களிற்றியானை நிரை |
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், |
|
உருவக் குதிரை மழவர் ஓட்டிய |
|
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, |
|
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண், |
|
5 |
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய |
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம் |
|
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த |
|
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் |
|
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக, |
|
10 |
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், |
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, |
|
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின், |
|
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும் |
|
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய, |
|
15 |
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை |
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் |
|
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று, |
|
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன் |
|
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே? |
|
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச்
சொல்லியது-மாமூலனார் | |
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை |
|
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த |
|
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு |
|
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் |
|
5 |
அறியாது உண்ட கடுவன் அயலது |
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது, |
|
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் |
|
குறியா இன்பம், எளிதின், நின் மலைப் |
|
பல் வேறு விலங்கும், எய்தும் நாட! |
|
10 |
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? |
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், |
|
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, |
|
இவளும், இனையள்ஆயின், தந்தை |
|
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, |
|
15 |
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் |
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; |
|
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. |
|
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன |
|
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக் |
|
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, |
|
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய, |
|
5 |
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை |
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி, |
|
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
10 |
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் |
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம், |
|
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி, |
|
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய் |
|
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா |
|
15 |
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், |
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை |
|
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் |
|
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே? |
|
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார். | |
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு |
|
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ, |
|
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின், |
|
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப, |
|
5 |
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, |
கருவி வானம் கதழ் உறை சிதறி, |
|
கார் செய்தன்றே, கவின் பெறு கானம். |
|
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, |
|
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய, |
|
10 |
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த |
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி, |
|
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன், |
|
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன், |
|
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது, |
|
15 |
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் |
போது அவிழ் அலரின் நாறும் |
|
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. |
|
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார் | |
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள், |
|
விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல, |
|
நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ, |
|
குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற |
|
5 |
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள், |
கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல், |
|
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் |
|
முளிந்த ஓமை முதையல்அம் காட்டு, |
|
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி, |
|
10 |
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப, |
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன், |
|
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி, |
|
பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல், |
|
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர, |
|
15 |
பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம் |
இறப்ப எண்ணுதிர் ஆயின் "அறத்தாறு |
|
அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி |
|
அன்ன ஆக' என்னுநள் போல, |
|
முன்னம் காட்டி, முகத்தின் உரையா, |
|
20 |
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி, |
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு, |
|
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத் |
|
தூ நீர் பயந்த துணை அமை பிணையல் |
|
மோயினள் உயிர்த்த காலை, மா மலர் |
|
25 |
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் |
கண்டே கடிந்தனம், செலவே ஒண்டொடி |
|
உழையம் ஆகவும் இனைவோள் |
|
பிழையலள்மாதோ, பிரிதும் நாம் எனினே! |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, |
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, |
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை, |
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், |
|
5 |
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் |
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், |
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, |
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர் |
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு, |
|
10 |
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, |
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, |
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், |
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என, |
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் |
|
15 |
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! |
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து, |
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய், |
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், |
|
20 |
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் |
இளமை சென்று தவத் தொல்லஃதே; |
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர் | |
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின; |
|
தலை முடிசான்ற; தண் தழை உடையை; |
|
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்; |
|
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய; |
|
5 |
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; |
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்! |
|
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என, |
|
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி, |
|
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை |
|
10 |
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! |
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர் |
|
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள் |
|
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை, |
|
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென, |
|
15 |
பிற்படு பூசலின் வழிவழி ஓடி, |
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை, |
|
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு |
|
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி, |
|
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல், |
|
20 |
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த |
துய்த் தலை வெண் காழ் பெறூஉம் |
|
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. - கயமனார். | |
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த |
|
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை |
|
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின், |
|
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும், |
|
5 |
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய |
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை |
|
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் |
|
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு |
|
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், |
|
10 |
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, |
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் |
|
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, |
|
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, |
|
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, |
|
15 |
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் |
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, |
|
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம், |
|
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார். | |
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின், |
|
வில்லோர் தூணி வீங்கப் பெய்த |
|
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை, |
|
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு, |
|
5 |
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் |
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு, |
|
ஆலி வானின் காலொடு பாறி, |
|
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின், |
|
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் |
|
10 |
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய |
|
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி, |
|
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் |
|
குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து, |
|
15 |
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, |
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின் |
|
எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண் |
|
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ, |
|
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி, |
|
20 |
கன்று புகு மாலை நின்றோள் எய்தி, |
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, |
|
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி, |
|
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ |
|
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல், |
|
25 |
அம் தீம் கிளவிக் குறுமகள் |
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? |
|
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. - கல்லாடனார் | |
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய, |
|
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த, |
|
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை, |
|
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப! |
|
5 |
நெய்தல் உண்கண் பைதல கலுழ, |
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும் |
|
அரிது உற்றனையால் பெரும! உரிதினின் |
|
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு |
|
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் |
|
10 |
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் |
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி, |
|
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும் |
|
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே. |
|
இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார் | |
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் |
|
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு, |
|
இலை இல மலர்ந்த முகை இல் இலவம் |
|
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த |
|
5 |
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி, |
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் |
|
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென, |
|
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப் |
|
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர், |
|
10 |
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் |
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர, |
|
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து |
|
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும் |
|
அழுதல் மேவல ஆகி, |
|
15 |
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே! |
தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்'என்பது படச் சொல்லியது. - ஒளவையார் | |
யாயே, கண்ணினும் கடுங் காதலளே; |
|
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப, |
|
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்; |
|
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், |
|
5 |
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; |
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும், |
|
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை, |
|
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார், |
|
குறவர் ஊன்றிய குரம்பை புதைய, |
|
10 |
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் |
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம், |
|
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும் |
|
நல் வரை நாட! நீ வரின், |
|
மெல்லியல் ஓரும் தான் வாழலளே. |
|
பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - கபிலர் | |
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், |
|
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத் |
|
தெறல் அரு மரபின் கடவுட் பேணி, |
|
குறவர் தந்த சந்தின் ஆரமும், |
|
5 |
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் |
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் |
|
குழியில் கொண்ட மராஅ யானை |
|
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது, |
|
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும், |
|
10 |
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் |
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின், |
|
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு, |
|
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து, |
|
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், |
|
15 |
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட |
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை, |
|
கவவு இன்புறாமைக் கழிக வள வயல், |
|
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற |
|
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல் |
|
20 |
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, |
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை, |
|
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த |
|
வெண் குருகு நரல, வீசும் |
|
நுண் பல் துவலைய தண் பனி நாளே! |
|
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார் | |
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி, |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு |
|
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய |
|
5 |
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ, |
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள, |
|
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர் |
|
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர, |
|
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் |
|
10 |
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற, |
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
|
மாலையும் உள்ளார்ஆயின், காலை |
|
யாங்கு ஆகுவம்கொல்? பாண!' என்ற |
|
மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன், |
|
15 |
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென, |
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து, |
|
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே |
|
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக, |
|
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக் |
|
20 |
கார் மழை முழக்கு இசை கடுக்கும், |
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே. |
|
பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தனார் | |
எம் வெங் காமம் இயைவது ஆயின், |
|
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர் |
|
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த |
|
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித் |
|
5 |
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, |
