கரையே கைவண் தோன்றல் |
16. வையை |
| |
கரையே கை வண் தோன்றல் ஈகை போன்ம் என, |
|
மை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும், |
|
நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும், |
|
எவ் வயினானும் மீதுமீது அழியும். |
|
5 |
துறையே முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம், |
பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி |
|
வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர் |
|
கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ, |
|
தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும் |
|
10 |
தத்து அரிக் கண்ணார் தலைதலை வருமே. |
செறுவே விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின், |
|
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும், |
|
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும். |
|
காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம் |
|
15 |
நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே |
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல். |
|
கான் அல்அம் காவும், கயமும், துருத்தியும், தேன் |
|
தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம் |
|
பூத்தன்று வையை வரவு. |
|
| |
20 |
சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து, |
குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள், |
|
பெருந் தகை மீளி வருவானைக் கண்டே, |
|
இருந் துகில் தானையின் ஒற்றி, 'பொருந்தலை; |
|
பூத்தனள்; நீங்கு' எனப் பொய் ஆற்றால், தோழியர் |
|
25 |
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் |
நாற்றத்தின் போற்றி, நகையொடும் போத்தந்து, |
|
இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான், |
|
மகிழ, களிப் பட்ட தேன் தேறல் மாற்றி, |
|
குருதி துடையாக் குறுகி, மரு(வ), இனியர், |
|
30 |
'பூத்தனள் நங்கை; பொலிக!' என நாணுதல் |
வாய்த்தன்றால் வையை வரவு. |
|
| |
மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க் |
|
கரை மரம் சேர்ந்து கவினி; மடவார் |
|
நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர் |
|
35 |
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தாஅய்; |
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய |
|
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும், |
|
தேன் இமிர் வையைக்கு இயல்பு. |
|
| |
கள்ளே புனலே புலவி இம் மூன்றினும், |
|
40 |
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை, |
பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும், |
|
செல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர் |
|
அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்து |
|
வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான், |
|
45 |
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத் |
தொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம் |
|
கொடித் தேரான் வையைக்கு இயல்பு. |
|
| |
வரை ஆர்க்கும் புயல்; கரை |
|
திரை ஆர்க்கும், இத் தீம் புனல்; |
|
50 |
கண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர், |
பண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால் |
|
நாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும், |
|
பூத்த புகையும், அவியும் புலராமை |
|
மறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம் |
|
55 |
வறாஅற்க, வையை! நினக்கு. |
|