விரிகதிர் மதியமொடு |
11. வையை |
| |
'விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப, |
|
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து, |
|
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் |
|
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர, |
|
5 |
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி |
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல் |
|
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின் |
|
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன் |
|
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை |
|
10 |
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த |
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி |
|
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில் |
|
எதிர் வரவு மாரி இயைக' என இவ் ஆற்றால் |
|
புரை கெழு சையம் பொழி மழை தாழ, |
|
15 |
நெரிதரூஉம் வையைப் புனல். |
| |
'வரையன புன்னாகமும், |
|
கரையன சுரபுன்னையும், |
|
வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம் |
|
மனைமாமரம் வாள்வீரம், |
|
20 |
சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள், |
தாய தோன்றி தீயென மலரா, |
|
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம், |
|
வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப் |
|
பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல் |
|
25 |
வயவர் அரி மலர்த் துறை என்கோ? |
அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின், |
|
திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின் |
|
அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப் |
|
பருகு படி மிடறு என்கோ? பெரிய |
|
30 |
திருமருத நீர்ப் பூந் துறை.' |
| |
'ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல், |
|
நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு, |
|
நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி, |
|
உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம் |
|
35 |
வழியது பக்கத்து அமரர் உண்டி |
மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க; |
|
எண் மதி நிறை, உவா இருள் மதி போல |
|
நாள் குறைபடுதல் காணுநர் யாரே? |
|
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை! |
|
40 |
வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இரு நாள் பெற! |
மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர், |
|
காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென, |
|
மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல் |
|
இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்:' |
|
45 |
என ஆங்கு |
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை |
|
படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம் |
|
இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை |
|
ஆடற்கு நீர் அமைந்தது, யாறு. |
|
| |
50 |
ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர் |
குந்தம் ஏந்துவோர், கொள்வார் கோல் கொள்ளக் |
|
கொடித் திண் தேர் ஏறுவோர்,புள் ஏர் புரவி பொலம் |
|
படைக் கைம்மாவை வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு |
|
ஊர்பு உழக்குநரும், கண் ஆரும் சாயற் கழித் |
|
55 |
துரப்போரை வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும், |
மணம் வரு மாலையின் வட்டிப்போரைத் |
|
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும், |
|
தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும் |
|
உருகெழு தோற்றம் உரைக்குங்கால், நாளும் |
|
60 |
|
பாய் தேரான் வையை அகம். |
|
| |
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண் |
|
தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை |
|
ஒளி திகழ் தகை வகை செறி பொறி |
|
65 |
புனை வினைப் பொலங் கோதையவரொடு, |
பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து, |
|
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார், |
|
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற, |
|
சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி, |
|
70 |
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் |
அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை. |
|
கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல், |
|
நீர் ஒவ்வா வையை! நினக்கு. |
|
| |
கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க, |
|
75 |
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, |
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து, |
|
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை |
|
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, |
|
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப, |
|
80 |
'வெம்பாதாக, வியல் நில வரைப்பு!' என |
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர், |
|
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட, |
|
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் |
|
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர் |
|
85 |
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், |
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர, |
|
வையை! நினக்கு மடை வாய்த்தன்று. |
|
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து, |
|
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர் |
|
90 |
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, |
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்? |
|
நீ உரைத்தி, வையை நதி! |
|
| |
ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள், |
|
வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி, |
|
95 |
சாய் இழை பிண்டித் தளிர் காதில், தையினாள்; |
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்; |
|
'குவளைக் குழைக்காதின் கோலச் செவியின் |
|
இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்' என்று |
|
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே, |
|
100 |
கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண். |
பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக் |
|
குவளைப் பசுந் தண்டு கொண்டு. |
|
கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை, |
|
'நில்லிகா!' என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே |
|
105 |
மல்லிகா மாலை வளாய். |
| |
தண்டு தழுவா, தாவு நீர் வையையுள், |
|
கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க, |
|
நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க, |
|
நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன் |
|
110 |
தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப; |
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ, |
|
தாய் அத் திறம் அறியாள், தாங்கி, 'தனிச் சேறல்; |
|
ஆயத்தில் கூடு' என்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே |
|
சேய் உற்ற கார் நீர் வரவு. |
|
115 |
'நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்' என்மாரும், |
'"கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல, |
|
விழுத் தகை பெறுக!" என வேண்டுதும்' என்மாரும், |
|
'பூ வீழ் அரியின் புலம்பப் போகாது, |
|
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!' என்மாரும், |
|
120 |
'"கிழவர் கிழவியர்" என்னாது, ஏழ்காறும், |
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!' என்மாரும் |
|
| |
'கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்: |
|
பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்: |
|
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது, |
|
125 |
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்: |
கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட |
|
கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை |
|
ஓர்மின்: பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப் |
|
பாடி, கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும் |
|
130 |
விரித்து ஆடும் தண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ |
நெரித்தாளை முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து, |
|
பின்னும்,கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின் |
|
என ஆங்கு |
|
| |
இன்ன பண்பின் நின் தைந் நீராடல் |
|
135 |
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட |
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம |
|
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் |
|
முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்; |
|
மறு முறை அமையத்தும் இயைக! |
|
140 |
நறு நீர் வையை நயத் தகு நிறையே! |
|