ஐந்து இருள் அற |
4. திருமால் |
| |
ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்து, தம் |
|
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி, |
|
நின் புகழ் விரித்தனர்: கிளக்குங்கால், அவை நினக்கு |
|
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம்ஆயினும், |
|
5 |
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப: |
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர், |
|
வரு மழை இருஞ் சூல் மூன்றும் புரையும் மா மெய்; |
|
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை; |
|
நோனார் உயிரொடு முரணிய நேமியை: |
|
| |
10 |
செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ |
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின் |
|
பிருங்கலாதன் பலபல பிணி பட |
|
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து |
|
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின் |
|
15 |
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா |
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி, |
|
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின் |
|
படிமதம் சாம்ப ஒதுங்கி, |
|
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப, |
|
20 |
வெடி படா ஒடி தூண் தடியொடு, |
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை; |
|
புருவத்துக் கரு வல் கந்தத்தால் |
|
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண் |
|
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்: |
|
| |
25 |
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; |
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள; |
|
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள; |
|
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள; |
|
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள; |
|
30 |
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; |
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள; |
|
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள; |
|
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும், |
|
ஏமம் ஆர்ந்த நிற் பிரிந்து, |
|
35 |
மேவல் சான்றன, எல்லாம். |
| |
சேவல் ஓங்கு உயர் கொடியோயே! |
|
சேவல் ஓங்கு உயர் கொடி |
|
நின் ஒன்று உயர் கொடி பனை; |
|
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்; |
|
40 |
நின் ஒன்று உயர் கொடி யானை; |
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று: |
|
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்; |
|
அவன் முடிமேல் வலந்தது பாம்பு; |
|
பாம்பு தொடி; பாம்பு முடிமேலன; |
|
45 |
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; |
பாம்பு சிறை தலையன; |
|
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை |
|
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு; |
|
| |
கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும், |
|
50 |
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் |
உள்வழி உடையை; இல்வழி இலையே: |
|
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும், |
|
மாற்று ஏமாற்றல் இலையே: 'நினக்கு |
|
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்' எனும் |
|
55 |
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: |
| |
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே; |
|
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி, |
|
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை: |
|
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப! |
|
60 |
|
அன்ன நாட்டத்து அளப்பரியவை; |
|
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை; |
|
நின்னில் சிறந்த நிறை கடவுளவை; |
|
அன்னோர் அல்லா வேறும் உள: அவை |
|
65 |
நின்ஓர் அன்ஓர் அந்தணர் அரு மறை. |
| |
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை |
|
ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும், |
|
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும், |
|
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்! |
|
70 |
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் |
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே; |
|
அவரவர் ஏவலாளனும் நீயே; |
|
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. |
|