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின் |
|
செறிந்த சேரிச் செம்மல் மூதூர், |
|
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல |
|
தோழிமாரும் யானும் புலம்ப, |
|
10 |
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் |
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச் |
|
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி, |
|
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத் |
|
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க, |
|
15 |
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, |
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் |
|
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு |
|
குன்ற வேயின் திரண்ட என் |
|
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே! |
|
மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார் | |
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத் |
|
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும், |
|
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய், |
|
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல், |
|
5 |
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை, |
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே! |
|
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும் |
|
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி, |
|
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை, |
|
10 |
'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து, |
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன், |
|
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை? |
|
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற் |
|
கரைய, வந்து விரைவனென் கவைஇ |
|
15 |
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா, |
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும் |
|
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து |
|
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின் |
|
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே? |
|
பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. - சாகலாசனார் | |
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும், |
|
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும், |
|
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ, |
|
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென, |
|
5 |
முயங்கினள் வதியும்மன்னே! இனியே, |
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள், |
|
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி, |
|
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என் |
|
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி |
|
10 |
வல்லகொல், செல்லத் தாமே கல்லென |
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின், |
|
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த, |
|
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி |
|
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும், |
|
15 |
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல், |
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து |
|
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின், |
|
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர், |
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர், |
|
20 |
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி, |
வைகுறு மீனின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து, |
|
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று, |
|
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி, |
|
மராஅ யானை மதம் தப ஒற்றி, |
|
5 |
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் |
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து, |
|
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து |
|
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப! |
|
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள், |
|
10 |
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும் |
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் |
|
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால், |
|
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக் |
|
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை, |
|
15 |
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில், |
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை |
|
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய் |
|
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே. |
|
தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. - கபிலர் | |
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி |
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து |
|
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை, |
|
5 |
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம், |
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று, |
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது, |
|
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே |
|
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின் |
|
10 |
சேயிதழ் அனைய ஆகி, குவளை |
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை, |
|
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி, |
|
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல் |
|
வெய்ய உகுதர, வெரீஇ, பையென, |
|
15 |
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை |
பூ வீ கொடியின் புல்லெனப் போகி, |
|
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக, |
|
இயங்காது வதிந்த நம் காதலி |
|
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே! |
|
நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார் | |
பெருநீர் அழுவத்து எந்தை தந்த |
|
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி, |
|
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ, |
|
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி, |
|
5 |
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் |
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, |
|
கொண்டல் இடு மணல் குரவை முனையின் |
|
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி, |
|
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப் |
|
10 |
பல் பூங் கானல் அல்கினம் வருதல் |
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர், |
|
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை |
|
கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை, |
|
எல்லையும் இரவும் என்னாது, கல்லென |
|
15 |
வலவன் ஆய்ந்த வண் பரி |
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே. |
|
பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது. - உலோச்சனார் | |
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் |
|
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல், |
|
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத் |
|
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள், |
|
5 |
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் |
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய், |
|
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப் |
|
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே, |
|
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர் |
|
10 |
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் |
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி, |
|
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல், |
|
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும், |
|
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில், |
|
15 |
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை |
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட, |
|
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட் |
|
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க, |
|
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச் |
|
20 |
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின் |
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த |
|
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர் |
|
ஊறாது இட்ட உவலைக் கூவல், |
|
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
|
25 |
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, |
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும் |
|
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே. |
|
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார் | |
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும் |
|
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன் |
|
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் |
|
இது என அறியா மறுவரற் பொழுதில், |
|
5 |
'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை |
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என, |
|
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற, |
|
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி, |
|
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து, |
|
10 |
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், |
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள், |
|
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த |
|
சாரற் பல் பூ வண்டு படச் சூடி, |
|
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் |
|
15 |
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல, |
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை |
|
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப, |
|
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து, |
|
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த |
|
20 |
நோய் தணி காதலர் வர, ஈண்டு |
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே? |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து, தலைமகள் ஆற்றாளாக,தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது;தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக் கண்ணியார். | |
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல், |
|
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி; |
|
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை |
|
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ, |
|
5 |
காடே கம்மென்றன்றே; அவல, |
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர், |
|
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை |
|
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ, |
|
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே; |
|
10 |
அனையகொல் வாழி, தோழி! மனைய |
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும் |
|
மௌவல், மாச் சினை காட்டி, |
|
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் | |
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த |
|
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன, |
|
தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை, |
|
சிதரல் அம் துவலை தூவலின், மலரும் |
|
5 |
தைஇ நின்ற தண் பெயல் கடைநாள், |
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை, |
|
விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி, |
|
மங்குல் மா மழை, தென் புலம் படரும் |
|
பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி, |
|
10 |
தம் ஊரோளே, நன்னுதல்; யாமே, |
கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து, |
|
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு, |
|
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி, |
|
கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு, |
|
15 |
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து, |
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள், |
|
இரவுத் துயில் மடிந்த தானை, |
|
உரவுச் சின வேந்தன் பாசறையேமே. |
|
தலைமகன் பருவங் கண்டு சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - ஆவூர் மூலங் கிழார் | |
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய், |
|
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத் |
|
தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப் |
|
பைந் தாது அணிந்த போது மலி எக்கர், |
|
5 |
வதுவை நாற்றம் புதுவது கஞல, |
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில் |
|
படு நா விளி யானடுநின்று, அல்கலும் |
|
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ, |
|
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண், |
|
10 |
சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர் |
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன, |
|
இகழுநர் இகழா இள நாள் அமையம் |
|
செய்தோர் மன்ற குறி" என, நீ நின் |
|
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, |
|
15 |
வாராமையின் புலந்த நெஞ்சமொடு, |
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என, |
|
மெல்லிய இனிய கூறி, வல்லே |
|
வருவர் வாழி தோழி! பொருநர் |
|
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப் |
|
20 |
பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன், |
இன் இசை இயத்தின் கறங்கும் |
|
கல்மிசை அருவிய காடு இறந்தோரே. |
|
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் | |
கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற, |
|
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர் |
|
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும் |
|
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப் |
|
5 |
புலத்தல் கூடுமோ தோழி! அல்கல் |
பெருங் கதவு பொருத யானை மருப்பின் |
|
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி, |
|
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி |
|
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி, |
|
10 |
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று |
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே |
|
புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ, |
|
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை |
|
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் |
|
15 |
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே; |
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக் |
|
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச் |
|
செவிலி கை என் புதல்வனை நோக்கி, |
|
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ |
|
20 |
செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என் |
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு, |
|
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய், |
|
சிறு புறம் கவையினனாக, உறு பெயல் |
|
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய் |
|
25 |
மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே |
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே? |
|
தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி | |
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை |
|
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் |
|
கானம் கடிய என்னார், நாம் அழ, |
|
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார், |
|
5 |
செல்ப" என்ப' என்போய்! நல்ல |
மடவைமன்ற நீயே; வடவயின் |
|
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை, |
|
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் |
|
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன |
|
10 |
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் |
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப |
|
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத் |
|
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப் |
|
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட, |
|
15 |
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் |
குருதியொடு துயல்வந்தன்ன நின் |
|
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே? |
|
செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைக்கணக்காயனார் | |
மெய்யின் தீரா மேவரு காமமொடு |
|
எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி! |
|
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே |
|
அருவி ஆன்ற பைங் கால் தோறும் |
|
5 |
இருவி தோன்றின பலவே. நீயே, |
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி, |
|
பரியல் நாயொடு பல் மலைப் படரும் |
|
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின் |
|
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து, |
|
10 |
கிள்ளைத் தெள் விளி இடைஇடை பயிற்றி, |
ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை, |
|
'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என, |
|
பிறர்த் தந்து நிறுக்குவள்ஆயின், |
|
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. - பாண்டியன் அறிவுடைநம்பி | |
"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள், |
|
கிடந்து உயிர் மறுகுவதுஆயினும், இடம் படின் |
|
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த |
|
தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப, |
|
5 |
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று |
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின் |
|
மாவின் நறு வடி போல, காண்தொறும் |
|
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் |
|
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம், |
|
10 |
வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண் |
தாழக் கூறிய தகைசால் நல் மொழி |
|
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின் |
|
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க |
|
வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி |
|
15 |
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை, |
கொம்மை வாடிய இயவுள் யானை |
|
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி, |
|
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும் |
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை, |
|
20 |
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு |
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு |
|
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை, |
|
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே! |
|
வினை முற்றி மீண்ட தலைமகன், 'எம்மையும் நினைத்தறிதிரோ?' என்ற தலைமகட்குச் சொல்லியது. - வெள்ளாடியனார் | |
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை, |
|
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து, |
|
துணை புணர் உவகையர் பரத மாக்கள் |
|
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி, |
|
5 |
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும் |
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ, |
|
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி, |
|
பெருங் களம் தொகுத்த உழவர் போல, |
|
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி, |
|
10 |
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி, |
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ! |
|
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள் |
|
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் |
|
தண் நறுங் கானல் வந்து, 'நும் |
|
15 |
வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே? |
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் | |
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் |
|
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி, |
|
'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என, |
|
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து, |
|
5 |
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து |
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு, |
|
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட, |
|
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும், |
|
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன |
|
10 |
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் |
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி, |
|
'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு |
|
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத் |
|
தமிழ் கெழு மூவர் காக்கும் |
|
15 |
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே. |
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் | |
நெருநல் எல்லை ஏனல் தோன்றி, |
|
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து, |
|
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள, |
|
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி, |
|
5 |
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண் |
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா, |
|
'சூரரமகளிரின் நின்ற நீ மற்று |
|
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச் |
|
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு |
|
10 |
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என் |
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல் |
|
கடிய கூறி, கை பிணி விடாஅ, |
|
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற |
|
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின் |
|
15 |
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து, |
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் |
|
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ. |
|
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே |
|
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று, |
|
20 |
என் குறைப் புறனிலை முயலும் |
அண்கணாளனை நகுகம், யாமே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்.- நல்வெள்ளியார் | |
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி, |
|
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய, |
|
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து |
|
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை, |
|
5 |
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் |
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் |
|
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் |
|
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள் |
|
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண் |
|
10 |
தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய் |
வெம் பரல் அதர குன்று பல நீந்தி, |
|
யாமே எமியம் ஆக, நீயே |
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது |
|
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை, |
|
15 |
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள், |
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின் |
|
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல. |
|
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம் |
|
செய்வினை ஆற்றுற விலங்கின், |
|
20 |
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே? |
தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | |
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல் |
|
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில், |
|
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன |
|
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை |
|
5 |
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் |
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி, |
|
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை, |
|
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் |
|
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற, |
|
10 |
செல்க, தேரே நல் வலம் பெறுந! |
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி |
|
துறை விட்டன்ன தூ மயிர் எகினம் |
|
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், |
|
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி, |
|
15 |
'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என, |
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென |
|
மழலை இன் சொல் பயிற்றும் |
|
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள், |
|
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப |
|
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை, |
|
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர் |
|
5 |
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த |
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர் |
|
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார், |
|
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து, |
|
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும் |
|
10 |
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம் |
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து அணிந்து, |
|
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன் |
|
மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல |
|
துஞ்சா முழவின் கோவற் கோமான் |
|
15 |
நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை, |
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் |
|
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு, |
|
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே! |
|
மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற் கீரத்தனார் | |
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் |
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து, |
|
5 |
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, |
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு, |
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! |
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, |
|
10 |
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், |
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு |
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே, |
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப, |
|
15 |
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், |
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி, |
|
நார் அரி நறவின் எருமையூரன், |
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் |
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று |
|
20 |
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் |
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல, |
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை, |
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! |
|
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர் | |
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக் |
|
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர் |
|
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள், |
|
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப, |
|
5 |
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி, |
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை |
|
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக் |
|
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து, |
|
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை |
|
10 |
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, |
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர, |
|
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக் |
|
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை |
|
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய |
|
15 |
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, |
மருதமர நிழல், எருதொடு வதியும் |
|
காமர் வேனில்மன் இது, |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே! |
|
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார் | |
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன், |
|
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன், |
|
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல் |
|
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி, |
|
5 |
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன். |
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் |
|
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று |
|
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன் |
|
ஆடாமையின் கலுழ்பு இல தேறி, |
|
10 |
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் |
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை |
|
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல் |
|
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி |
|
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து; |
|
15 |
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு |
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக் |
|
கூஉம் கணஃது எம் ஊர்' என |
|
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே. |
|
தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் | |
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து, |
|
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின் |
|
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க, |
|
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின் |
|
5 |
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து |
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி |
|
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை |
|
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக் |
|
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின், |
|
10 |
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு |
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து |
|
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு, |
|
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென, |
|
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி, |
|
15 |
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப் |
பரந்து படு பாயல் நவ்வி பட்டென, |
|
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு, |
|
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு, |
|
'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின் |
|
20 |
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின் |
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி, |
|
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து, |
|
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின் |
|
ஏற்று ஏக்கற்ற உலமரல் |
|
25 |
போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே! |
பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச் செங்கண்ணனார் | |
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப, |
|
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப, |
|
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி |
|
குவை இரும் புன்னைக் குடம்பை சேர, |
|
5 |
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, |
தாழை தளரத் தூக்கி, மாலை |
|
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் |
|
காமர் நெஞ்சம் கையறுபு இனைய, |
|
துயரம் செய்து நம் அருளார் ஆயினும் |
|
10 |
அறாஅலியரோ அவருடைக் கேண்மை! |
அளி இன்மையின் அவண் உறை முனைஇ, |
|
வாரற்கதில்ல தோழி! கழனி |
|
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் |
|
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை |
|
15 |
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை |
அகமடல் சேக்கும் துறைவன் |
|
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார் | |
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப, |
|
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் |
|
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப, |
|
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து, |
|
5 |
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, |
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் |
|
ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப, |
|
கோழிணர் எதிரிய மரத்த, கவினி, |
|
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில், |
|
10 |
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய், |
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த |
|
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ |
|
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர் |
|
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன |
|
15 |
அம் கலுழ் மாமை கிளைஇய, |
நுண் பல் தித்தி, மாஅயோளே? |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார் | |
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக் |
|
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச் |
|
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண், |
|
தளிர் ஏர் மேனி, மாஅயோயே! |
|
5 |
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச, |
கோடை நீடிய பைது அறு காலை, |
|
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும் |
|
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல் |
|
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி, |
|
10 |
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை, |
பல்லோர் உவந்த உவகை எல்லாம் |
|
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை |
|
ஓங்கித் தோன்றும் உயர் வரை |
|
வான் தோய் வெற்பன் வந்தமாறே |
|
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- கபிலர் | |
கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை |
|
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி, |
|
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி |
|
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய, |
|
5 |
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி, |
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது |
|
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய், |
|
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே |
|
கொய் அகை முல்லை காலொடு மயங்கி, |
|
10 |
மை இருங் கானம் நாறும் நறு நுதல், |
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை |
|
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும் |
|
அளியரோ அளியர்தாமே அளி இன்று |
|
ஏதில் பொருட்பிணிப் போகி, தம் |
|
15 |
இன் துணைப் பிரியும் மடமையோரே! |
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரையாசிரியர் நல்லந்துவனார் | |
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும் |
|
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே; |
|
முரண் செறிந்திருந்த தானை இரண்டும் |
|
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர் |
|
5 |
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது, |
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய |
|
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி, |
|
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி, |
|
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு |
|
10 |
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், |
