மாநிலம் தோன்றாமை |
தி 2. வையை |
வையையில் புனல் விரைந்து வருதல் | |
மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ, |
|
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான், |
|
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ, |
|
காமரு வையை கடுகின்றே, கூடல். |
|
புதுப் புனலை விரும்பி மக்கள் கோலம் கொண்டு செல்லுதல் | |
5 |
'நீர் அணி கொண்டன்று வையை' என விரும்பி, |
தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி, |
|
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின் |
|
சேர் அணி கொண்டு, நிறம் ஒன்று வெவ்வேறு |
|
நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி, |
|
10 |
ஏர் அணி கொண்டார், இயல். |
வையைத் துறையில் மன்னனும் மக்களும் கூடுதல் | |
கை புனை தாரினர், கண்ணியர், |
|
ஐ எனும் ஆவியர், ஆடையர், |
|
நெய் அணி கூந்தலர், பித்தையர், |
|
மெய் அணி யானை மிசையராய், ஒய்யெனத் |
|
15 |
தங்காச் சிறப்பின் தளிர் இயலார் செல்ல; |
பொங்கு புரவிப்புடைப் போவோரும், பொங்கு சீர் |
|
வையமும் தேரும் அமைப்போரும்; எவ் வாயும் |
|
பொய்யாம் போய் என்னாப் புடை கூட்டிப் போவநர் |
|
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார்; வையத்துக்கு |
|
20 |
ஊடுவார்; ஊடல் ஒழிப்பார்; உணர்குவார்: |
ஆடுவார், பாடுவார்; ஆர்ப்பார், நகுவார்; நக்கு |
|
ஓடுவார்; ஓடித் தளர்வார்; போய், உற்றவரைத் |
|
தேடுவார்; ஊர்க்குத் திரிவார் இலராகி- |
|
கற்றாரும், கல்லாதவரும், கயவரும், |
|
25 |
பெற்றாரும், பெற்றாற் பிழையாத பெண்டிரும், |
பொற்றேரான் தானும், பொலம் புரிசைக் கூடலும், |
|
முற்றின்று-வையைத் துறை. |
|
நீராடற் காட்சிகள் தலைவன் பரத்தைமையைத் தோழி குறிப்பால் உணர்த்துதல் | |
துறை ஆடும் காதலர் தோள் புணையாக, |
|
மறை ஆடுவாரை அறியார் மயங்கி, |
|
30 |
பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன் |
நிகழும் நிகழ்ச்சி எம்பால் என்று, ஆங்கே, |
|
இகல் பல செல்வம் விளைத்தவட் கண்டு, இப்பால், |
|
அகல் அல்கும் வையைத் துறை. |
|
காதலான் மார்பின் கமழ் தார், புனல் வாங்கி, |
|
35 |
ஏதிலாள் கூந்தலிடைக் கண்டு, 'மற்று அது |
தா தா' என்றாளுக்கு, 'தானே புறன் தந்து |
|
வேய்தந்தது'. 'என்னை? விளைந்தமை மற்று அது |
|
நோதலே செய்யேன், நுணங்கு இழையாய்! இச் செவ்வி |
|
போதல் உண்டாம்கொல்? அறிந்து புனல் புணர்த்தது! |
|
40 |
ஓஒ! பெரிதும் வியப்பு. |
கயத் தக்க பூப் பெய்த காமக் கிழமை |
|
நயத் தகு நல்லாளைக் கூடுமா கூடும் |
|
முயக்குக்கு, செவ்வி முலையும் முயக்கத்து |
|
நீரும் அவட்குத் துணை; கண்ணின் நீர் விட்டோய்! |
|
45 |
நீயும் அவட்குத் துணை. |
குலமகளிர் உரிமை மைந்தரோடு நீராடுதல் | |
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல், |
|
மணி எழில், மா மேனி, முத்த முறுவல், |
|
அணி பவளச் செவ் வாய், அறம் காவற் பெண்டிர் |
|
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித் |
|
50 |
தணிவின்று, வையைப் புனல். |
தலைவன் கூற்று | |
'புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை, |
|
எனலூழ் வகை எய்திற்று' என்று ஏற்றுக்கொண்ட |
|
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி, |
|
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன், |
|
55 |
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், |
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து. |
|
என ஆங்கு- |
|
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம் | |
'ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு' எனப் |
|
பார்ப்பார் ஒழிந்தார், படிவு. |
|
60 |
'மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று' என்று, |
அந்தணர் தோயலர், ஆறு. |
|
'வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென' |
|
ஐயர், வாய்பூசுறார், ஆறு. |
|
வையை நுரை முதலியவற்றோடு பெருகிச் சென்ற வகை | |
விரைபு இரை விரை நுரை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல், |
|
65 |
கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர் தரு நுரை, |
நுரையுடன் மதகுதொறு இழிதரு புனல் கரை புரளிய செலும்மறி கடல், |
|
புகும் அளவுஅளவு இயல் இசை சிறை தணிவின்று,வெள்ள மிகை. |
|
திருமருத முன்துறை | |
வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில் |
|
மணி அணி யானைமிசை, மைந்தரும் மடவாரும், |
|
70 |
நிரைநிரை குழீஇயினர் உடன் சென்று, |
குரு மணி யானை இயல் தேர்ப் பொருநன் |
|
திருமருத முன்துறை முற்றம் குறுகி, |
|
தெரி மருதம் பாடுப, பிணி கொள் யாழ்ப் பாணர். |
|
பாடிப் பாடி, பாய்புனல் |
|
75 |
ஆடி ஆடி, அருளியவர் |
ஊடி ஊடி, உணர்த்தப் புகன்று |
|
கூடிக் கூடி, மகிழ்பு மகிழ்பு, |
|
தேடித் தேடி, சிதைபு சிதைபு, |
|
சூடிச் சூடி, தொழுது தொழுது, |
|
80 |
மழுபொடு நின்ற மலி புனல் வையை |
விழு தகை நல்லாரும் மைந்தரும் ஆடி, |
|
இமிழ்வது போன்றது, இந் நீர்-குணக்குச் சான்றீர்! |
|
முழுவதும் மிச்சிலா உண்டு. |
|
சாந்து, பூ, முதலியவற்றால் நீர் வேறுபடுதல் | |
சாந்தும், கமழ் தாரும், கோதையும், சுண்ணமும், |
|
85 |
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன |
பூவினும், அல்லால், சிறிதானும் நீர் நிறம் |
|
தான் தோன்றாது-இவ் வையை ஆறு. |
|
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் |
|
கழு நீர மஞ்சனக் குங்குமக் கலங்கல் |
|
90 |
வழி நீர்; விழு நீர அன்று-வையை. |
பாண்டியன் கூடலாரொடு வையை நீராடிய மாட்சி | |
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன், |
|
உரு கெழு கூடலவரோடு, வையை |
|
வரு புனல் ஆடிய தன்மை பொருவுங்கால்- |
|
இரு முந்நீர் வையம் படித்து என்னை? யான் ஊர்க்கு |
|
95 |
ஒரு நிலையும் ஆற்ற இயையா! அரு மரபின், |
அந்தர வான் யாற்று, ஆயிரம் கண்ணினான் |
|
இந்திரன் ஆடும் தகைத்து. |
|
இப் பாடல், தொல்காப்பியம், செய்யுள் இயல், சூ. 118 இளம்பூரணர் உரையில் கண்டது. |