திரை யிரும் பனிப்பௌவம் |
7. வையை |
| |
திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து, |
|
உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது, |
|
கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு, |
|
வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி |
|
5 |
இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது, |
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய |
|
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன |
|
பெயலாற் பொலிந்து, பெரும் புனல் பல நந்த, |
|
நலன் நந்த, நாடு அணி நந்த, புலன் நந்த, |
|
10 |
வந்தன்று, வையைப் புனல். |
| |
நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய், |
|
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு, |
|
துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும் |
|
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு, |
|
15 |
உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி; |
உழவர் களி தூங்க, முழவு பணை முரல, |
|
ஆடல் அறியா அரிவை போலவும், |
|
ஊடல் அறியா உவகையள் போலவும், |
|
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது; |
|
20 |
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப் |
பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம் |
|
செய்கின்றே, செம் பூம் புனல். |
|
| |
'கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர் |
|
அவிழ்ந்த மலர் மீதுற்றென', ஒருசார்; |
|
25 |
மாதர் மடநல்லார், மணலின் எழுதிய |
பாவை சிதைத்தது' என அழ, ஒருசார்; |
|
'அகவயல் இள நெல் அரிகால் சூடு |
|
தொகு புனல் பரந்தெ'னத் துடி பட, ஒருசார்; |
|
'ஓதம் சுற்றியது ஊர்' என, ஒருசார்; |
|
30 |
'கார் தூம்பு அற்றது வான்' என, ஒருசார்; |
'பாடுவார் பாக்கம் கொண்டென, |
|
ஆடுவார் சேரி அடைந்தென, |
|
கழனி வந்து கால் கோத்தென, |
|
பழன வாளை பாளை உண்டென, |
|
35 |
வித்து இடு புலம் மேடு ஆயிற்றென', |
உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப் |
|
புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து, |
|
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ, |
|
பழன உழவர், பாய் புனல் பரத்தந்து. |
|
| |
40 |
இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து, |
வரை புரை உருவின் நுரை பல சுமந்து, |
|
பூ வேய்ந்து, பொழில் பரந்து; |
|
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர், |
|
அலர் தண் தாரவர், காதில் |
|
45 |
தளிர் செரீஇ, கண்ணி பறித்து; |
கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில், |
|
மேகலை, காஞ்சி, வாகுவலயம், |
|
எல்லாம் கவரும் இயல்பிற்றாய்: தென்னவன் |
|
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட |
|
50 |
தானையான் வையை வனப்பு. |
| |
புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள் |
|
துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள் |
|
அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி, |
|
கை புதைஇய வளை |
|
55 |
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் |
போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்பு |
|
பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்; |
|
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் |
|
செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே; |
|
60 |
வையைப் பெருக்கு வடிவு. |
| |
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர, |
|
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்; |
|
பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே, |
|
கூர் நறா ஆர்ந்தவள் கண். |
|
65 |
கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப் |
பாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப் |
|
பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை, |
|
'என்னை வருவது எனக்கு?' என்று, இனையா, |
|
நன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி; |
|
70 |
சிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர, |
வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர்தம்முள் |
|
பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு, |
|
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன் |
|
சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து, |
|
75 |
தீர்விலதாகச் செருவுற்றாள் செம் புனல் |
ஊருடன் ஆடுங்கடை. |
|
| |
புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும் |
|
எழூஉப் புணர் யாழும், இசையும், கூட; |
|
குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப; |
|
80 |
மன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க; |
பொருது இழி வார் புனல் பொற்பு அஃது |
|
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் |
|
திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார் |
|
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை! |
|
85 |
நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க |
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே. |
|