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென, |
|
கண்டது நோனானாகி, திண் தேர்க் |
|
கணையன் அகப்பட, கழுமலம் தந்த |
|
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி |
|
15 |
அழும்பில் அன்ன அறாஅ யாணர், |
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை, |
|
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை, |
|
தண் குடவாயில் அன்னோள் |
|
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே! |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார் | |
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் |
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப, |
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து, |
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு, |
|
5 |
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் |
காடு இறந்தனரே, காதலர். மாமை, |
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து |
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே, |
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
10 |
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி, |
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் |
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே, |
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
ஆதிமந்தி போல, பேதுற்று |
|
15 |
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார், |
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல், |
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய |
|
உடை மதில் ஓர் அரண் போல, |
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே! |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான் |
|
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து, |
|
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி, |
|
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய |
|
5 |
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை |
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர! |
|
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று, |
|
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல், |
|
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து, |
|
10 |
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம் |
கூறேம். வாழியர், எந்தை! செறுநர் |
|
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும் |
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் |
|
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் |
|
15 |
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க; |
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ? |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார் | |
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப |
|
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து |
|
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை |
|
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து, |
|
5 |
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி |
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து, |
|
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும் |
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு, |
|
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின் |
|
10 |
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின், |
குறு நடைப் புறவின் செங் காற் சேவல் |
|
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும் |
|
புலம்பொடு வந்த புன்கண் மாலை, |
|
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி, |
|
15 |
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன் |
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச் |
|
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின் |
|
வேய் புரை பணைத் தோள், பாயும் |
|
நோய் அசா வீட, முயங்குகம் பலவே. |
|
தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் | |
'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள், |
|
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு, |
|
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம் |
|
யானும் தெற்றென உணரேன். மேல் நாள், |
|
5 |
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு |
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி, |
|
'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற |
|
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ் |
|
ஊசி போகிய சூழ் செய் மாலையன், |
|
10 |
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன், |
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி, |
|
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு, |
|
'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என |
|
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு, |
|
15 |
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி, |
நாணி நின்றனெமாக, பேணி, |
|
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் |
|
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப் |
|
பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப் |
|
20 |
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, |
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச் |
|
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே. |
|
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து, |
|
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன் |
|
25 |
மகனே தோழி!' என்றனள். |
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே. |
|
செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது. - தங்கால் முடக் கொற்றனார் | |
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள் |
|
அளியும், அன்பும், சாயலும், இயல்பும், |
|
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என, |
|
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த |
|
5 |
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, |
குறுக வந்து, குவவுநுதல் நீவி, |
|
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள் |
|
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப, |
|
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ! |
|
10 |
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி, |
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய |
|
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் |
|
காடு உடன்கழிதல் அறியின் தந்தை | |
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர், |
|
15 |
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, |
கோதை ஆயமொடு ஓரை தழீஇ, |
|
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள் |
|
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே! |
|
உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார் | |
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி, |
|
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்; |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்; |
|
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப, |
|
5 |
பகலும் நம்வயின் அகலானாகிப் |
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன், |
|
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி, |
|
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது, |
|
மல்லல் மூதூர் மறையினை சென்று, |
|
10 |
சொல்லின் எவனோ பாண! 'எல்லி |
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் |
|
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என, |
|
கண் நிறை நீர் கொடு கரக்கும், |
|
ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே. |
|
தோழி பாணனுக்குச் சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார் | |
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற, |
|
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து, |
|
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை, |
|
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி, |
|
5 |
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி |
எருவைச் சேவல் கரிபு சிறை தீய, |
|
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை, |
|
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி |
|
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின் |
|
10 |
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது, |
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ் |
|
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும் |
|
மனைமுதல் வினையொடும் உவப்ப, |
|
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே. |
|
பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.- பெருந்தேவனார் | |
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல், |
|
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் |
|
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள் |
|
இன்னா இசைய பூசல் பயிற்றலின், |
|
5 |
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் |
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம் |
|
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச் |
|
சிலையுடை இடத்தர் போதரும் நாடன் |
|
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு |
|
10 |
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என |
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் |
|
சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை |
|
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள் |
|
ஆய்மலர் உண்கண் பசலை |
|
15 |
காம நோய்' எனச் செப்பாதீமே. |
தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி,'அறத்தொடு நிற்றும்' என, தலைமகள் சொல்லியது. - நொச்சிநியமங் கிழார் | |
அறியாய், வாழி தோழி! இருள் அற |
|
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக் |
|
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய, |
|
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய், |
|
5 |
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு |
|
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில் |
|
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை |
|
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின், |
|
10 |
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் |
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் |
|
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும், |
|
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல் |
|
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் |
|
15 |
பொருளே காதலர் காதல்; |
'அருளே காதலர்' என்றி, நீயே. |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார் | |
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப, |
|
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற் |
|
காரும் ஆர்கலி தலையின்று. தேரும் |
|
ஓவத்தன்ன கோபச் செந் நிலம், |
|
5 |
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத் |
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய, |
|
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி, |
|
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் |
|
10 |
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர் |
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க, |
|
மனைமனைப் படரும் நனை நகு மாலை, |
|
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் |
|
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப் |
|
15 |
புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர் |
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி, |
|
'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! |
|
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி, |
|
வருகுவைஆயின், தருகுவென் பால்' என, |
|
20 |
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி, |
திதலை அல்குல் எம் காதலி |
|
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே. |
வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் | |
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின், |
|
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை, |
|
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின், |
|
விளி முறை அறியா வேய் கரி கானம், |
|
5 |
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் |
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம் |
|
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ, |
|
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு |
|
கண்படை பெறேன், கனவ ஒண் படைக் |
|
10 |
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் |
பொருது புண் நாணிய சேரலாதன் |
|
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென, |
|
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் |
|
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர், |
|
15 |
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் |
காதல் வேண்டி, எற் துறந்து |
|
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே. |
|
புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார் | |
நகை ஆகின்றே தோழி! நெருநல் |
|
மணி கண்டன்ன துணி கயம் துளங்க, |
|
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
5 |
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய |
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப, |
|
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் |
|
தண் துறை ஊரன் திண் தார் அகலம் |
|
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய, |
|
10 |
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் |
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு, |
|
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு |
|
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று, |
|
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற |
|
15 |
என்னும் தன்னும் நோக்கி, |
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே. |
பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை |
|
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி, |
|
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது, |
|
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து, |
|
5 |
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக் |
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ் |
|
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர, |
|
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும் |
|
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை, |
|
10 |
யாமே எமியம்ஆக, தாமே |
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின் |
|
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர் |
|
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ |
|
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
15 |
முதுநீர் முன்துறை முசிறி முற்றி, |
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் |
|
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து, |
|
பானாட் கங்குலும் பகலும் |
|
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே? |
|
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.- நக்கீரர் | |
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ, |
|
மன் உயிர் மடிந்த பானாட் கங்குல், |
|
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது, |
|
வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத் |
|
5 |
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை, |
கூதிர், இல் செறியும் குன்ற நாட! |
|
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ் |
|
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற, |
|
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே |
|
10 |
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் |
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை |
|
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி, |
|
மனைமரம் ஒசிய ஒற்றிப் |
|
பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே. |
|
சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் | |
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப் |
|
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும் |
|
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது |
|
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை, |
|
5 |
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் |
மரம் செல மிதித்த மாஅல் போல, |
|
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை, |
|
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள் |
|
படி ஞிமிறு கடியும் களிறே தோழி! |
|
10 |
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், |
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து, |
|
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை, |
|
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த |
|
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம் |
|
15 |
தாம் பாராட்டிய காலையும் உள்ளார் |
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு |
|
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப் |
|
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன் | |
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க, |
|
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை |
|
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, |
|
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு |
|
5 |
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, |
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் |
|
