கார் மலி கதழ்பெயல் |
14. செவ்வேள் |
முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல் | |
கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற |
|
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே; |
|
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும் |
|
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே; |
|
5 |
அடியுறைமகளிர் ஆடும் தோளே, |
நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே; |
|
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய |
|
தோகை ஆர் குரல், மணந்து தணந்தோரை, |
|
'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே; |
|
10 |
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன; |
மெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின, |
|
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப; |
|
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள் |
|
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும், |
|
15 |
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் |
பவழத்து அன்ன செம் பூத் தாஅய், |
|
கார் மலிந்தன்று, நின் குன்று. |
|
முருகனைப் புகழ்ந்து போற்றுதல் | |
போர் மலிந்து, |
|
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே! |
|
20 |
கறை இல் கார் மழை பொங்கி அன்ன |
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே! |
|
அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி |
|
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே! |
|
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை |
|
25 |
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே! |
பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச் |
|
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே! |
|
இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து, |
|
ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே! |
|
விண்ணப்பம் | |
30 |
அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை, |
துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம் |
|
இன்னும் இன்னும் அவை ஆகுக |
|
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே! |
பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப் பரவுவாளாய், 'இப் பருவத்தே தலைமகன் வரும்' என்பதுபடத் தோழி வற்புறுத்தியது. கேசவனார் பாட்டு இசையும் அவர் பண் நோதிறம் |