நிறை கடல் முகந்து உராய் |
6. வையை |
| |
நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம் |
|
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்; |
|
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ, |
|
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ, |
|
5 |
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் |
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை, |
|
மாசு இல் பயவற் புலவர் புகழ் புல |
|
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை, |
|
மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத் |
|
10 |
தாயிற்றே தண் அம் புனல். |
| |
புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி, |
|
நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும் |
|
வகைசாலும், வையை வரவு. |
|
| |
தொடி தோள் செறிப்ப, தோள்வளை இயங்க, |
|
15 |
கொடி சேரா, திருக் கோவை காழ் கொள, |
தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக, |
|
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும், |
|
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட, |
|
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த, |
|
20 |
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க, |
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென, |
|
வரைச் சிறை உடைத்ததை வையை: 'வையைத் |
|
திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக' எனும் |
|
உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று. |
|
| |
25 |
அன்று, போர் அணி அணியின் புகர்முகம் சிறந்தென, |
நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல; |
|
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும் |
|
ஈரணி அணியின், இகல் மிக நவின்று, |
|
தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண் |
|
30 |
துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின் |
அணிஅணி ஆகிய தாரர், கருவியர், |
|
அடு புனலது செல அவற்றை இழிவர்: |
|
கைம்மான் எருத்தர், கலி மட மாவினர், |
|
நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர், |
|
35 |
வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர், |
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை |
|
ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம் திரீஇ, |
|
| |
சேரி இளையர் செல அரு நிலையர், |
|
வலியர் அல்லோர் துறைதுறை அயர, |
|
40 |
மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர, |
சாறும் சேறும் நெய்யும் மலரும் |
|
நாறுபு நிகழும், யாறு வரலாறு. |
|
| |
நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து, |
|
வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை, |
|
45 |
புலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு. |
| |
மாறு மென் மலரும், தாரும் கோதையும், |
|
வேரும் தூரும், காயும் கிழங்கும், |
|
பூரிய மாக்கள் உண்பது மண்டி |
|
நார் அரி நறவம் உகுப்ப, 'நலன் அழிந்து, |
|
50 |
வேறாகின்று இவ் விரி புனல் வரவு' என, |
சேறு ஆடு புனலது செலவு. |
|
வரை அழி வால் அருவி வாதாலாட்ட, |
|
கரை அழி வால் அருவி கால் பாராட்ட, |
|
'இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல் |
|
55 |
புரைவது பூந் தாரான் குன்று' எனக் கூடார்க்கு |
உரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடி, |
|
சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம் |
|
புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத் |
|
தான் மலர்ந்தன்றே, |
|
60 |
தமிழ் வையைத் தண்ணம் புனல். |
| |
'விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்.' |
|
'தளிர் அறிந்தாய், தாம் இவை.' |
|
| |
'பணிபு ஒசி பண்ப! பண்டெல்லாம் நனி உருவத்து; |
|
என்னோ துவள் கண்டீ? |
|
65 |
எய்தும் களவு இனி: நின் மார்பின் தார் வாடக் |
கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச் |
|
செய்ததும் வாயாளோ? செப்பு.' |
|
| |
'புனை புணை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை |
|
நீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர் |
|
70 |
பெருக்கு அன்றோ, வையை வரவு?' |
| |
'ஆம்ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம் |
|
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச் |
|
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல்! வையைப் |
|
பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை. |
|
75 |
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும், |
குருகு இரை தேரக் கிடக்கும் பொழி காரில், |
|
இன் இளவேனில், இது அன்றோ வையை? நின் |
|
வையை வயமாக வை. |
|
செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல, |
|
80 |
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை; |
என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை; |
|
வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும் |
|
பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும் |
|
அனற்றினை துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும், |
|
85 |
பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம் |
கனற்றுபு காத்தி, வரவு!' |
|
| |
'நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து, |
|
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல் |
|
அல்லா விழுந்தானை எய்தி, எழுந்து ஏற்று யான் |
|
90 |
கொள்ளா அளவை, எழும் தேற்றாள்: கோதையின் |
உள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது? என |
|
| |
தேறித் தெரிய உணர் நீ: பிறிதும் ஓர் |
|
யாறு உண்டோ? இவ் வையை யாறு. |
|
| |
'இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால் |
|
95 |
தலை தொட்டேன், தண் பரங்குன்று!' |
| |
'சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத் |
|
துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனி |
|
கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன் |
|
அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே |
|
100 |
வல் இருள் நீயல்; அது பிழையாகும்' என, |
இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து, |
|
வல்லவர் ஊடல், உணர்த்தர, நல்லாய்! |
|
களிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட, |
|
அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப; |
|
105 |
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் |
வாடற்க, வையை! நினக்கு. |
|