இரு நிலம் துளங்காமை |
9. செவ்வேள் |
| |
இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி, |
|
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும், |
|
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட |
|
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி |
|
5 |
விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப, |
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி |
|
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ. |
|
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறிதோள் மணந்த ஞான்று |
|
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண், |
|
10 |
மணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று, |
தணி மழை தலையின்று, தண் பரங்குன்று. |
|
| |
நான்மறை விரித்து, நல் இசை விளக்கும் |
|
வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது: |
|
காதற் காமம், காமத்துச் சிறந்தது; |
|
15 |
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி: |
புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான் |
|
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப் |
|
பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல், |
|
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற |
|
20 |
நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே; |
கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை; |
|
சுணங்கறைப் பயனும் ஊடல் உள்ளதுவே. |
|
அதனால், அகறல் அறியா அணி இழை நல்லார் |
|
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத் |
|
25 |
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் |
கொள்ளார், இக் குன்று பயன். |
|
| |
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல் தந்த |
|
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின், |
|
கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ, |
|
30 |
'வாழிய, மாயா! நின் தவறு இலை; எம் போலும் |
கேழ் இலார் மாண் நலம் உண்கோ, திரு உடையார் |
|
மென் தோள்மேல் அல்கி நல்கலும் இன்று? |
|
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப் |
|
பெய்ய உழக்கும், மழைக் கா; மற்று ஐய!' |
|
35 |
கரையா வெந் நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின் |
இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி |
|
திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை, |
|
'வருந்தல்' என, அவற்கு மார்பு அளிப்பாளை, |
|
'குறுகல்' என்று ஒள்ளிழை கோதை கோலாக |
|
40 |
இறுகிறுக யாத்துப் புடைப்ப; |
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல, |
|
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை, |
|
செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே, |
|
வெறி கொண்டான் குன்றத்து வண்டு. |
|
| |
45 |
தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்; |
மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்; |
|
கோதை வரிப் பந்து கொண்டு எறிவார் |
|
பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத |
|
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள: |
|
50 |
கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்; |
வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்; |
|
தேர் அணி மணி கயிறு தெரிபு வருவார்; |
|
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்; |
|
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்; |
|
55 |
தோள் வளை ஆழி சுழற்றுவார் |
மென் சீர் மயில் இயலவர். |
|
வாள் மிகு வய மொய்ம்பின் |
|
வரை அகலத்தவனை வானவன் மகள் |
|
மாண் எழில் மலர் உண்கண் |
|
60 |
மட மொழியவர் உடன் சுற்றி, |
கடி சுனையுள் குளித்து ஆடுநரும், |
|
அறை அணிந்த அருஞ் சுனையான் |
|
நறவு உண் வண்டாய் நரம்பு உளர்நரும், |
|
சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்; |
|
65 |
கோகுலமாய்க் கூவுநரும், |
ஆகுலம் ஆகுநரும் |
|
குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் |
|
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு |
|
ஒத்தன்று, தண் பரங்குன்று. |
|
| |
70 |
கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் |
அடும் போராள! நின் குன்றின்மிசை |
|
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும், |
|
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும், |
|
வல்லாரை வல்லார் செறுப்பவும், |
|
75 |
அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய், |
செம்மைப் புதுப் புனல் |
|
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர், |
|
படாகை நின்றன்று; |
|
மேஎ எஃகினவை; |
|
80 |
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை; |
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை |
|
நயத் தகு மரபின் வியத் தகு குமர! |
|
வாழ்த்தினேம், பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம் |
|
நயத்தலின் சிறந்த எம் அடியுறை, |
|
85 |
பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே. |
|