பனை (பெண்ணை) |
114 |
அம்ம வாழி, தோழி! கொண்கன் |
|
நேரேம் ஆயினும், செல்குவம் கொல்லோ |
|
கடலின் நாரை இரற்றும் |
|
மடல்அம் பெண்ணை அவனுடை நாட்டே? |
|
இடைவிட்டு ஒழுகும் தலைமகன் வந்து சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 4 |