முகப்பு | தொடக்கம் |
திருமால் |
1. திருமால் |
| |
ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை | |
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர, | |
மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி, | |
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய, | |
5 |
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; |
எரிமலர் சினைஇய கண்ணை; பூவை | |
விரிமலர் புரையும் மேனியை; மேனித் | |
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில் | |
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை | |
10 |
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை- |
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும் | |
ஏவல் உழந்தமை கூறும், | |
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே. | |
| |
இணைபிரி அணி துணி பணி எரி புரைய | |
15 |
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் |
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு | |
கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி | |
நெறி செறி வெறி உறு முரல் விறல் வணங்கு அணங்கு வில் | |
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின் | |
20 |
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் |
றுணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு | |
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர் | |
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி | |
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை | |
25 |
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் |
பொரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர் | |
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம் | |
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை. | |
| |
'பொருவேம்' என்றவர் மதம் தபக் கடந்து, | |
30 |
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! |
இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்! | |
தெருள நின் வரவு அறிதல் | |
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே; | |
அன்ன மரபின் அனையோய்! நின்னை | |
35 |
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? |
அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின் | |
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை | |
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம் | |
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும். | |
| |
40 |
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் |
அறனும், ஆர்வலர்க்கு அருளும், நீ; | |
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை | |
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ; | |
அம் கண் வானத்து அணி நிலாத் திகழ்தரும் | |
45 |
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; |
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல் | |
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ; | |
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப் | |
புலமும், பூவனும், நாற்றமும், நீ; | |
50 |
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், |
நிலனும், நீடிய இமயமும், நீ. | |
அதனால், | |
'இன்னோர் அனையை; இனையையால்' என, | |
அன்னோர் யாம் இவண் காணாமையின், | |
55 |
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய |
மன்னிய முதல்வனை ஆதலின், | |
நின்னோர் அனையை, நின் புகழொடும் பொலிந்தே! | |
நின் ஒக்கும் புகழ் நிழலவை; | |
பொன் ஒக்கும் உடையவை; | |
60 |
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; |
எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை; | |
மண்ணுறு மணி பாய் உருவினவை; | |
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை. | |
ஆங்கு, | |
65 |
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை |
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என, | |
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்- | |
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே. |
|
2. திருமால்
|
| |
தொல் முறை இயற்கையின் மதியொ | |
. ... ... ... ... ... ... ... மரபிற்று ஆக, | |
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட, | |
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல, | |
5 |
கரு வளர் வானத்து இசையின் தோன்றி, |
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; | |
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்; | |
செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு | |
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று | |
10 |
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, |
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் | |
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்; | |
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும், | |
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய | |
15 |
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை |
| |
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய | |
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு | |
ஊழி யாவரும் உணரா; | |
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது. | |
| |
20 |
நீயே, 'வளையொடு புரையும் வாலியோற்கு அவன் |
இளையன்' என்போர்க்கு இளையை ஆதலும், | |
'புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு | |
முதியை' என்போர்க்கு முதுமை தோன்றலும், | |
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த | |
25 |
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், |
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை | |
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச் சிறப்பே. | |
| |
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும் | |
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில | |
30 |
நித்தில மதாணி அத்தகு மதி மறுச் |
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் | |
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண் | |
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு, | |
'புள்ளி நிலனும் புரைபடல் அரிது' என, | |
35 |
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று. |
| |
ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து, | |
இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர் | |
கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு, | |
முடிகள் அதிர, படிநிலை தளர, | |
40 |
நனி முரல் வளை: முடி அழிபு, இழிபு, |
தலை இறுபு தாரொடு புரள | |
நிலை தொலைபு, வேர், தூர், மடல், | |
குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப் | |
பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல் | |
45 |
நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி, |
ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு, | |
அளறு சொரிபு, நிலம் சோர, | |
சேரார் இன் உயிர் செகுக்கும் | |
போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே: | |
50 |
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே; |
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே. | |
| |
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி; | |
கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்; | |
வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த | |
55 |
நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், |
சாயல் நினது, வான் நிறை என்னும் | |
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே: | |
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும் | |
எவ் வயினோயும் நீயே. | |
| |
60 |
செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே! |
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும், | |
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும், | |
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித் | |
