திரட்டு |
1. திருமால்
|
|
இருந்தையூர் அமர்ந்த இறைவனது அடி பரவுதல் |
|
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த, |
|
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து, |
|
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா |
|
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய |
|
5 |
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் |
திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது. |
|
இருந்தையூரின் சிறப்புகள்
மலை, குளம், வயல், ஆகியவற்றின் வளம் |
|
ஒருசார்-அணி மலர் வேங்கை,
மராஅ, மகிழம், |
|
பிணி நெகிழ் பிண்டி, நிவந்து
சேர்பு ஓங்கி, |
|
மணி நிறம் கொண்ட மலை. |
|
10 |
ஒருசார்-தண் நறுந் தாமரைப்
பூவின் இடைஇடை |
வண்ண வரி இதழ்ப் போதின்வாய்
வண்டு ஆர்ப்ப, |
|
விண் வீற்றிருக்கும் கய
மீன் விரி தகையின் |
|
கண் வீற்றிருக்கும் கயம். |
|
ஒருசார்-சாறுகொள் ஓதத்து
இசையொடு மாறு உற்று |
|
15 |
உழவின் ஓதை பயின்று, அறிவு
இழந்து |
திரிநரும், ஆர்த்து நடுநரும்,
ஈண்டி, |
|
திரு நயத்தக்க வயல். |
|
அந்தணர் இருக்கை |
|
ஒருசார்-அறத்தொடு வேதம்
புணர் தவம் முற்றி, |
|
விறல் புகழ் நிற்ப, விளங்கிய
கேள்வித் |
|
20 |
திறத்தின் திரிவு இல்லா
அந்தணர் ஈண்டி, |
அறத்தின் திரியா, பதி. |
|
வணிகரும் உழவர்களும் வாழும் தெருக்கள் |
|
ஆங்கு ஒருசார்-உண்ணுவ, பூசுவ,
பூண்ப, உடுப்பவை, |
|
மண்ணுவ, மணி பொன் மலைய,
கடல, |
|
பண்ணியம், மாசு அறு பயம்
தரு காருகப் |
|
25 |
புண்ணிய வணிகர் புனை மறுகு
ஒருசார்: |
விளைவதை வினை எவன் மென்
புல வன் புலக் |
|
களமர் உழவர் கடி மறுகு பிறசார்: |
|
ஆங்க அனையவை நல்ல நனி கூடும்
இன்பம் |
|
இயல் கொள நண்ணியவை. |
|
ஆதிசேடனது திருக்கோயிலில் மைந்தரும் மகளிரும் வழிபடுதல் |
|
30 |
வண்டு பொரேரென எழ, |
வண்டு பொரேரென எழும்; |
|
கடிப் புகு வேரிக் கதவமிற்
றோட்டி, |
|
கடிப்பு இகு காதில் கனம்
குழை தொடர- |
|
மிளிர் மின் வாய்ந்த விளங்கு
ஒளி நுதலார் |
|
35 |
ஊர் களிற்றன்ன செம்மலோரும், |
வாய் இருள் பனிச்சை வரி
சிலை புருவத்து |
|
ஒளி இழை ஒதுங்கிய ஒண் நுதலோரும், |
|
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும், |
|
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும், |
|
40 |
விடையோடு இகலிய விறல் நடையோரும், |
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும், |
|
கடல் நிரை திரையின் கரு
நரையோரும், |
|
சுடர் மதிக் கதிரெனத் தூ
நரையோரும்- |
|
மடையர், குடையர், புகையர்,
பூ ஏந்தி, |
|
45 |
இடை ஒழிவு இன்றி, அடியுறையார்
ஈண்டி, |
விளைந்தார் வினையின் விழுப்
பயன் துய்க்கும் |
|
துளங்கா விழுச் சீர்த் துறக்கம்
புரையும்- |
|
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் |
