? |
|
புணர்ந்து உடன்போகியவழி, தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட நற்றாய், 'அதனை முன்னே அறிவித்து, நாம் மணம் புணர்த்த ஒழுகாது போயினள்' என நொந்து சொல்லியது. 9 |