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம் |
|
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய; |
|
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை, |
|
10 |
கோதை ஆயமொடு வண்டல் தைஇ, |
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக் |
|
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற் |
|
கொற்றச் சோழர் குடந்தை வைத்த |
|
நாடு தரு நிதியினும் செறிய |
|
15 |
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே. |
தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற் கீரத்தனார் | |
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம் |
|
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத் |
|
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர் |
|
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து |
|
5 |
ஆழல் வாழி, தோழி! தாழாது, |
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால் |
|
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ, |
|
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் |
|
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு, |
|
10 |
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் |
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான் |
|
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி |
|
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும், |
|
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது |
|
15 |
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி |
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின் |
|
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த |
|
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே. |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன |
|
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய், |
|
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள், |
|
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன |
|
5 |
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு |
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி |
|
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப, |
|
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின், |
|
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று |
10 |
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல, |
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல் |
|
ஆகம் அடைதந்தோளே வென் வேற் |
|
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி |
|
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக் |
|
15 |
கடவுள் எழுதிய பாவையின், |
மடவது மாண்ட மாஅயோளே. |
|
அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி, |
|
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு |
|
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல் |
|
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி, |
|
5 |
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி |
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப, |
|
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல் |
|
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண், |
|
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி, |
|
10 |
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து, |
மன்று நிறை பைதல் கூர, பல உடன் |
|
கறவை தந்த கடுங் கால் மறவர் |
|
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ |
|
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை |
|
15 |
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை |
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள், |
|
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண் |
|
சேக் கோள் அறையும் தண்ணுமை |
|
கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே. |
|
தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.- கருவூர்க் கண்ணம்புல்லனார் | |
களையும் இடனால் பாக! உளை அணி |
|
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா |
|
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய, |
|
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி, |
|
5 |
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் |
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக, |
|
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல |
|
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின், |
|
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர, |
|
10 |
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, |
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு |
|
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ, |
|
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன், |
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
|
15 |
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை |
புலம்பு கொள் மாலை கேட்டொறும் |
|
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் | |
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் |
|
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம் |
|
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் |
|
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்; |
|
5 |
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் |
பாடிச் சென்ற பரிசிலர் போல |
|
உவ இனி வாழி, தோழி! அவரே, |
|
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச் |
|
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும் |
|
10 |
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி, |
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் |
|
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, |
|
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை |
|
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன |
|
15 |
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, |
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் |
|
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள், |
|
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை, |
|
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு |
|
20 |
அரியவால்' என அழுங்கிய செலவே! |
வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார் | |
'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி, |
|
மறுமை உலகமும் மறு இன்று எய்துப, |
|
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச் |
|
சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப் |
|
5 |
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் |
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி! |
|
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு |
|
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின் |
|
இயன்ற அணியன், இத் தெரு இறப்போன் |
|
10 |
மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து, |
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும் |
|
பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர் |
|
தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன். தாங்காது, |
|
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப் |
|
15 |
புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக் |
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த |
|
மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு |
|
தானே புகுதந்தோனே; யான் அது |
|
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற் |
|
20 |
கலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச் சென்று |
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு |
|
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப் |
|
பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான், |
|
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய |
|
25 |
பழங் கணோட்டமும் நலிய, |
அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே. |
|
பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - செல்லூர்க் கோசிகன் கண்ணனார் | |
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி |
|
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது |
|
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன், |
|
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை, |
|
5 |
அரம் போழ் நுதிய வாளி அம்பின், |
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார், |
|
நெல்லி நீளிடை எல்லி மண்டி, |
|
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர் |
|
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் |
|
10 |
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் |
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் |
|
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர் |
|
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன |
|
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை, |
|
15 |
'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு |
நிலம் படு மின்மினி போல, பல உடன் |
|
இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம் |
|
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே! |
|
பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நோய்பாடியார் | |
'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத் |
|
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய, |
|
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம் |
|
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை |
|
5 |
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை |
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என, |
|
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே; |
|
பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள், |
|
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை |
|
10 |
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் |
வருவர்ஆயின், 'பருவம் இது' எனச் |
|
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின் |
|
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக, |
|
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து |
|
15 |
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் |
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப, |
|
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம் |
|
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன் |
|
வெண் கோட்டு யானை விளி படத் துழவும் |
|
20 |
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் |
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே. |
|
தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - ஊட்டியார் | |
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த் |
|
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல |
|
வண்ணம் வாடிய வரியும், நோக்கி, |
|
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின் |
|
5 |
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் |
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப் |
|
பராரை நெல்லி அம் புளித் திரள் காய் |
|
கான மட மரைக் கணநிரை கவரும் |
|
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று, |
|
10 |
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் |
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த |
|
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம் |
|
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல் |
|
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம் |
|
15 |
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் |
அம்புடைக் கையர் அரண் பல நூறி, |
|
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் |
|
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத் |
|
தலை நாள் அலரின் நாறும் நின் |
|
20 |
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. |
'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் | |
கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, |
|
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் |
|
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, |
|
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் |
|
5 |
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே |
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற, |
|
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே |
|
வதுவை கூடிய பின்றை, புதுவது |
|
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் |
|
10 |
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப் |
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் |
|
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் |
|
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி |
|
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை, |
|
15 |
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த |
பல் வீழ் ஆலம் போல, |
|
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. |
|
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் | |
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் |
|
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம் |
|
நயன் இல் மாக்கள் போல, வண்டினம் |
|
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர, |
|
5 |
மை இல் மான் இனம் மருள, பையென |
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, |
|
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு |
|
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன, |
|
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை, |
|
10 |
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக, |
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக் |
|
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது, |
|
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து |
|
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி, |
|
15 |
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து, |
இது கொல் வாழி, தோழி! என் உயிர் |
|
விலங்கு வெங் கடு வளி எடுப்பத் |
|
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே? |
|
பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார் | |
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம் |
|
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள், |
|
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் |
|
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி, |
|
5 |
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை |
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண், |
|
ஆறே அரு மரபினவே; யாறே |
|
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய; |
|
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க, |
|
10 |
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து, |
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன், |
|
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய, |
|
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை |
|
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த |
|
15 |
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் |
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை, |
|
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி, |
|
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக |
|
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த |
|
20 |
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் |
ஆனா அரும் படர் செய்த |
|
யானே, தோழி! தவறு உடையேனே. |
|
தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார் | |
பின்னொடு முடித்த மண்ணா முச்சி |
|
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ; |
|
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு |
|
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க, |
|
5 |
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், |
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர |
|
'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என, |
|
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் |
|
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி |
|
10 |
இருவேம் நம் படர் தீர வருவது |
காணிய வம்மோ காதல்அம் தோழி! |
|
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின், |
|
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப் |
|
15 |
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி |
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர் |
|
சென்ற தேஎத்து நின்றதால், மழையே. |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. - எருமை வெளியனார் | |
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து, |
|
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த, |
|
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை, |
|
குருதி உருவின் ஒண் செம் மூதாய் |
|
5 |
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப, |
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ |
|
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய், |
|
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில், |
|
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை |
|
10 |
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து |
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ, |
|
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என, |
|
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் |
|
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல் |
|
15 |
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற் |
