மலை வரை மாலை |
10. வையை |
| |
மலைவரை மாலை அழி பெயல் காலை, |
|
செல வரை காணாக் கடல்தலைக் கூட |
|
நில வரை அல்லல் நிழத்த, விரிந்த |
|
பலவுறு போர்வைப் பரு மணல் மூஉய், |
|
5 |
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய |
மாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி, |
|
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ, பறை அறையப் |
|
போந்தது வையைப் புனல். |
|
| |
புனல் மண்டி ஆடல் புரிவான், சனம் மண்டி, |
|
10 |
தாளித நொய்ந் நூல் சரணத்தர், மேகலை |
ஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ, |
|
நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி யாவையும் |
|
முத்து நீர்ச் சாந்து அடைந்த மூஉய்த் தத்தி; |
|
புக அரும் பொங்குஉளைப் புள் இயல் மாவும், |
|
15 |
மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும், |
அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய் மாச் |
|
சகடமும், தண்டு ஆர் சிவிகையும், பண்ணி; |
|
வகை வகை ஊழ் ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி; |
|
முதியர், இளையர்: முகைப் பருவத்தர், |
|
20 |
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்தன்னார் |
இரு திற மாந்தரும் இன்னினியோரும் |
|
விரவு நரையோரும் வெறு நரையோரும் |
|
பதிவத மாதர், பரத்தையர்; பாங்கர்; |
|
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள |
|
25 |
விதி கூட்டிய இய மென் நடை போல, |
பதி எதிர் சென்று, பரூஉக் கரை நண்ணி |
|
| |
நீர் அணி காண்போர்; நிரை மாடம் ஊர்குவோர்; |
|
பேர் அணி நிற்போர்; பெரும் பூசல் தாக்குவோர்; |
|
மா மலி ஊர்வோர்; வயப் பிடி உந்துவோர்; |
|
30 |
வீ மலி கான் யாற்றின் துருத்தி குறுகி, |
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர்; தழுவு எதிராது, |
|
யாமக் குறை ஊடல் இன் நசைத் தேன் நுகர்வோர்; |
|
காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து, |
|
சேமத் திரை வீழ்த்துச் சென்று, அமளி சேர்குவோர்: |
|
| |
35 |
தாம் வேண்டு காதற் கணவர் எதிர்ப்பட, |
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின், சேம |
|
மட நடைப் பாட்டியர்த் தப்பி, தடை இறந்து, |
|
தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும் |
|
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார்போல், |
|
40 |
யாம் வேண்டும் வையைப் புனல் எதிர்கொள் கூடல் |
| |
ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் |
|
மடப் பிடி கண்டு, வயக் கரி மால் உற்று, |
|
நடத்த நடவாது நிற்ப; மடப் பிடி, |
|
அன்னம் அனையாரோடு ஆயா நடை, கரிமேல் |
|
45 |
செல் மனம் மால் உறுப்ப, சென்று; எழில் மாடத்துக் |
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று, |
|
மை புரை மடப் பிடி, மட நல்லார் விதிர்ப்புற, |
|
செய் தொழில் கொள்ளாது, மதி செத்து, சிதைதர; |
|
கூம் கை மத மாக் கொடுந் தோட்டி கைந் நீவி |
|
50 |
நீங்கும் பதத்தால், உருமுப் பெயர்த்தந்து |
வாங்கி, முயங்கி வயப் பிடி கால்கோத்து, |
|
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல் |
|
இதையும் கயிறும் பிணையும் இரியச் |
|
சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும் |
|
55 |
திசை அறி நீகானும் போன்ம். |
| |
பருக் கோட்டு யாழ்ப் பக்கம் பாடலோடு ஆடல் |
|
அருப்பம் அழிப்ப, அழிந்த மனக் கோட்டையர், |
|
ஒன்றோடு இரண்டா முன்தேறார், வென்றியின், |
|
பல் சனம் நாணிப் பதைபதைப்பு மன்னவர் |
|
60 |
தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை |
ஒன்றியும், உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி, |
|
நின்ற நிகழ்ச்சியும் போன்ம். |
|
காமம் கனைந்து எழ, கண்ணின் களி எழ, |
|
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை |
|
65 |
கள்ளின் களி எழக் காத்தாங்கு, அலர் அஞ்சி, |
உள்ளம் உளை எழ, ஊக்கத்தான் உள் உள் |
|
பரப்பி மதர் நடுக்கிப் பார் அலர் தூற்றக் |
|
கரப்பார், களி மதரும் போன்ம். |
|
கள்ளொடு காமம் கலந்து, கரை வாங்கும் |
|
70 |
வெள்ளம் தரும், இப் புனல். |
| |
புனல் பொருது மெலிந்தார் திமில் விட, |
|
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ, |
|
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து |
|
திகை முழுது கமழ, முகில் அகடு கழி மதியின் |
|
75 |
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர், |
அரவு செறி உவவு மதியென அங்கையில் தாங்கி, |
|
எறி மகர வலயம் அணி திகழ் நுதலியர், |
|
மதி உண் அரமகளென, ஆம்பல் வாய் மடுப்ப; |
|
மீப்பால் வெண் துகில் போர்க்குநர்; பூப் பால் |
|
80 |
வெண் துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர்; |
செங் குங்குமச் செழுஞ் சேறு, |
|
பங்கம் செய் அகில் பல பளிதம், |
|
மறுகுபட அறை புரை அறு குழவியின் |
|
அவி அமர் அழலென அரைக்குநர்; |
|
85 |
நத்தொடு, நள்ளி, நடை இறவு, வய வாளை, |
வித்தி அலையில், 'விளைக! பொலிக'! என்பார்; |
|
இல்லது நோக்கி, இளிவரவு கூறாமுன், |
|
நல்லது வெஃகி, வினை செய்வார்; |
|
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப, |
|
90 |
தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்; |
எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்; |
|
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும், |
|
கோலம் கொள, நீர்க்குக் கூட்டுவார்; அப் புனல் |
|
உண்ணா நறவினை ஊட்டுவார்; ஒண் தொடியார் |
|
95 |
வண்ணம் தெளிர, முகமும் வளர் முலைக் |
கண்ணும் கழியச் சிவந்தன; அன்ன வகை |
|
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி |
|
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம் |
|
பின்னும், மலர்க் கண் புனல். |
|
| |
100 |
தண்டித் தண்டின் தாய்ச் செல்வாரும், |
கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும், |
|
வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வாரும், |
|
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிப் |
|
பைய விளையாடுவாரும், மென் பாவையர் |
|
105 |
செய்த பூஞ் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார், |
இடுவார் மறுப்பார் சிறுகு இடையார் |
|
பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி, |
|
அம் தண் கரை நின்று பாய்வாராய், மைந்தர் |
|
ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி, |
|
110 |
களிறு போர் உற்ற களம்போல, நாளும் |
தெளிவு இன்று, தீம் நீர்ப் புனல். |
|
| |
மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல் |
|
வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை |
|
நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து, |
|
115 |
தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்; |
பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல், |
|
ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி, |
|
நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும், |
|
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத, |
|
120 |
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத, |
தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா, |
|
நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும் |
|
பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து |
|
உள் நின்று தூய பனிநீருடன் கலந்து, |
|
125 |
கால் திரிய ஆர்க்கும் புகை. |
| |
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப் |
|
பொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி, |
|
செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்க |
|
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல், |
|
130 |
அருங் கறை அறை இசை வயிரியர், உரிமை |
ஒருங்கு அமர் ஆயமொடு, ஏத்தினர் தொழவே. |
|