கடல் குறைபடுத்த நீர் |
20. வையை |
| |
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து, |
|
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை |
|
முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர் முகில் |
|
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக் |
|
5 |
குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று. |
காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி |
|
மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான் |
|
வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம் |
|
தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால |
|
10 |
கான் ஆற்றும் கார் நாற்றம்,கொம்பு உதிர்த்த கனி நாற்றம்; |
தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை. |
|
| |
தன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று |
|
வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப, |
|
ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று: உயர் மதிலில் |
|
15 |
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ, |
திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும், |
|
வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும், |
|
வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும், |
|
கயமாப் பேணிக் கலவாது ஊரவும், |
|
20 |
மகளிர் கோதை மைந்தர் புனையவும், |
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும், |
|
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர், |
|
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் |
|
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி, |
|
25 |
மாட மறுகின் மருவி மறுகுற, |
கூடல் விழையும் தகைத்து தகை வையை. |
|
| |
புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார், |
|
தகை வகை தைஇயினார் தார்; |
|
வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச் |
|
30 |
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் |
இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின் |
|
அயல் அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர் |
|
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக, |
|
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு, |
|
35 |
நொந்து, 'அவள் மாற்றாள் இவள்' என நோக்க, |
| |
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்; |
|
செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன |
|
நேர் இதழ் உண்கணார் நிரை காடாக, |
|
ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின். |
|
| |
40 |
என ஆங்கு, |
ஒய்யப் போவாளை, 'உறழ்ந்தோள் இவ் வாணுதல்' |
|
வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய |
|
நெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று, |
|
'செறி நிரைப் பெண்' வல் உறழ்பு 'யாது தொடர்பு?' என்ன |
|
45 |
மறலினாள், மாற்றாள் மகள். |
| |
வாய் வாளா நின்றாள், |
|
செறிநகை சித்தம் திகைத்து. |
|
| |
ஆயத்து ஒருத்தி, அவளை, 'அமர் காமம் |
|
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை! |
|
50 |
பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத் |
துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி! |
|
முற்றா நறு நறா மொய் புனல் அட்டி, |
|
காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில், |
|
மூரி தவிர முடுக்கு முது சாடி! |
|
55 |
மட மதர் உண்கண் கயிறாக வைத்துத் |
தட மென் தோள் தொட்டு, தகைத்து மட விரலால் |
|
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத் |
|
தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப் |
|
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ் |
|
60 |
வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து, |
மத்திகை மாலையா மோதி, அவையத்துத் |
|
தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட |
|
விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து, யாம். |
|
தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும், |
|
65 |
நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?' என்னாமுன் |
| |
தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு |
|
ஊடினார், வையையகத்து. |
|
'சிந்திக்கத் தீரும் பிணியாட் செறேற்க; |
|
மைந்து உற்றாய், வெஞ் சொல்; மட மயிற் சாயலை |
|
70 |
வந்திக்க வார்' என |
| |
'மனத் தக்க நோய் இது; |
|
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு; |
|
போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று, |
|
மாற்றாளை மாற்றாள் வரவு.' |
|
| |
75 |
'அ...சொல் நல்லவை நாணாமல் |
தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா; |
|
எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண் |
|
வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல், |
|
தந்தானைத் தந்தே, தருக்கு.' |
|
| |
80 |
மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின் |
கால சிலம்பும் கழற்றுவான்; சால, |
|
அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்; |
|
கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.' |
|
என ஆங்கு |
|
| |
85 |
வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு |
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே. |
|
| |
சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால் |
|
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா; |
|
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் |
|
90 |
இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்; |
நிகழ்வது அறியாது நில்லு நீ, நல்லாய்! |
|
'மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர் |
|
அகலம் கடிகுவேம்; என்பவை யார்க்கானும் |
|
முடி பொருள் அன்று முனியல் முனியல்! |
|
95 |
கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!' |
| |
என ஆங்கு |
|
இன்ன துனியும் புலவியும் ஏற்பிக்கும், |
|
தென்னவன் வையைச் சிறப்பு. |
|
கொடி இயலார் கைபோல் குவிந்த முகை, |
|
100 |
அரவு உடன்றவைபோல் விரிந்த குலை, |
குடை விரிந்தவை போலக் கோலும் மலர், |
|
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர், |
|
சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும், |
|
அருவி சொரிந்த திரையின் துரந்து; |
|
105 |
நெடு மால் சுருங்கை நடு வழிப் போந்து |
கடு மா களிறு அணத்துக் கை விடு நீர் போலும் |
|
நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல் |
|
கடி மதில் பெய்யும் பொழுது. |
|
| |
நாம் அமர் ஊடலும் நட்பும், தணப்பும், |
|
110 |
காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட, |
தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல் |
|
பூ மலி வையைக்கு இயல்பு. |
|