கல்லாக் கோவலர் ஊதும் |
|
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே! |
|
தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார் | |
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர் |
|
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின் |
|
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது, |
|
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல் |
|
5 |
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை, |
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர் |
|
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும் |
|
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த |
|
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல், |
|
10 |
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய், |
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர் |
|
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து, |
|
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது |
|
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும் |
|
15 |
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும் |
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என- |
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன |
|
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்; |
|
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்; |
|
20 |
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி |
ஆனா நோயை ஆக, யானே |
|
பிரியச் சூழ்தலும் உண்டோ, |
|
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?' |
|
'பொருள்வயிற் பிரிவர்' என வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியார்'எனத் தோழி சொல்லியது. - மதுரைப்போத்தனார் | |
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க, |
|
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென |
|
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு |
|
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை |
|
5 |
அவை புகு பொருநர் பறையின், ஆனாது, |
கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில், |
|
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன், |
|
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல், |
|
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என, |
|
10 |
ஆதிமந்தி பேதுற்று இனைய, |
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும் |
|
அம் தண் காவிரி போல, |
|
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே. |
|
'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர் | |
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர், |
|
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப் |
|
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச் |
|
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற |
|
5 |
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும் |
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ், |
|
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார், |
|
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின், |
|
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த |
|
10 |
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர, |
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும் |
|
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப் |
|
புல் அரை இத்திப் புகர் படு நீழல் |
|
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை, |
|
15 |
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை, |
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன் |
|
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த |
|
திருந்துஇலை எஃகம் போல, |
|
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே. |
|
தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார் | |
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, |
|
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின், |
|
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து, |
|
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் |
|
5 |
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ, |
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல், |
|
தேம் பிழி நறவின் குறவர் முன்றில், |
|
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் |
|
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென |
|
10 |
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், |
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர் |
|
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என, |
|
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும், |
|
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட! |
|
15 |
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை |
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று |
|
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு, |
|
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி, |
|
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது, |
|
20 |
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, |
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய, |
|
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி |
|
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த |
|
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே? |
|
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார் | |
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர் |
|
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து, |
|
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில், |
|
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய |
|
5 |
வன் புலம் துமியப் போகி, கொங்கர் |
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் |
|
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள் |
|
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் |
|
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப, |
|
10 |
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர |
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை |
|
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை, |
|
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக் |
|
கொடு வில் எயினர் கோட் சுரம் படர, |
|
15 |
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை, |
கல் பிறங்கு அத்தம் போகி, |
|
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே. |
|
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் |
|
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின் |
|
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப! |
|
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை |
|
5 |
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த |
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும். |
|
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை |
|
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் |
|
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப, |
|
10 |
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ, |
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் |
|
தண் நறும் பைந் தாது உறைக்கும் |
|
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார் | |
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் |
|
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், |
|
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை |
|
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, |
|
5 |
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் |
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக் |
|
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை |
|
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள |
|
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை |
|
10 |
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த |
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் |
|
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் |
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம் |
மை எழில் உண்கண் கலுழ |
|
15 |
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே? |
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் | |
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் |
|
கோடை அவ் வளி குழலிசை ஆக, |
|
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை |
|
தோடு அமை முழவின் துதை குரல் ஆக, |
|
5 |
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, |
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, |
|
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, |
|
மந்தி நல் அவை மருள்வன நோக்க, |
|
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் |
|
10 |
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் |
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, |
|
செருச் செய் யானை செல் நெறி வினாஅய், |
|
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, |
|
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் |
|
15 |
பலர்தில், வாழி தோழி! அவருள், |
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, |
|
ஓர் யான் ஆகுவது எவன்கொல், |
|
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே? |
|
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர் | |
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் |
|
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, |
|
கறை அடி மடப் பிடி கானத்து அலற, |
|
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து, |
|
5 |
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து, |
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி, |
|
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர், |
|
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும் |
|
கல்லா இளையர் பெருமகன் புல்லி |
|
10 |
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும், |
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ, |
|
எய்த வந்தனவால்தாமே நெய்தல் |
|
கூம்பு விடு நிகர் மலர் அன்ன |
|
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே. |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார் | |
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில் |
|
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி, |
|
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ, |
|
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர |
|
5 |
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை |
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி, |
|
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய, |
|
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும் |
|
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின் |
|
10 |
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே, |
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி, |
|
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு |
|
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும் |
|
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் |
|
15 |
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து, |
வினைவயின் பெயர்க்கும் தானை, |
|
புனைதார், வேந்தன் பாசறையேமே! |
|
தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை எழுத்தாளன் | |
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும், |
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், |
|
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர் |
|
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து, |
|
5 |
ஆழல் வாழி, தோழி! 'சாரல், |
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி, |
|
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை |
|
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும் |
|
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை, |
|
10 |
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை |
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை |
|
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து, |
|
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார், |
|
வருதும், யாம்' எனத் தேற்றிய |
|
15 |
பருவம்காண் அது; பாயின்றால் மழையே. |
தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் | |
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை |
|
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால் |
|
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி | |
மனை விளக்குறுத்து, மாலை தொடரி, |
|
5 |
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை; |
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் |
|
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென, |
|
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர், |
|
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் |
|
10 |
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர, |
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று |
|
வால் இழை மகளிர் நால்வர் கூடி, |
|
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் |
|
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என, |
|
15 |
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி |
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, |
|
வதுவை நல் மணம் கழிந்த பின்றை, |
|
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து, |
|
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர, |
|
20 |
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல், |
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து |
|
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ, |
|
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப, |
|
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின் |
|
25 |
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என, |
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின், |
|
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர, |
|
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து, |
|
ஒய்யென இறைஞ்சியோளே மாவின் |
|
30 |
மடம் கொள் மதைஇய நோக்கின், |
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே. |
|
வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர் கிழார் | |
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம், |
|
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும் |
|
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை, |
|
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி, |
|
5 |
குடுமி நெற்றி நெடு மரச் சேவல் |
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது, |
|
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் |
|
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி, |
|
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென, |
|
10 |
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம், |
நனி நீடு உழந்தனைமன்னே! அதனால் |
|
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற |
|
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச் |
|
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி, |
|
15 |
தாழ் இருங் கூந்தல் நம் காதலி |
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரைப் பேராலவாயார் | |
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை |
|
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் |
|
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் |
|
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, |
|
5 |
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய |
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம் |
|
நடுங்கு துயர் களைந்த நன்னராளன் |
|
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து |
|
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக் |
|
10 |
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் |
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து, |
|
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் |
|
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி, |
|
கொடு விரல் உளியம் கெண்டும் |
|
15 |
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார் | |
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின், |
|
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை, |
|
உருத்து எழு குரல குடிஞைச் சேவல், |
|
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய |
|
5 |
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண், |
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து |
|
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர் |
|
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய, |
|
களரி பரந்த கல் நெடு மருங்கின், |
|
10 |
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர் |
மை படு திண் தோள் மலிர வாட்டி, |
|
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய |
|
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த |
|
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து, |
|
15 |
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர், |
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் |
|
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது, |
|
மெல்லென் சேவடி மெலிய ஏக |
|
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து |
