போர் எதிர்ந்து ஏற்றார் |
18. செவ்வேள் |
| |
போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப, |
|
கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல், |
|
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து, |
|
சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின் |
|
5 |
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து, |
ஏறுமாறு ஏற்கும் இக் குன்று. |
|
| |
ஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன் |
|
உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்: |
|
'உள்ளியது உணர்ந்தேன்; அஃது உரை; இனி, நீ எம்மை |
|
10 |
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு' என்பாளைப் பெயர்த்து, |
அவன் 'காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ் |
|
பேதுற்ற இதனைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை |
|
ஏதிலா நோக்குதி' என்று, ஆங்கு உணர்ப்பித்தல் |
|
ஆய் தேரான் குன்ற இயல்பு. |
|
| |
15 |
ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல், |
மை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார், |
|
கை வளம் பூத்த வடுவொடு, காணாய் நீ? |
|
மொய் வளம் பூத்த முயக்கம், யாம் கைப்படுத்தேம்: |
|
மெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி |
|
20 |
நை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம |
பூத்தன பாணா! நின் பாட்டு. |
|
| |
தண் தளிர் தருப் படுத்து, எடுத்து உரைஇ, |
|
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால், |
|
கண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து, இடந்து, |
|
25 |
இருள் போழும் கொடி மின்னால் |
வெண் சுடர் வேல் வேள்! விரை மயில் மேல் ஞாயிறு! நின் |
|
ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து, |
|
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின் |
|
தொழில் வீற்றிருந்த நகர். |
|
| |
30 |
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி |
சூர் ததும்பு வரைய காவால், |
|
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை, |
|
ஏர் ததும்புவன பூ அணி செறிவு. |
|
போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும் |
|
35 |
காந்தள், செறிந்த கவின், |
கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின் |
|
புரி நெகிழ்ப்பார் போன்றன கை. |
|
அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே, |
|
வச்சிரத்தான் வான வில்லு. |
|
| |
40 |
வில்லுச் சொரி பகழியின் மென் மலர் தாயின |
வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம். |
|
வட்டு உருட்டு வல்லாய்! மலைய நெட்டுருட்டுச் |
|
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து, |
|
போர் ததும்பும் அரவம் போல, |
|
45 |
கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம். |
அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை; |
|
குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை; |
|
எருவை கோப்ப, எழில் அணி திருவில் |
|
வானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால், |
|
50 |
கூனி வளைத்த சுனை. |
| |
புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து, |
|
சுருதியும் பூவும் சுடரும் கூடி, |
|
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும், |
|
செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை, |
|
55 |
உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு, |
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே! |
|