மண் மிசை அவிழ் துழாய் |
8. செவ்வேள் |
| |
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப் |
|
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும், |
|
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி |
|
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும், |
|
5 |
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும், |
ஆதிரை முதல்வனின் கிளந்த |
|
நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும், |
|
யாவரும், பிறரும், அமரரும், அவுணரும், |
|
மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும் |
|
10 |
பற்றாகின்று, நின் காரணமாக; |
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும். |
|
இமயக் குன்றினில் சிறந்து |
|
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை |
|
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா |
|
15 |
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின் |
அருவி தாழ் மாலைச் சுனை. |
|
முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட |
|
கதியிற்றே காரின் குரல். |
|
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ, |
|
20 |
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப, |
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை. |
|
| |
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம் |
|
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர, |
|
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர் |
|
25 |
மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற, |
நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப, |
|
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம! நின் |
|
குன்றத்தான் கூடல் வரவு. |
|
| |
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல் |
|
30 |
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ, |
காலொடு மயங்கிய கலிழ் கடலென, |
|
மால் கடல் குடிக்கும் மழை குரலென, |
|
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென, |
|
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின் |
|
35 |
குன்றம் குமுறிய உரை. |
| |
'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர் |
|
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று; |
|
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி, |
|
நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர் |
|
40 |
ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல், |
வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி; |
|
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல், |
|
அடியோர் மைந்தர் அகலத்து அகலா |
|
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி, |
|
45 |
புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும் |
சிறப்பிற்றே தண் பரங்குன்று.' |
|
| |
'இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப் |
|
பனி மலர்க் கண்ணாரோடு ஆட நகை மலர் |
|
மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில் |
|
50 |
காலை போய் மாலை வரவு.' |
| |
'இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப் |
|
பனி பொழி சாரலும் பார்ப்பாரும்;... |
|
துனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம் |
|
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது; |
|
55 |
துனியல் நனி' 'நீ நின் சூள்.' |
| |
'என் பாணி நில் நில் எலாஅ! பாணி நீ, நின் சூள்: |
|
சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்! |
|
ஈன்றாட்கு ஒரு பெண், இவள். |
|
"இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு |
|
60 |
அரியளோ? ஆவது அறிந்திலேன்; ஈதா; |
வரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள் |
|
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன்" என்பாய்; |
|
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ? |
|
ஏழ் உலகும் ஆளி திரு வரைமேல் அன்பு அளிதோ? |
|
65 |
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின், |
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்: |
|
விறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி; |
|
அறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்: |
|
குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்; |
|
70 |
ஐய! சூளின், அடி தொடு குன்றொடு |
வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!' |
|
| |
யார் பிரிய, யார் வர, யார் வினவ, யார் செப்பு? |
|
'நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி,' நேரிழாய்! |
|
கய வாய நெய்தல் அலர், கமழ்முகை மண நகை |
|
75 |
நயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்; |
முகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண் |
|
பல் நகை சான்ற கனவு அன்று; நனவு அன்று நவின்றதை: |
|
இடு துனி கை ஆறா என், துயர் கூரச் |
|
சுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின் |
|
80 |
மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி, |
கேட்டுதும் பாணி; எழுதும் கிணை முருகன் |
|
தாள் தொழு தண் பரங்குன்று! |
|
| |
'தெரி இழாய் செல்க!' என்றாய்; எல்லா! யாம் பெற்றேம், |
|
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்; |
|
85 |
பருவத்துப் பல் மாண் நீ சேறலின் காண்டை |
எருமை இருந் தோட்டி எள்ளீயும் காளை |
|
செருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி, |
|
அருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி, |
|
நிரைவளை ஆற்று, இருஞ் சூள். |
|
| |
90 |
வளி பொரு சேண் சிமை வரையகத்தால் |
தளி பெருகும் தண் சினைய |
|
பொழில் கொளக் குறையா மலர, |
|
குளிர் பொய்கை அளறு நிறைய, |
|
மருதம் நளி மணல் ஞெமர்ந்த |
|
95 |
நனி மலர்ப் பெரு வழி, |
சீறடியவர் சாறு கொள எழுந்து; |
|
வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும், |
|
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும், |
|
நாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும், |
|
100 |
மணியும், கயிறும், மயிலும், குடாரியும், |
பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி; |
|
அரு வரைச் சேராத் தொழுநர், |
|
'கனவின் தொட்டது கை பிழையாகாது |
|
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை |
|
105 |
வரு புனல் அணிக' என வரம் கொள்வோரும், |
'கரு வயிறு உறுக' எனக் கடம்படுவோரும், |
|
'செய் பொருள் வாய்க்க' எனச் செவி சார்த்துவோரும், |
|
'ஐ அமர் அடுக' என அருச்சிப்போரும், |
|
பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும், |
|
110 |
மஞ்சு ஆடு மலை முழக்கும், |
துஞ்சாக் கம்பலை |
|
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர் |
|
ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை, |
|
தாட் தாமரை, தோட் தமனியக் கய மலர், |
|
115 |
எம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை, |
செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை, |
|
புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக் |
|
கூர் எயிற்றார் குவிமுலைப் பூணொடு, |
|
மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி; |
|
120 |
அரிவையர் அமிர்த பானம் |
உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப; |
|
மைந்தர் மார்வம் வழி வந்த, |
|
செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப; |
|
| |
என ஆங்கு, |
|
125 |
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி, |
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண |
|
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த |
|
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம், |
|
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா, |
|
130 |
தண் பரங்குன்றம்! நினக்கு. |
|