பாய் இரும் பனிக் கடல் |
5. செவ்வேள் |
| |
பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு, |
|
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி, |
|
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து, |
|
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து, |
|
5 |
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய |
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை |
|
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல், |
|
நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை, |
|
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து, |
|
10 |
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை! |
| |
'மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள், |
|
ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை! |
|
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்! |
|
சால்வ! தலைவ!' எனப் பேஎ விழவினுள், |
|
15 |
வேலன் ஏத்தும் வெறியும் உளவே: |
அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல, |
|
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்: |
|
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை; |
|
சிறப்பினுள் உயர்வு ஆகலும், |
|
20 |
பிறப்பினுள் இழிபு ஆகலும், |
ஏனோர் நின் வலத்தினதே: |
|
| |
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ, |
|
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து, |
|
நாகம் நாணா, மலை வில்லாக, |
|
25 |
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய, |
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப் |
|
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் |
|
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள், |
|
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி |
|
30 |
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு, |
'விலங்கு' என, விண்ணோர் வேள்வி முதல்வன் |
|
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது |
|
அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின், |
|
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு |
|
35 |
திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள: |
கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை |
|
நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து, |
|
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர், |
|
'மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின், |
|
40 |
சாலார்; தானே தரிக்க' என, அவர் அவி |
உடன் பெய்தோரே, அழல் வேட்டு: அவ் அவித் |
|
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில், |
|
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள் |
|
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய, |
|
45 |
அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்: |
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் |
|
நிறைவயின் வழாஅது நிற் சூலினரே; |
|
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப் |
|
பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்: |
|
50 |
பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே, |
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன், |
|
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென, |
|
அறு வேறு துணியும் அறுவர் ஆகி, |
|
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்! |
|
| |
55 |
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய |
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய, |
|
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து, |
|
செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து |
|
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து, |
|
60 |
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்; |
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து, |
|
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்; |
|
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த |
|
மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும், |
|
65 |
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும், |
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும், |
|
தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும், |
|
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு, |
|
மறு இல் துறக்கத்து அமரர்செல்வன்தன் |
|
70 |
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய். |
| |
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை, |
|
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை |
|
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும், |
|
சேரா அறத்துச் சீர் இலோரும், |
|
75 |
அழி தவப் படிவத்து அயரியோரும், |
மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார் |
|
நின் நிழல்: |
|
| |
அன்னோர் அல்லது இன்னோர் |
|
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை |
|
80 |
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் |
அருளும், அன்பும், அறனும், மூன்றும் |
|
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! |
|