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும், | |
65 |
நின் உருபுடன் உண்டி; |
பிறர் உடம்படுவாரா | |
நின்னொடு புரைய | |
அந்தணர் காணும் வரவு. | |
| |
வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர, | |
70 |
மூவா மரபும் ஓவா நோன்மையும் |
சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின் | |
... ... ... .. .... .... ... ... மரபினோய் நின் அடி | |
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்; | |
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம், | |
75 |
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும் |
'கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!' எனவே. |
|
3. திருமால் |
| |
மாஅயோயே! மாஅயோயே! | |
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி | |
மணி திகழ் உருபின் மாஅயோயே! | |
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும், | |
5 |
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், |
திதியின் சிறாரும், விதியின் மக்களும், | |
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும், | |
தா மா இருவரும், தருமனும், மடங்கலும், | |
மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும், | |
10 |
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் |
மாயா வாய்மொழி உரைதர வலந்து: | |
'வாய்மொழி ஓடை மலர்ந்த | |
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும், | |
நீ' என மொழியுமால், அந்தணர் அரு மறை. | |
| |
15 |
'ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், |
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை; | |
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின் | |
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின் | |
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள் | |
20 |
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; |
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும், | |
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம் | |
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு | |
கேழலாய் மருப்பின் உழுதோய்' எனவும், | |
25 |
'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் |
சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும், | |
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து | |
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர் | |
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப் | |
30 |
பாடுவார் பாடும் வகை. |
| |
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் | |
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை; | |
நகை அச்சாக நல் அமிர்து கலந்த | |
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை. | |
35 |
இரு கை மாஅல்! |
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்! | |
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்! | |
எழு கையாள! எண் கை ஏந்தல்! | |
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள! | |
40 |
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! |
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! | |
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! | |
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! | |
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் | |
45 |
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! |
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ, | |
முன்னை மரபின் முதுமொழி முதல்வ? | |
| |
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், | |
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம் | |
50 |
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! |
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர், | |
பிறை வளர், நிறை மதி உண்டி, | |
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ; | |
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி, | |
55 |
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் |
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ; | |
அதனால், 'பகைவர் இவர்; இவர் நட்டோர்' என்னும் | |
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே? | |
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட | |
60 |
சேவல் ஊர்தியும், 'செங் கண் மாஅல்! |
ஓ! 'எனக் கிளக்கும் கால முதல்வனை; | |
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்: | |
| |
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ; | |
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ; | |
65 |
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; |
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; | |
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ; | |
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், | |
உறைவும் உறைவதும் இலையே; உண்மையும் | |
70 |
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; |
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில் | |
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே: | |
| |
பறவாப் பூவைப் பூவினோயே! | |
அருள் குடையாக, அறம் கோலாக, | |
75 |
இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமும் |
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ; | |
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என, | |
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என, | |
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என, | |
80 |
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை: |
| |
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை! | |
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்! | |
| |
இட வல! குட வல! கோவல! காவல! | |
காணா மரப! நீயா நினைவ! | |
85 |
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! |
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண! | |
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட! | |
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண! | |
பருதி வலவ! பொரு திறல் மல்ல! | |
90 |
திருவின் கணவ! பெரு விறல் மள்ள! |
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து, | |
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய | |
வாய்மொழி மகனொடு மலர்ந்த | |
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! |
|
4. திருமால் |
| |
ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்து, தம் | |
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி, | |
நின் புகழ் விரித்தனர்: கிளக்குங்கால், அவை நினக்கு | |
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம்ஆயினும், | |
5 |
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப: |
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர், | |
வரு மழை இருஞ் சூல் மூன்றும் புரையும் மா மெய்; | |
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை; | |
நோனார் உயிரொடு முரணிய நேமியை: | |
| |
10 |
செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ |
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின் | |
பிருங்கலாதன் பலபல பிணி பட | |
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து | |
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின் | |
15 |
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா |
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி, | |
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின் | |
படிமதம் சாம்ப ஒதுங்கி, | |
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப, | |
20 |
வெடி படா ஒடி தூண் தடியொடு, |
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை; | |
புருவத்துக் கரு வல் கந்தத்தால் | |
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண் | |
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்: | |
