தேம் படு மலர் |
17. செவ்வேள் |
| |
தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி, |
|
ஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ, |
|
விடை அரை அசைத்த, வேலன், கடிமரம் |
|
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர், |
|
5 |
விரிமலர் மதுவின் மரம் நனை குன்றத்து |
கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ |
|
மாலை மாலை, அடி உறை, இயைநர், |
|
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்? |
|
| |
ஒருதிறம், பாணர் யாழின் தீங் குரல் எழ, |
|
10 |
ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ, |
ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ, |
|
ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத, |
|
ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ, |
|
ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப, |
|
15 |
ஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க, |
ஒருதிறம், வாடை உளர்வயின் பூங் கொடி நுடங்க, |
|
ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம் குரலின் |
|
நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற, |
|
ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற, |
|
20 |
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல் |
மாறு அட்டான் குன்றம் உடைத்து. |
|
| |
பாடல் சான்று பல் புகழ் முற்றிய |
|
கூடலொடு பரங்குன்றின் இடை, |
|
கமழ் நறுஞ் சாந்தின் அவரவர் திளைப்ப, |
|
25 |
நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து; |
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின் |
|
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று. |
|
வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால், |
|
திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டு |
|
30 |
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை |
வாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப; |
|
தேயா மண்டிலம் காணுமாறு இன்று. |
|
| |
வளை முன் கை வணங்கு இறையார், |
|
அணை மென் தோள் அசைபு ஒத்தார் |
|
35 |
தார் மார்பின் தகை இயலார், |
ஈர மாலை இயல் அணியார், |
|
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட, |
|
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா: |
|
அனைய, பரங்குன்றின் அணி. |
|
| |
40 |
கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது |
அரோ;மேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு |
|
உழக்கும் அரோ;தெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும், |
|
அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும், |
|
தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும், |
|
45 |
கொய் உளை மான் தேர்க் கொடித் தேரான் கூடற்கும், |
கை ஊழ் தடுமாற்றம் நன்று. |
|
| |
என ஆங்கு, |
|
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி, |
|
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ! |
|
50 |
பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி, |
அணி நெடுங் குன்றம் பாடுதும்; தொழுதும்; |
|
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும் |
|
ஏம வைகல் பெறுக, யாம் எனவே. |
|