|
வரை கெழு செல்வன் நகர். |
|
பூ முடி நாகர் கோயிலில் எழும் ஓசைகள் முதலியன |
|
50 |
வண்டொடு தும்பியும் வண்
தொடை யாழ் ஆர்ப்ப, |
விண்ட கட கரி மேகமொடு அதிர, |
|
தண்டா அருவியொடு இரு முழவு
ஆர்ப்ப, |
|
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர்
கூடிப் |
|
புரிவுண்ட பாடலொடு ஆடலும்
தோன்ற, |
|
55 |
சூடு நறவொடு தாமம் முகிழ்
விரிய, |
சூடா நறவொடு காமம் விரும்ப, |
|
இனைய பிறவும், இவை போல்வனவும், |
|
அனையவை எல்லாம் இயையும்-புனை
இழைப் |
|
பூ முடி நாகர் நகர். |
|
குளவாய் அமர்ந்தான் நகரில் மகளிரும் மைந்தரும் வணங்கிப் பேறு பெறுதல் |
|
60 |
மணி மருள் தகை வகை நெறி
செறி ஒலி பொலி |
அவிர் நிமிர் புகழ் கூந்தல், |
|
பிணி நெகிழ் துளையினை தெளி
ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி |
|
மது மகிழ்பு அரி மலர் மகிழ்
உண்கண், வாணுதலோர்- |
|
மணி மயில் தொழில் எழில்
இகல் மலி திகழ் பிறிது |
|
இகழ் கடுங் கடாக் களிற்று
அண்ணலவரோடு, |
|
அணி மிக வந்து இறைஞ்ச, அல்
இகப்ப, பிணி நீங்க, |
|
நல்லவை எல்லாம் இயைதரும்-தொல்
சீர் |
|
வரை வாய் தழுவிய கல் சேர்
கிடக்கைக் |
|
குளவாய் அமர்ந்தான் நகர். |
|
ஆதிசேடனின் சிறப்புகளைப் போற்றுதல் |
|
65 |
திகழ் ஒளி முந்நீர் கடைந்த
அக் கால், வெற்புத் |
திகழ்பு எழ வாங்கித் தம்
சீர்ச் சிரத்து ஏற்றி, |
|
மகர மறி கடல் வைத்து நிறுத்து, |
|
புகழ்சால் சிறப்பின் இரு
திறத்தோர்க்கும் |
|
அமுது கடைய, இரு வயின் நாண்
ஆகி, |
|
மிகாஅ இரு வடம் ஆழியான்
வாங்க, |
|
70 |
உகாஅ வலியின் ஒரு தோழம்
காலம் |
அறாஅது அணிந்தாரும் தாம்; |
|
மிகாஅ மறலிய மே வலி எல்லாம் |
|
புகாஅ, எதிர் பூண்டாரும்
தாம்; |
|
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் |
|
75 |
அணிபோல் பொறுத்தாரும் தாஅம்;
பணிவு இல் சீர்ச் |
செல் விடைப் பாகன் திரிபுரம்
செற்றுழி, |
|
கல் உயர் சென்னி இமய வில்
நாண் ஆகித் |
|
தொல் புகழ் தந்தாரும் தாம். |
|
விண்ணப்பம் |
|
அணங்குடை அருந் தலை ஆயிரம்
விரித்த |
|
80 |
கணங்கொள் சுற்றத்து அண்ணலை
வணங்கி, |
நல் அடி ஏத்தி நிற் பரவுதும்- |
|
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு
ஒருங்கே. |
|
கடவுள் வாழ்த்து |
இப்பாடல், தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 121, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது. |
2. வையை |
மா நிலம் தோன்றாமை மலி பெயல்
தலைஇ, |
|
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும்
பொழுதினான், |
|
நாக நீள் மணி வரை நறு மலர் பல
விரைஇ, |
|
காமரு வையை கடுகின்றே, கூடல். |
|
புதுப் புனலை விரும்பி மக்கள் கோலம் கொண்டு செல்லுதல் |
|
5 |
'நீர் அணி கொண்டன்று வையை' என
விரும்பி, |
தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி, |
