மாஅயோயே |
3. திருமால் |
திருமாலிடமிருந்து தோன்றிப் பரந்த பொருள்கள் | |
மாஅயோயே! மாஅயோயே! |
|
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி |
|
மணி திகழ் உருபின் மாஅயோயே! |
|
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும், |
|
5 |
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், |
திதியின் சிறாரும், விதியின் மக்களும், |
|
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும், |
|
தா மா இருவரும், தருமனும், மடங்கலும், |
|
மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும், |
|
10 |
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் |
மாயா வாய்மொழி உரைதர வலந்து: |
|
'வாய்மொழி ஓடை மலர்ந்த |
|
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும், |
|
நீ' என மொழியுமால், அந்தணர் அரு மறை. |
|
முனிவரும் தேவரும் பாடும் வகை | |
15 |
'ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், |
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை; |
|
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின் |
|
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின் |
|
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள் |
|
20 |
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; |
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும், |
|
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம் |
|
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு |
|
கேழலாய் மருப்பின் உழுதோய்' எனவும், |
|
25 |
'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் |
சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும், |
|
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து |
|
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர் |
|
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப் |
|
30 |
பாடுவார் பாடும் வகை. |
வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும் | |
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் |
|
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை; |
|
நகை அச்சாக நல் அமிர்து கலந்த |
|
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை. |
|
35 |
இரு கை மாஅல்! |
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்! |
|
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்! |
|
எழு கையாள! எண் கை ஏந்தல்! |
|
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள! |
|
40 |
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! |
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! |
|
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! |
|
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! |
|
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் |
|
45 |
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! |
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ, |
|
முன்னை மரபின் முதுமொழி முதல்வ? |
|
வனப்பும் வலியும் | |
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், |
|
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம் |
|
50 |
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! |
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர், |
|
பிறை வளர், நிறை மதி உண்டி, |
|
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ; |
|
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி, |
|
55 |
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் |
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ; |
|
அதனால், 'பகைவர் இவர்; இவர் நட்டோர்' என்னும் |
|
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே? |
|
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட |
|
60 |
சேவல் ஊர்தியும், 'செங் கண் மாஅல்! |
ஓ! 'எனக் கிளக்கும் கால முதல்வனை; |
|
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்: |
|
சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள் | |
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ; |
|
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ; |
|
65 |
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; |
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; |
|
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ; |
|
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், |
|
உறைவும் உறைவதும் இலையே; உண்மையும் |
|
70 |
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; |
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில் |
|
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே: |
|
நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு | |
பறவாப் பூவைப் பூவினோயே! |
|
அருள் குடையாக, அறம் கோலாக, |
|
75 |
இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமும் |
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ; |
|
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என, |
|
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என, |
|
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என, |
|
80 |
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை: |
நால் வகை வியூகம் | |
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை! |
|
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்! |
|
பல திறப் பெயரியல்புகள் | |
இட வல! குட வல! கோவல! காவல! |
|
காணா மரப! நீயா நினைவ! |
|
85 |
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! |
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண! |
|
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட! |
|
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண! |
|
பருதி வலவ! பொரு திறல் மல்ல! |
|
90 |
திருவின் கணவ! பெரு விறல் மள்ள! |
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து, |
|
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய |
|
வாய்மொழி மகனொடு மலர்ந்த |
|
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! |
கடவுள் வாழ்த்து கடுவன் இளவெயினனார் பாட்டு பெட்டனாகனார் இசை பண்ணுப் பாலையாழ |