| |
25 |
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; |
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள; | |
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள; | |
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள; | |
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள; | |
30 |
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; |
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள; | |
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள; | |
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும், | |
ஏமம் ஆர்ந்த நிற் பிரிந்து, | |
35 |
மேவல் சான்றன, எல்லாம். |
| |
சேவல் ஓங்கு உயர் கொடியோயே! | |
சேவல் ஓங்கு உயர் கொடி | |
நின் ஒன்று உயர் கொடி பனை; | |
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்; | |
40 |
நின் ஒன்று உயர் கொடி யானை; |
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று: | |
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்; | |
அவன் முடிமேல் வலந்தது பாம்பு; | |
பாம்பு தொடி; பாம்பு முடிமேலன; | |
45 |
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; |
பாம்பு சிறை தலையன; | |
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை | |
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு; | |
| |
கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும், | |
50 |
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் |
உள்வழி உடையை; இல்வழி இலையே: | |
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும், | |
மாற்று ஏமாற்றல் இலையே: 'நினக்கு | |
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்' எனும் | |
55 |
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: |
| |
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே; | |
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி, | |
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை: | |
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப! | |
60 |
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை |
அன்ன நாட்டத்து அளப்பரியவை; | |
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை; | |
நின்னில் சிறந்த நிறை கடவுளவை; | |
அன்னோர் அல்லா வேறும் உள: அவை | |
65 |
நின்ஓர் அன்ஓர் அந்தணர் அரு மறை. |
| |
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை | |
ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும், | |
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும், | |
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்! | |
70 |
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் |
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே; | |
அவரவர் ஏவலாளனும் நீயே; | |
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. |
|
13. திருமால் |
| |
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று | |
அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி, | |
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின் | |
நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி, | |
5 |
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத் |
தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்! | |
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த | |
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல, | |
நேமியும் வளையும் ஏந்திய கையான் | |
10 |
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண், |
அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின் | |
திரு வரை அகலம் தொழுவோர்க்கு | |
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து. | |
| |
சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு, | |
15 |
அவையும் நீயே, அடு போர் அண்ணால்! |
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே; | |
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும், | |
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே; | |
இரண்டின் உணரும் வளியும் நீயே; | |
20 |
மூன்றின் உணரும் தீயும் நீயே; |
நான்கின் உணரும் நீரும் நீயே; | |
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே: | |
அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும், | |
மூலமும், அறனும், முதன்மையின் இகந்த | |
25 |
காலமும், விசும்பும், காற்றொடு கனலும். |
| |
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண், | |
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த | |
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத் | |
துளவம் சூடிய அறிதுயிலோனும் | |
30 |
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால், |
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும் | |
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின், | |
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும் | |
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய | |
35 |
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி |
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி, | |
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை! | |
| |
படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக் | |
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை; | |
40 |
ஏவல் இன் முது மொழி கூறும், |
சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை; | |
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி, | |
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை; | |
வலம்புரி, வாய்மொழி, அதிர்பு வான், முழக்குச் செல், | |
45 |
அவை நான்கும் உறழும் அருள், செறல், வயின் மொழி: |
முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும் அவை மூன்றும் | |
கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை; | |
இருமை வினையும் இல, ஏத்துமவை: | |
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை; | |
50 |
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை |
அடியும், கையும், கண்ணும், வாயும்: | |
தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும், | |
தாளும், தோளும், எருத்தொடு, பெரியை; | |
மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை; | |
55 |
கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை; |
வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை; | |
அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண், | |
செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர் | |
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப் | |
60 |
புரி மலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்! |
அன்னை என நினைஇ, நின் அடி தொழுதனெம்; | |
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் | |
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்: | |
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே! |
|
15. திருமால் |
| |
புல வரை அறியாப் புகழொடு பொலிந்து, | |
நில வரை தாங்கிய நிலைமையின் பெயராத் | |
தொலையா நேமி முதல், தொல் இசை அமையும் | |
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம் | |
5 |
பல எனின், ஆங்கு அவை பலவே: பலவினும், |
நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன் | |
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே: | |
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும் | |
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய | |
10 |
குல வரை சிலவே: குல வரை சிலவினும் |
சிறந்தது கல் அறை கடலும் கானலும் போலவும், | |
புல்லிய சொல்லும் பொருளும் போலவும், | |
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த் | |
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம். | |
15 |
நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை |
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்? | |
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் | |