|
20 |
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள், |
இடு மணற் பந்தருள் இயலும், |
|
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர் | |
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி |
|
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும் |
|
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை, |
|
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ, |
|
5 |
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் |
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின், |
|
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின், |
|
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ? |
|
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது |
|
10 |
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர், |
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர், |
|
கருங் கட் கோசர் நியமம் ஆயினும், |
|
'உறும்' எனக் கொள்குநர்அல்லர் |
|
நறு நுதல் அரிவை பாசிழை விலையே. |
|
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார் | |
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு |
|
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், |
|
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் |
|
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது, |
|
5 |
பாசி தின்ற பைங் கண் யானை |
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, |
|
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை |
|
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும், |
|
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ் |
|
10 |
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக் |
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த |
|
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர், |
|
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப, |
|
பசி என அறியாப் பணை பயில் இருக்கை, |
|
15 |
தட மருப்பு எருமை தாமரை முனையின், |
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும், |
|
குடநாடு பெறினும் தவிரலர் |
|
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே. |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச் |
|
செங் கண் இரும் புலி குழுமும் சாரல் |
|
5 |
வாரல் வாழியர், ஐய! நேர் இறை |
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும் |
|
காவல் கண்ணினம் தினையே; நாளை |
|
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் |
|
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண், |
|
10 |
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை, |
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் |
|
திருமணி விளக்கின் பெறுகுவை |
|
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே. |
|
இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் | |
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும், |
|
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும், |
|
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து; |
|
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர் |
|
5 |
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன |
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும் |
|
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்; |
|
அரண் பல கடந்த, முரண் கொள் தானை, |
|
வாடா வேம்பின், வழுதி கூடல் |
|
10 |
நாள் அங்காடி நாறும் நறு நுதல் |
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு, |
|
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர், |
|
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை |
|
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து, |
|
15 |
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப, |
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல் |
|
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து, |
|
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி, |
|
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை, |
|
20 |
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை |
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை. |
|
தெண் நீர் உயர் கரைக் குவைஇய |
|
தண் ஆன்பொருநை மணலினும் பலவே. |
|
வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார் | |
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய |
|
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய, |
|
வான் எனப் பூத்த பானாட் கங்குல், |
|
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன் |
|
5 |
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, |
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன், |
|
ஐது படு கொள்ளி அங்கை காய, |
|
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி |
|
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய, |
|
10 |
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் |
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் |
|
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து |
|
ஆர்வம் சிறந்த சாயல், |
|
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே! |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார் | |
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய், |
|
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்; |
|
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்; |
|
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின் |
|
5 |
எவனோ? வாழி, தோழி! பொரிகால் |
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற |
|
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ, |
|
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க, |
|
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும் |
|
10 |
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார், |
கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர் |
|
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ |
|
புரையஅல்ல, என் மகட்கு' எனப் பரைஇ, |
|
நம் உணர்ந்து ஆறிய கொள்கை |
|
15 |
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே? |
போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் | |
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து, |
|
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும் |
|
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் |
|
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி |
|
5 |
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, |
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை |
|
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் |
|
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! |
|
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து |
|
10 |
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே |
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின், |
|
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை, |
|
அண்ணல் யானை அடு போர்ச் சோழர், |
|
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை, |
|
15 |
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய, |
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை, |
|
களிறு கவர் கம்பலை போல, |
|
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே. |
|
தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ | |
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை |
|
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, |
|
5 |
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் |
கொலை வில் ஆடவர் போல, பலவுடன் |
|
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் |
|
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், |
|
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
10 |
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு |
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, |
|
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் |
|
வயலை வேலி வியலூர் அன்ன, நின் |
|
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, |
|
15 |
ஆழல்' என்றி தோழி! யாழ என் |
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, |
|
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் |
|
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, |
|
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, |
|
20 |
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து |
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், |
|
புகை புரை அம் மஞ்சு ஊர, |
|
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே? |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன், |
|
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த |
|
இனிய உள்ளம் இன்னாஆக, |
|
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் |
|
5 |
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல் |
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல் |
|
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி, |
|
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப் |
|
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ, |
|
10 |
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து, |
ஓவத்தன்ன வினை புனை நல் இல், |
|
'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் |
|
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ, |
|
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து, |
|
15 |
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர், |
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர் |
|
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா, |
|
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன் |
|
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன் |
|
20 |
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின், |
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய |
|
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக |
|
ஆடிய பின்னும், வாடிய மேனி |
|
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை |
|
25 |
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று, |
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி, |
|
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே, |
|
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக் |
|
கான் கெழு நாடன் கேட்பின், |
|
30 |
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக்கண்ணியார் | |
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன |
|
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் |
|
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் |
|
மாண் இழை மகளிர் பூணுடை முலையின் |
|
5 |
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை |
அதிரல் பரந்த அம் தண் பாதிரி |
|
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ |
|
மராஅ மலரொடு விராஅய், பராஅம் |
|
அணங்குடை நகரின் மணந்த பூவின் |
|
10 |
நன்றே, கானம்; நயவரும் அம்ம; |
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை |
|
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின், |
|
பிடி மிடை, களிற்றின் தோன்றும் |
|
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே! |
|
உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
அரையுற்று அமைந்த ஆரம் நீவி, |
|
புரையப் பூண்ட கோதை மார்பினை, |
|
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, |
|
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. |
|
5 |
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த |
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த |
|
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் |
|
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை, |
|
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த |
|
10 |
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் |
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், |
|
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் |
|
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை |
|
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன |
|
15 |
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் |
வைகுறு விடியல் போகிய எருமை |
|
நெய்தல் அம் புது மலர் மாந்தும் |
|
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே! |
|
தோழி வரைவு கடாயது. - உலோச்சனார் | |
அம்ம வாழி, தோழி! 'இம்மை |
|
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும் |
|
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்? |
|
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த |
|
5 |
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர் |
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல் |
|
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி, |
|
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து |
|
அடி புதை தொடுதோல் பறைய ஏகி, |
|
10 |
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், |
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு, |
|
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல, |
|
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று |
|
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை, |
|
15 |
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர், |
தண் கார் ஆலியின், தாவன உதிரும் |
|
பனி படு பல் மலை இறந்தோர்க்கு |
|
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே! |
|
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக் |
|
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென; |
|
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு |
|
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா, |
|
5 |
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி |
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட; |
|
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது, |
|
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென |
|
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்; |
|
10 |
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப, |
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன், |
|
காவலர் அறிதல் ஓம்பி, பையென |
|
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து, |
|
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து, |
|
15 |
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி! |
இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன் |
|
நல்காமையின் அம்பல் ஆகி, |
|
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் |
|
இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே? |
|
இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன் | |
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த |
|
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின், |
|
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி, |
|
காமர் சேவல் ஏமம் சேப்ப; |
|
5 |
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது |
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து, |
|
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி, |
|
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை, |
|
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும் |
|
10 |
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின் |
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என, |
|
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக |
|
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு |
|
தானே சென்ற நலனும் |
|
15 |
நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே? |
தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொற்றது.- காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் | |
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து |
|
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் |
|
வென் வேல் இளையர் இன்புற, வலவன் |
|
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின் |
|
5 |
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா |
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர், |
|
வாங்குசினை பொலிய ஏறி; புதல |
|
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன |
|
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி, |
|
10 |
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய, |
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக் |
|
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் |
|
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை |
|
இனிது செய்தனையால் எந்தை! வாழிய! |
|
15 |
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் |
ஆய் தொடி அரிவை கூந்தற் |
|
போது குரல் அணிய வேய்தந்தோயே! |
|
வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார் | |
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை |
|
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென |
|
நல் வரை நாடன் தற்பாராட்ட |
|
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து, |
|
5 |
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி, |
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள், |
|
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் |
|
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு, |
|
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச் |
|
10 |
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி |
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார், |
