வான் ஆர் எழிலி |
தி 1. திருமால் |
| |
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த, |
|
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து, |
|
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா |
|
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய |
|
5 |
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் |
திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது. |
|
| |
ஒருசார்-அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம், |
|
பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி, |
|
மணி நிறம் கொண்ட மலை. |
|
10 |
ஒருசார்-தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை |
வண்ண வரி இதழ்ப் போதின்வாய் வண்டு ஆர்ப்ப, |
|
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின் |
|
கண் வீற்றிருக்கும் கயம். |
|
ஒருசார்-சாறுகொள் ஓதத்து இசையொடு மாறு உற்று |
|
15 |
உழவின் ஓதை பயின்று, அறிவு இழந்து |
திரிநரும், ஆர்த்து நடுநரும், ஈண்டி, |
|
திரு நயத்தக்க வயல். |
|
ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி, |
|
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித் |
|
20 |
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி, |
அறத்தின் திரியா, பதி. |
|
ஆங்கு ஒருசார்-உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை, |
|
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல, |
|
பண்ணியம், மாசு அறு பயம் தரு காருகப் |
|
25 |
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார்: |
விளைவதை வினை எவன் மென் புல வன் புலக் |
|
களமர் உழவர் கடி மறுகு பிறசார்: |
|
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம் |
|
இயல் கொள நண்ணியவை. |
|
30 |
வண்டு பொரேரென எழ, |
வண்டு பொரேரென எழும்; |
|
கடிப் புகு வேரிக் கதவமிற் றோட்டி, |
|
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர- |
|
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார் |
|
35 |
ஊர் களிற்றன்ன செம்மலோரும், |
வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து |
|
ஒளி இழை ஒதுங்கிய ஒண் நுதலோரும், |
|
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும், |
|
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும், |
|
40 |
விடையோடு இகலிய விறல் நடையோரும், |
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும், |
|
கடல் நிரை திரையின் கரு நரையோரும், |
|
சுடர் மதிக் கதிரெனத் தூ நரையோரும்- |
|
மடையர், குடையர், புகையர், பூ ஏந்தி, |
|
45 |
இடை ஒழிவு இன்றி, அடியுறையார் ஈண்டி, |
விளைந்தார் வினையின் விழுப் பயன் துய்க்கும் |
|
துளங்கா விழுச் சீர்த் துறக்கம் புரையும்- |
|
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் |
|
வரை கெழு செல்வன் நகர். |
|
50 |
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, |
விண்ட கட கரி மேகமொடு அதிர, |
|
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப, |
|
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப் |
|
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற, |
|
55 |
சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய, |
சூடா நறவொடு காமம் விரும்ப, |
|
இனைய பிறவும், இவை போல்வனவும், |
|
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப் |
|
பூ முடி நாகர் நகர். |
|
60 |
மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி |
அவிர் நிமிர் புகழ் கூந்தல், |
|
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி |
|
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண், வாணுதலோர்- |
|
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது |
|
65 |
இகழ் கடுங் கடாக் களிற்று அண்ணலவரோடு, |
அணி மிக வந்து இறைஞ்ச, அல் இகப்ப, பிணி நீங்க, |
|
நல்லவை எல்லாம் இயைதரும்-தொல் சீர் |
|
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக் |
|
குளவாய் அமர்ந்தான் நகர். |
|
70 |
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக் கால், வெற்புத் |
திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி, |
|
மகர மறி கடல் வைத்து நிறுத்து, |
|
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும் |
|
அமுது கடைய, இரு வயின் நாண் ஆகி, |
|
75 |
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க, |
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் |
|
அறாஅது அணிந்தாரும் தாம்; |
|
மிகாஅ மறலிய மே வலி எல்லாம் |
|
புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்; |
|
80 |
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் |
அணிபோல் பொறுத்தாரும் தாஅம்; பணிவு இல் சீர்ச் |
|
செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி, |
|
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித் |
|
தொல் புகழ் தந்தாரும் தாம். |
|
85 |
அணங்குடை அருந் தலை ஆயிரம் விரித்த |
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி, |
|
நல் அடி ஏத்தி நிற் பரவுதும்- |
|
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே. |
|