தாஅய் இழந்த தழு வரிக் |
268 |
தாஅய் இழந்த தழு வரிக் குருளையொடு |
|
வள மலைச் சிறு தினை உணீஇ, கானவர் |
|
வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும் |
|
நல் மலை நாடன் பிரிதல் |
|
5 |
என் பயக்குமோ நம் விட்டுத் துறந்தே? |
'அவன் குறிப்பு இருந்தவாற்றால் நம்மைப் பிரிந்து வந்தல்லது வரைய மாட்டான் போன்று இருந்தது' எனத் தலைமகள் கூறக்கேட்ட தோழி, அவட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 8 |