|
கனை எரி நடந்த கல் காய் கானத்து |
|
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர் |
|
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து, |
|
15 |
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம் |
முகை தலை திறந்த வேனிற் |
|
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - தாயங்கண்ணனார் | |
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து, |
|
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன், |
|
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப் |
|
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் |
|
5 |
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை |
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது |
|
செய்யாம்ஆயினும், உய்யாமையின், |
|
செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண் |
|
உலமந்து வருகம் சென்மோ தோழி! |
|
10 |
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் |
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் |
|
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும் |
|
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே. |
|
தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி வங்கனார் | |
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, |
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த |
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு |
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று |
|
5 |
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், |
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், |
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு |
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட |
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு |
|
10 |
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் |
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர் |
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து, |
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து |
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து, |
|
15 |
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு |
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் |
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி, |
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர் |
|
மாலை இன் துணைஆகி, காலைப் |
|
20 |
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, |
மண மனை கமழும் கானம் |
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே. |
|
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு |
|
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம் |
|
வரைமுதல் சிதறிய வை போல், யானைப் |
|
புகர் முகம் பொருத புது நீர் ஆலி |
|
5 |
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, |
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் |
|
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும் |
|
10 |
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் |
அருளான் வாழி, தோழி! அல்கல் |
|
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின் |
|
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல், |
|
காயா மென் சினை தோய நீடிப் |
|
15 |
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் |
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி |
|
கை ஆடு வட்டின் தோன்றும் |
|
மை ஆடு சென்னிய மலைகிழவோனே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் | |
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ் |
|
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி, |
|
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே |
|
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக் |
|
5 |
காடு கால்யாத்த நீடு மரச் சோலை |
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை, |
|
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் |
|
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச் |
|
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென, |
|
10 |
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், |
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு |
|
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப் |
|
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் |
|
அறன் இல் வேந்தன் ஆளும் |
|
15 |
வறன் உறு குன்றம் பல விலங்கினவே. |
இடைச் சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- கடுந்தொடைக் காவினார் | |
அன்னை அறியினும் அறிக; அலர்வாய் |
|
அம் மென் சேரி கேட்பினும் கேட்க; |
|
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி, |
|
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி, |
|
5 |
கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல் |
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும், |
|
சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும், |
|
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது |
|
இருந்தனமாக, எய்த வந்து, |
|
10 |
'தட மென் பணைத் தோள் மட நல்லீரே! |
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்; |
|
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக் |
|
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?' |
|
என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு, |
|
15 |
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி, |
'இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த |
|
கொழு மீன் வல்சி' என்றனம், இழுமென. |
|
'நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ |
|
காணாமோ?' எனக் காலின் சிதையா, |
|
20 |
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் |
என்னே குறித்த நோக்கமொடு, 'நன்னுதால்! |
|
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி, |
|
யான் 'பெயர்க' என்ன, நோக்கி, தான் தன் |
|
நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி |
|
25 |
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே. |
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - போந்தைப் பசலையார் | |
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர் |
|
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி |
|
வருவர் வாழி, தோழி! அரச |
|
யானை கொண்ட துகிற் கொடி போல, |
|
5 |
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி |
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர, |
|
மழை என மருண்ட மம்மர் பல உடன் |
|
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை |
|
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் |
|
10 |
அத்தக் கேழல் அட்ட நற் கோள் |
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப, |
|
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி, |
|
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட |
|
புண் தேர் விளக்கின், தோன்றும் |
|
15 |
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி |
|
சிதலை செய்த செந் நிலைப் புற்றின் |
|
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி, |
|
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல் |
|
5 |
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி |
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும் |
|
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய், |
|
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே; |
|
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்; |
|
10 |
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; |
கழியக் காதலர்ஆயினும், சான்றோர் |
|
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்; |
|
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப! |
|
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் |
|
15 |
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார், |
தொன்று இயல் மரபின் மன்றல் அயர, |
|
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி, |
|
நொதுமல் விருந்தினம் போல, இவள் |
|
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார் | |
நன்று அல் காலையும் நட்பின் கோடார், |
|
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின், |
|
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன் |
|
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி, |
|
5 |
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் |
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின் |
|
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து, |
|
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற, |
|
நல்காது துறந்த காதலர், 'என்றும் |
|
10 |
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி |
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர் |
|
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர் |
|
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் |
|
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் |
|
15 |
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல் |
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி |
|
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர், |
|
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் |
|
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர் |
|
20 |
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி, |
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என் |
|
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க, |
|
அழாஅம் உறைதலும் உரியம் பராரை |
|
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப் |
|
25 |
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு, |
மெய் இவண் ஒழியப் போகி, அவர் |
|
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கல்லாடனார் | |
'கேளாய், எல்ல! தோழி! வேலன் |
|
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய |
|
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின், |
|
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு, |
|
5 |
அரவு நுங்கு மதியின், ஐயென மறையும் |
சிறு புன் மாலையும் உள்ளார் அவர்' என, |
|
நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க, |
|
நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண் |
|
நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை, |
|
10 |
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் |
வானக மீனின் விளங்கித் தோன்றும், |
|
அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த் |
|
திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின், |
|
அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள், |
|
15 |
அணங்கு சால், அரிவையைக் காண்குவம் |
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ....... | |
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப் |
|
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும் |
|
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல் |
|
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக; |
|
5 |
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் |
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும் |
|
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள் |
|
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் |
|
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய |
|
10 |
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் |
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று |
|
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை, |
|
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை, |
|
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி |
|
15 |
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, |
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு, |
|
நம் நீத்து உறையும் பொருட்பிணிக் |
|
கூடாமையின், நீடியோரே. |
|
பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை |
|
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர் |
|
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின், |
|
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர! |
|
5 |
பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப் |
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல், |
|
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல், |
|
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை, |
|
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை |
|
10 |
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே, |
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து |
|
அலர் ஆகின்றால் தானே; மலர்தார், |
|
மை அணி யானை, மறப் போர்ச் செழியன் |
|
பொய்யா விழவின் கூடற் பறந்தலை, |
|
15 |
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் |
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி, |
|
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர் |
|
ஓடுபுறம் கண்ட ஞான்றை, |
|
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர் | |
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும், |
|
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள், |
|
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை |
|
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி, |
|
5 |
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர, |
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப் |
|
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண், |
|
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச் |
|
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே |
|
10 |
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து; |
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள், |
|
தன் ஓரன்ன தகை வெங் காதலன் |
|
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட, |
|
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல் |
|
15 |
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம் |
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும் |
|
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர், |
|
வாணன் சிறுகுடி வடாஅது |
|
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே? |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - ......... | |
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன், |
|
தேம் கமழ் இணர வேங்கை சூடி, |
|
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ, |
|
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து, |
|
5 |
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட, |
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள, |
|
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப் |
|
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய |
|
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள் |
|
10 |
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும். |
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள் |
|
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல் |
|
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்; |
|
அளியள்தான், நின் அளி அலது இலளே! |
|
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும் பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர் | |
'நுதலும் தோளும், திதலை அல்குலும், |
|
வண்ணமும், வனப்பும், வரியும், வாட |
|
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி, |
|
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது, |
|
5 |
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை, |
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப, |
|
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள, |
|
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் |
|
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் |
|
10 |
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து, |
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை, |
|
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை, |
|
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு |
|
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப, |
|
15 |
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள |
மறப் புலி உழந்த வசி படு சென்னி |
|
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி, |
|
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை |
|
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை, |
|
20 |
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே? |
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார் | |
நெடு வேள் மார்பின் ஆரம் போல, |
|
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும் |
|
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப, |
|
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின் |
|
5 |
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு |
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே |
|
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் |
|
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது, |
|
அழல் தொடங்கினளே பெரும! அதனால் |
|
10 |
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி |
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ, |
|
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது, |
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ |
|
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை |
|
15 |
அன்றில் அகவும் ஆங்கண், |
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே? |
|
தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார் | |
மேல் |