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப. | |
| |
அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின் | |
20 |
மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி, |
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய, | |
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின் | |
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம் | |
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும் | |
25 |
நாமத் தன்மை நன்கனம் படி எழ, |
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து, | |
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென, | |
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே | |
நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்! | |
| |
30 |
சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ் |
சினை யெலாம் செயலை மலர, காய் கனி | |
உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர, | |
மாயோன் ஒத்த இன் நிலைத்தே. | |
| |
35 |
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே |
பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது | |
கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள். | |
| |
மக முயங்கு மந்தி வரைவரை பாய, | |
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட, | |
40 |
மணி மருள் நல் நீர்ச் சினை மட மயில் அகவ, |
குருகு இலை உதிர, குயிலினம் கூவ, | |
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர் | |
நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன, | |
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார்க் | |
45 |
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று. |
| |
தையலவரொடும், தந்தாரவரொடும், | |
கைம் மகவொடும், காதலவரொடும், | |
தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின் | |
புவ்வத் தாமரை புரையும் கண்ணன், | |
50 |
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன், |
எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின் | |
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன் | |
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான். | |
| |
கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை; | |
55 |
ஒள் ஒளியவை, ஒரு குழையவை; |
புள் அணி பொலங் கொடியவை; | |
வள் அணி வளை நாஞ்சிலவை, | |
சலம் புரி தண்டு ஏந்தினவை; | |
வலம்புரி வய நேமியவை; | |
60 |
வரி சிலை வய அம்பினவை; |
புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை: | |
என ஆங்கு | |
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி | |
இது என உரைத்த[லி]ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை, | |
65 |
'இருங்குன்றத்து அடி உறை இயைக!' என, |
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே. |
|
தி 1. திருமால் |
உரை |
| |
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த, | |
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து, | |
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா | |
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய | |
5 |
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் |
திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது. | |
| |
ஒருசார்-அணி மலர் வேங்கை, மராஅ,
மகிழம், | |
பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி, | |
மணி நிறம் கொண்ட மலை. | |
10 |
ஒருசார்-தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை |
வண்ண வரி இதழ்ப் போதின்வாய் வண்டு ஆர்ப்ப, | |
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின் | |
கண் வீற்றிருக்கும் கயம். | |
ஒருசார்-சாறுகொள் ஓதத்து இசையொடு மாறு உற்று | |
15 |
உழவின் ஓதை பயின்று, அறிவு இழந்து |
திரிநரும், ஆர்த்து நடுநரும், ஈண்டி, | |
திரு நயத்தக்க வயல். | |
| |
ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி, | |
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித் | |
20 |
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி, |
அறத்தின் திரியா, பதி. | |
| |
ஆங்கு ஒருசார்-உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை, | |
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல, | |
பண்ணியம், மாசு அறு பயம் தரு காருகப் | |
25 |
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார்: |
விளைவதை வினை எவன் மென் புல வன் புலக் | |
களமர் உழவர் கடி மறுகு பிறசார்: | |
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம் | |
இயல் கொள நண்ணியவை. | |
| |
30 |
வண்டு பொரேரென எழ, |
வண்டு பொரேரென எழும்; | |
கடிப் புகு வேரிக் கதவமிற் றோட்டி, | |
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர- | |
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார் | |
35 |
ஊர் களிற்றன்ன செம்மலோரும், |
வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து | |
ஒளி இழை ஒதுங்கிய ஒண் நுதலோரும், | |
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும், | |
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும், | |
40 |
விடையோடு இகலிய விறல் நடையோரும், |
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும், | |
கடல் நிரை திரையின் கரு நரையோரும், | |
சுடர் மதிக் கதிரெனத் தூ நரையோரும்- | |
மடையர், குடையர், புகையர், பூ ஏந்தி, | |
45 |
இடை ஒழிவு இன்றி, அடியுறையார் ஈண்டி, |
விளைந்தார் வினையின் விழுப் பயன் துய்க்கும் | |
துளங்கா விழுச் சீர்த் துறக்கம் புரையும்- | |
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் | |
வரை கெழு செல்வன் நகர். | |
| |
50 |
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, |
விண்ட கட கரி மேகமொடு அதிர, | |
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப, | |
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப் | |
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற, | |
55 |
சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய, |
சூடா நறவொடு காமம் விரும்ப, | |
இனைய பிறவும், இவை போல்வனவும், | |
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப் | |
பூ முடி நாகர் நகர். | |
| |
60 |
மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி |
அவிர் நிமிர் புகழ் கூந்தல், | |
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி | |
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண், வாணுதலோர்- | |
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது | |
65 |
இகழ் கடுங் கடாக் களிற்று அண்ணலவரோடு, |
அணி மிக வந்து இறைஞ்ச, அல் இகப்ப, பிணி நீங்க, | |
நல்லவை எல்லாம் இயைதரும்-தொல் சீர் | |
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக் | |
குளவாய் அமர்ந்தான் நகர். | |
| |
70 |
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக் கால், வெற்புத் |
திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி, | |
மகர மறி கடல் வைத்து நிறுத்து, | |
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும் | |
அமுது கடைய, இரு வயின் நாண் ஆகி, | |
75 |
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க, |
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் | |
அறாஅது அணிந்தாரும் தாம்; | |
மிகாஅ மறலிய மே வலி எல்லாம் | |
புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்; | |
80 |
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் |
அணிபோல் பொறுத்தாரும் தாஅம்; பணிவு இல் சீர்ச் | |
செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி, | |
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித் | |
தொல் புகழ் தந்தாரும் தாம். | |
| |
85 |
அணங்குடை அருந் தலை ஆயிரம் விரித்த |
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி, | |
நல் அடி ஏத்தி நிற் பரவுதும்- | |
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே. | |
|
இப்பாடல், தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 121, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது. |