வளி பொரு மின்னொடு |
12. வையை |
| |
வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி, |
|
விளிவு இன்று, கிளையொடு மேல் மலை முற்றி, |
|
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்; |
|
ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம், |
|
5 |
அகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய; |
தகரமும், ஞாழலும், தாரமும், தாங்கி, |
|
நளி கடல் முன்னியது போலும், தீம் நீர் |
|
வளி வரல் வையை வரவு. |
|
| |
'வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய், |
|
10 |
அம் தண் புனல் வையை யாறு' எனக் கேட்டு, |
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும், |
|
பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும், |
|
அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப் |
|
புகைகெழு சாந்தம் பூசுவோரும், |
|
15 |
கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும், |
வேர் பிணி பல் மலர் வேயுமோரும், |
|
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும், |
|
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்; |
|
வாச நறு நெய் ஆடி, வான் துகள் |
|
20 |
மாசு அறக் கண்ணடி வயக்கி, வண்ணமும் |
தேசும் ஒளியும் திகழ நோக்கி, |
|
வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்; |
|
இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர், |
|
கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர், |
|
25 |
ஓசனை கமழும் வாச மேனியர், |
மட மா மிசையோர், |
|
பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர் |
|
| |
கடு மா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும், |
|
வடி மணி நெடுந் தேர் மா முள் பாய்க்குநரும், |
|
30 |
விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி, |
ஆடல் தலைத்தலை சிறப்ப, கூடல் |
|
உரைதர வந்தன்று, வையை நீர்; வையைக் |
|
கரை தர வந்தன்று, காண்பவர் ஈட்டம்; |
|
நிவந்தது, நீத்தம் கரைமேலா; நீத்தம் |
|
35 |
கவர்ந்தது போலும், காண்பவர் காதல். |
| |
முன் துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி |
|
ஒன்று அல, பலபல உடன் எழுந்தன்று; அவை |
|
எல்லாம் தெரியக் கேட்குநர் யார்? அவை |
|
கில்லா; கேள்வி கேட்டன சிலசில: |
|
40 |
ஒத்த குழலின் ஒலி எழ; முழவு இமிழ், |
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, |
|
ஒத்து அளந்து; சீர் தூக்கி; ஒருவர் பிற்படார்; |
|
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் |
|
அத் தக அரிவையர் அளத்தல் காண்மின். |
|
| |
45 |
'நாணாள்கொல் தோழி! "நயன் இல் பரத்தையின் |
தோள் நலம் உண்டு, துறந்தான்" என, ஒருத்தி |
|
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி |
|
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள், |
|
நாணுக் குறைவு இலள்; நங்கை மற்று?' என்மரும், |
|
50 |
'கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் |
ஓட்டை மனவன்; உரம் இலி' என்மரும், |
|
'சொரிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள்; நிறம் திரிந்தாள்; |
|
நெஞ்சத்தை நீத்தாள், நெறி செல்வான் பின் நிறை |
|
அஞ்சிக் கழியாமோ, அன்பு உற்றால்?' என்மரும், |
|
55 |
'பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான், உவன். |
நாணாள் அவனை, இந் நாரிகை' என்மரும் |
|
| |
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப, |
|
கமழ் கோதை கோலாப் புடைத்து, தன் மார்பில் |
|
இழையினைக் கை யாத்து, இறுகிறுக்கி வாங்கி, |
|
60 |
'பிழையினை' என்ன, பிழை ஒன்றும் காணான், |
தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின். |
|
'பார்த்தாள், ஒருத்தி நினை' என, 'பார்த்தவளைப் |
|
பொய்ச் சூளாள் என்பது அறியேன், யான்' என்று இரந்து, |
|
மெய்ச் சூள் உறுவானை, மெல்இயல், 'பொய்ச் சூள்' என்று, |
|
65 |
ஒல்லுவ சொல்லாது, உரை வழுவச் சொல்ல; |
உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப் |
|
புல்லாது ஊடிப் புலந்து நின்றவள் |
|
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய, |
|
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண் |
|
70 |
பாய் குருதி சோர, பகை இன்று உளம் சோர, |
நில்லாது நீங்கி நிலம் சோர; அல்லாந்து |
|
மல் ஆர் அகலம் வடு அஞ்சி, மம்மர் கூர்ந்து, |
|
எல்லாத் துனியும் இறப்ப, தன் காதலன் |
|
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் |
|
75 |
வல்லதால், வையைப் புனல். |
என ஆங்கு |
|
மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம், |
|
அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல், |
|
குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி, |
|
80 |
நல் இணர் நாகம், நறவம், சுரபுன்னை, |
எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ; |
|
தேறித் தெளிந்து, செறி இருள் மால் மாலை; |
|
பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று; |
|
துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்: |
|
85 |
கார் அடு காலை, கலிழ் செங் குருதித்தே |
போர் அடு தானையான் யாறு. |
|
சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த |
|
கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ, |
|
விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி, |
|
90 |
அடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி முன்கைக் |
காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள், |
|
நேர் இறை முன்கை நல்லவள்; கேள் காண்மின். |
|
| |
துகில் சேர் மலர் போல், மணி நீர் நிறைந்தன்று; |
|
'புனல்' என, மூதூர் மலிந்தன்று, அவர் உரை; |
|
95 |
உரையின் உயர்ந்தன்று, கவின். |
போர் ஏற்றன்று, நவின்று; தகரம் |
|
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று; |
|
துகில் பொசி புனலின், கரை கார் ஏற்றன்று; |
|
விசும்பு கடி விட்டன்று, விழவுப் புனல் ஆங்க. |
|
| |
100 |
இன்பமும், கவினும், அழுங்கல் மூதூர், |
நன்பல நன்பல நன்பல வையை! |
|
நின் புகழ் கொள்ளாது, இம் மலர் தலை உலகே. |
|