|
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின் |
|
சேர் அணி கொண்டு, நிறம் ஒன்று
வெவ்வேறு |
|
நீர் அணி கொண்ட நிறை அணி
அங்காடி, |
|
10 |
ஏர் அணி கொண்டார், இயல். |
வையைத் துறையில் மன்னனும் மக்களும் கூடுதல் |
|
கை புனை தாரினர், கண்ணியர், |
|
ஐ எனும் ஆவியர், ஆடையர், |
|
நெய் அணி கூந்தலர், பித்தையர், |
|
மெய் அணி யானை மிசையராய்,
ஒய்யெனத் |
|
15 |
தங்காச் சிறப்பின் தளிர்
இயலார் செல்ல; |
பொங்கு புரவிப்புடைப்
போவோரும், பொங்கு சீர் |
|
வையமும் தேரும் அமைப்போரும்;
எவ் வாயும் |
|
பொய்யாம் போய் என்னாப் புடை
கூட்டிப் போவநர் |
|
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார்;
வையத்துக்கு |
|
20 |
ஊடுவார்; ஊடல் ஒழிப்பார்;
உணர்குவார்: |
ஆடுவார், பாடுவார்; ஆர்ப்பார்,
நகுவார்; நக்கு |
|
ஓடுவார்; ஓடித் தளர்வார்; போய்,
உற்றவரைத் |
|
தேடுவார்; ஊர்க்குத் திரிவார்
இலராகி- |
|
கற்றாரும், கல்லாதவரும், கயவரும், |
|
25 |
பெற்றாரும், பெற்றாற் பிழையாத
பெண்டிரும், |
பொற்றேரான் தானும், பொலம்
புரிசைக் கூடலும், |
|
முற்றின்று-வையைத் துறை. |
|
நீராடற் காட்சிகள் தலைவன் பரத்தைமையைத் தோழி குறிப்பால் உணர்த்துதல் |
|
துறை ஆடும் காதலர் தோள் புணையாக, |
|
மறை ஆடுவாரை அறியார் மயங்கி, |
|
30 |
பிறை ஏர் நுதலியர் எல்லாரும்
தம் முன் |
நிகழும் நிகழ்ச்சி எம்பால்
என்று, ஆங்கே, |
|
இகல் பல செல்வம் விளைத்தவட்
கண்டு, இப்பால், |
|
அகல் அல்கும் வையைத் துறை. |
|
காதலான் மார்பின் கமழ் தார்,
புனல் வாங்கி, |
|
35 |
ஏதிலாள் கூந்தலிடைக் கண்டு,
'மற்று அது |
தா தா' என்றாளுக்கு, 'தானே புறன்
தந்து |
|
வேய்தந்தது'. 'என்னை? விளைந்தமை
மற்று அது |
|
நோதலே செய்யேன், நுணங்கு
இழையாய்! இச் செவ்வி |
|
போதல் உண்டாம்கொல்? அறிந்து
புனல் புணர்த்தது! |
|
40 |
ஓஒ! பெரிதும் வியப்பு. |
கயத் தக்க பூப் பெய்த காமக்
கிழமை |
|
நயத் தகு நல்லாளைக் கூடுமா கூடும் |
|
முயக்குக்கு, செவ்வி முலையும்
முயக்கத்து |
|
நீரும் அவட்குத் துணை; கண்ணின்
நீர் விட்டோய்! |
|
45 |
நீயும் அவட்குத் துணை. |
குலமகளிர் உரிமை மைந்தரோடு நீராடுதல் |
|
பணிவு இல் உயர் சிறப்பின்
பஞ்சவன் கூடல், |
|
மணி எழில், மா மேனி, முத்த
முறுவல், |
|
அணி பவளச் செவ் வாய், அறம்
காவற் பெண்டிர் |
|
மணி அணிந்த தம் உரிமை
மைந்தரோடு ஆடித் |
|
50 |
தணிவின்று, வையைப் புனல். |
தலைவன் கூற்று |
|
'புனலூடு போவது ஓர் பூ மாலை
கொண்டை, |
|
எனலூழ் வகை எய்திற்று' என்று
ஏற்றுக்கொண்ட |
|
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி, |
|
நினைவாரை நெஞ்சு இடுக்கண்
செய்யும் கனல்புடன், |
|
55 |
கூடாமுன், ஊடல் கொடிய திறம்
கூடினால், |
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து
ஊர்ந்து. |
|
