மணிமிடை பவளம் |
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல் |
|
வேனில் நீடிய வான் உயர் வழிநாள், |
|
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத் |
|
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல் |
|
5 |
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி, |
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு |
|
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி, |
|
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து |
|
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு |
|
10 |
தான் வரும் என்ப, தட மென் தோளி |
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட |
|
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை |
|
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து |
|
வெருள் ஏறு பயிரும் ஆங்கண், |
|
15 |
கரு முக முசுவின் கானத்தானே. |
தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன் | |
உரை |
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர் |
|
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்; |
|
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின், |
|
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்; |
|
5 |
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், |
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்; |
|
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று |
|
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்; |
|
அர வாய் ஞமலி மகிழாது மடியின், |
|
10 |
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் |
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே; |
|
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின், |
|
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை |
|
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்; |
|
15 |
வளைக்கண் சேவல் வாளாது மடியின், |
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்; |
|
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள் |
|
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால், |
|
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து, |
|
20 |
ஆதி போகிய பாய்பரி நன் மா |
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் |
|
கல் முதிர் புறங்காட்டு அன்ன |
|
பல் முட்டின்றால் தோழி! நம் களவே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன் சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - பரணர் | |
உரை |
உண்ணாமையின் உயங்கிய மருங்கின் |
|
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல, |
|
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும் |
|
கான யானை கவின் அழி குன்றம் |
|
5 |
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த |
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி |
|
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு |
|
உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என |
|
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் |
|
10 |
மழை மருள் பல் தோல் மா வண் சோழர் |
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை, |
|
இறவொடு வந்து கோதையொடு பெயரும் |
|
பெருங் கடல் ஓதம் போல, |
|
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே. |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக் கண்ணனார் | |
உரை |
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி, |
|
வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து |
|
சென்றீக' என்பஆயின், வேந்தனும் |
|
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு |
|
5 |
இன்றே புகுதல் வாய்வது; நன்றே. |
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத் |
|
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற, |
|
பாசறை வருத்தம் வீட, நீயும் |
|
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை, |
|
10 |
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி, |
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை |
|
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய, |
|
காலை எய்த, கடவுமதி மாலை |
|
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை |
|
15 |
அரமிய வியலகத்து இயம்பும் |
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ, |
|
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி |
|
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை |
|
ஆலி அன்ன வால் வீ தாஅய், |
|
5 |
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத் |
தாது உறு குவளைப்போது பிணி அவிழ, |
|
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க் |
|
கடாஅம் மாறிய யானை போல, |
|
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ |
|
10 |
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர, |
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல் |
|
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென, |
|
முனிய அலைத்தி, முரண் இல் காலை; |
|
கைதொழு மரபின் கடவுள் சான்ற |
|
15 |
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின் |
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான் |
|
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த |
|
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார், |
|
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற |
|
20 |
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த |
பீடு இல் மன்னர் போல, |
|
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே. |
|
தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -பரணர் | |
உரை |
நின் வாய் செத்து நீ பல உள்ளி, |
|
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும், |
|
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் |
|
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக் |
|
5 |
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று |
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க, |
|
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர் |
|
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு, |
|
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள், |
|
10 |
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் |
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், |
|
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் |
|
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி |
|
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான், |
|
15 |
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி, |
திதியனொடு பொருத அன்னி போல |
|
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச் |
|
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய |
|
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப் |
|
20 |
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால், |
மின் நேர் மருங்குல், குறுமகள் |
|
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே? |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர் | |
உரை |
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும், |
|
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய |
|
வலம் படு முரசிற் சேரலாதன் |
|
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து |
|
5 |
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து, |
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் |
|
பணி திறை தந்த பாடுசால் நன்கலம் |
|
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல் |
|
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண் |
|
10 |
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன |
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள் |
|
தங்கலர் வாழி, தோழி! செங் கோற் |
|
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர் |
|
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி, |
|
15 |
கல்லா மழவர் வில் இடம் தழீஇ, |
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை |
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், |
|
பழி தீர் காதலர் சென்ற நாட்டே. |
|
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
உரை |
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே; |
|
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே |
|
யாமம் கொள வரின் கனைஇ, காமம் |
|
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே. |
|
5 |
எவன்கொல் வாழி, தோழி! மயங்கி |
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம் |
|
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு, |
|
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில் |
|
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி, | |
10 |
கான நாடன் வரூஉம், யானைக் |
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி, |
|
மாரி வானம் தலைஇ நீர் வார்பு, |
|
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின், |
|
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர் |
|
15 |
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என |
|
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் |
|
நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து |
|
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி, |
|
5 |
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண், |
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் |
|
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப் |
|
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி, |
|
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் |
|
10 |
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும் |
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப, |
|