என ஆங்கு- |
|
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம் |
|
'ஈப் பாய் அடு நறாக் கொண்டது,
இவ் யாறு' எனப் |
|
பார்ப்பார் ஒழிந்தார், படிவு. |
|
60 |
'மைந்தர் மகளிர் மண விரை
தூவிற்று' என்று, |
அந்தணர் தோயலர், ஆறு. |
|
'வையை தேம் மேவ வழுவழுப்பு
உற்றென' |
|
ஐயர், வாய்பூசுறார், ஆறு. |
|
வையை நுரை முதலியவற்றோடு பெருகிச் சென்ற வகை |
|
விரைபு இரை விரை நுரை கரை அழிபு
இழிபு ஊர ஊர்தரும் புனல், |
|
65 |
கரையொடு கடலிடை வரையொடு
கடலிடை நிரைநிரை நீர் தரு நுரை, |
நுரையுடன் மதகுதொறு இழிதரு புனல்
கரை புரளிய செலும்மறி கடல், |
|
புகும் அளவுஅளவு இயல் இசை சிறை
தணிவின்று,வெள்ள மிகை. |
|
திருமருத முன்துறை |
|
வரை பல புரை உயர் கயிறு அணி
பயில் தொழில் |
|
மணி அணி யானைமிசை, மைந்தரும்
மடவாரும், |
|
70 |
நிரைநிரை குழீஇயினர் உடன்
சென்று, |
குரு மணி யானை இயல் தேர்ப்
பொருநன் |
|
திருமருத முன்துறை முற்றம் குறுகி, |
|
தெரி மருதம் பாடுப, பிணி கொள்
யாழ்ப் பாணர். |
|
பாடிப் பாடி, பாய்புனல் |
|
75 |
ஆடி ஆடி, அருளியவர் |
ஊடி ஊடி, உணர்த்தப் புகன்று |
|
கூடிக் கூடி, மகிழ்பு மகிழ்பு, |
|
தேடித் தேடி, சிதைபு சிதைபு, |
|
சூடிச் சூடி, தொழுது தொழுது, |
|
80 |
மழுபொடு நின்ற மலி புனல் வையை |
விழு தகை நல்லாரும் மைந்தரும் ஆடி, |
|
இமிழ்வது போன்றது, இந்
நீர்-குணக்குச் சான்றீர்! |
|
முழுவதும் மிச்சிலா உண்டு. |
|
சாந்து, பூ, முதலியவற்றால் நீர் வேறுபடுதல் |
|
சாந்தும், கமழ் தாரும்,
கோதையும், சுண்ணமும், |
|
85 |
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன |
பூவினும், அல்லால், சிறிதானும்
நீர் நிறம் |
|
தான் தோன்றாது-இவ் வையை ஆறு. |
|
மழை நீர் அறு குளத்து வாய்பூசி
ஆடும் |
|
கழு நீர மஞ்சனக் குங்குமக்
கலங்கல் |
|
90 |
வழி நீர்; விழு நீர அன்று-வையை. |
பாண்டியன் கூடலாரொடு வையை நீராடிய மாட்சி |
|
வெரு வரு கொல் யானை வீங்கு தோள்
மாறன், |
|
உரு கெழு கூடலவரோடு, வையை |
|
வரு புனல் ஆடிய தன்மை
பொருவுங்கால்- |
|
இரு முந்நீர் வையம் படித்து என்னை?
யான் ஊர்க்கு |
|
95 |
ஒரு நிலையும் ஆற்ற இயையா! அரு
மரபின், |
அந்தர வான் யாற்று, ஆயிரம்
கண்ணினான் |
|
இந்திரன் ஆடும் தகைத்து. |
இப் பாடல், தொல்காப்பியம், செய்யுள் இயல், சூ. 118 இளம்பூரணர் உரையில் கண்டது. |
3. வையை |
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப, |
|
... |
|
செறுநர் விழையாச் செறிந்த நம்
கேண்மை |
|
மறு முறையானும் இயைக! நெறி மாண்ட |
|
5 |
தண் வரல் வையை எமக்கு. |
இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 121, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது. இப் பகுதி 'அறவோர் உள்ளார்' என்று தொடங்கும் பரிபாடலின் இறுதி என்று தெரிய வருகின்றது. |
4. வையை
|