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், |
|
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும் |
|
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல் |
|
15 |
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின், |
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என |
|
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் |
|
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று |
|
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ |
|
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை |
|
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை, |
|
5 |
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை |
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன் |
|
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ, |
|
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின் |
|
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம் |
|
10 |
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும் |
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை |
|
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற் |
|
போது புறங்கொடுத்த உண்கண் |
|
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே. |
|
கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது. - வெண்கண்ணனார் | |
உரை |
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப் |
|
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன, |
|
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல் |
|
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை |
|
5 |
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என |
வீளை அம்பின் விழுத் தொடை மழவர் |
|
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து |
|
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் |
|
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் |
|
10 |
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் |
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் |
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் |
|
வெருவரு தகுந கானம், 'நம்மொடு |
|
வருக' என்னுதிஆயின், |
|
15 |
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே. |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து, |
|
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி |
|
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின், |
|
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி, |
|
5 |
வால் நிணப் புகவின், கானவர் தங்கை |
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண் |
|
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின், |
|
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப! |
|
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக் |
|
10 |
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை |
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள் |
|
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை |
|
இருங் கவுட் கடாஅம் கனவும், |
|
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே. |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார் | |
உரை |
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், |
|
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை |
|
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, |
|
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, |
|
5 |
கார் தலைமணந்த பைம் புதற் புறவின், |
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் |
|
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், |
|
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு |
|
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, |
|
10 |
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று |
வான் கொள் தூவல் வளி தர உண்கும்; |
|
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக் |
|
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி! |
|
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி |
|
15 |
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் |
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த |
|
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத் |
|
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
வானம் வாய்ப்பக் கவினி, கானம் |
|
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென, |
|
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை, |
|
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல |
|
5 |
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் |
செய்கை அன்ன செந் நிலப் புறவின்; |
|
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத் |
|
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க, |
|
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை |
|
10 |
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த |
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு |
|
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை |
|
கடுமான் தேர் ஒலி கேட்பின், |
|
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே. |
|
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க, |
|
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப் |
|
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, |
|
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, |
|
5 |
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி, |
பேதுற்றிசினே காதல்அம் தோழி! |
|
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி, |
|
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ, |
|
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம் |
|
10 |
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர், |
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை, |
|
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த |
|
கழுவுள் காமூர் போலக் |
|
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர் | |
உரை |
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு |
|
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, |
|
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி |
|
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் |
|
5 |
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, |
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி, |
|
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, |
|
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, |
|
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, |
|
10 |
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, |
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் |
|
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற |
|
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத் |
|
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி, |
|
15 |
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, |
மழை பட்டன்ன மணல் மலி பந்தர், |
|
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, |
|
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், |
|
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! |
|
20 |
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, |
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் |
|
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என |
|
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், |
|
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, |
|
25 |
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென |
நாணினள் இறைஞ்சியோளே பேணி, |
|
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, |
|
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த |
|
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே. |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட |
|
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ, |
|
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் |
|
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே |
|
5 |
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் |
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண், |
|
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று |
|
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற் |
|
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், |
|
10 |
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் |
தீ இல் அடுப்பின் அரங்கம் போல, |
|
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும், |
|
தோளா முத்தின் தெண் கடற் பொருநன் |
|
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் |
|
15 |
நல் எழில் நெடு வேய் புரையும் |
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே. |
|
'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- உறையூர் |
|
முதுகூத்தனார் | |
உரை |
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி! |
|
குவளை உண்கண் தெண் பனி மல்க, |
|
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை |
|
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின் |
|
5 |
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, |
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை, |
|
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில், |
|
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் |
|
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது, |
|
10 |
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ, |
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு |
|
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் |
|
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு |
|
நின்னொடு தெளித்த நல் மலை நாடன் |
|
15 |
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி, |
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள், |
|
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட் |
|
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி |
|
நல் நிறம் மருளும் அரு விடர் |
|
20 |
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே. |
தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார் | |
உரை |
துஞ்சுவது போல இருளி, விண் பக |
|
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு |
|
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ, |
|
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு, |
|
5 |
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்; |
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை |
|
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை, |
|
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை, |
|
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து |
|
10 |
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை; |
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல், |
|
காமர் துணையொடு ஏமுற வதிய; |
|
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் |
|
பரப்பியவைபோற் பாஅய், பல உடன் |
|
15 |
நீர் வார் மருங்கின் ஈரணி திகழ; |
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்! |
|
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர் |
|
கருவிக் கார்இடி இரீஇய |
|
பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே. |
|
பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் |
|
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த |
|
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
என்றூழ் விடர குன்றம் போகும் |
|
5 |
கதழ் கோல் உமணர் காதல் மடமகள் |
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி, |
|
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச் |
|
சேரி விலைமாறு கூறலின், மனைய |
|
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய |
|
10 |
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு, |
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும் |
|
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு |
|
எவ்வம் தீர வாங்கும் தந்தை |
|
கை பூண் பகட்டின் வருந்தி, |
|
15 |
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே. |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! கைம்மிகக் |
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் |
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; |
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது |
|
5 |
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, |
மழை கால்நீங்கிய மாக விசும்பில் |
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, |
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; |
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, |
|
10 |
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய |
விழவு உடன் அயர, வருகதில் அம்ம! |
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, |
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் |
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் |
|
15 |
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, |
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர் |
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, |
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் |
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு |
|
20 |
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; |
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் |
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் |
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன |
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் |
|
25 |
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை |
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, |
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, |
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய |
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் | |
உரை |
இலமலர் அன்ன அம் செந் நாவின் |
|
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த, |
|
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் |
|
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் |
|
5 |
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற |
குறையோர் கொள்கலம் போல, நன்றும் |
|
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி |
|
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற |
|
கறை அடி யானை நன்னன் பாழி, |
|
10 |
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் |
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி |
|
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் |
|
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து |
|
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின், |
|
15 |
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய, |
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் |
|
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை |
|
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல், |
|
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர, |
|
20 |
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, |
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை |
|
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து, |
|
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை |
|
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப, |
|
25 |
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; |
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக் |
|
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின், |
|
நீடு சினை வறிய ஆக, ஒல்லென |
|
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும் |
|
5 |
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு, |
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச் |
|
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும் |
|
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய! |
|
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே, |
|
10 |
வசை இல் வெம் போர் வானவன் மறவன் |
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும், |
|
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன் |
|
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன் |
|
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த |
|
15 |
தண் கமழ் நீலம் போல, |
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே. |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி சாத்தனார் | |
உரை |
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன; |
|
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா; |
|
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை |
|
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை |
|
5 |
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், |
அருள் கண்மாறலோ மாறுக அந்தில் |
|
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்' எனச் |
|
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும், |
|
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு, |
|
10 |
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல |
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின் |
|
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் |
|
கடாஅ யானை கொட்கும் பாசறை, |
|
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை |
|
15 |
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி, |
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி |
|
வான மீனின் வயின் வயின் இமைப்ப, |
|
அமர் ஓர்த்து, அட்ட செல்வம் |
|
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. |
|
வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் | |
உரை |
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், |
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், |
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி |
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, |
|
5 |
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு |
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு |
|
வாள்வரி பொருத புண் கூர் யானை |
|
புகர் சிதை முகத்த குருதி வார, |
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் |
|
10 |
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் |
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய |
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, |
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் |
|
15 |
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், |
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, |
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், |
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் |
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, |
|
20 |
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், |
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் |
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு |
|
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி, |
|
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ, |
|
படப்பை நண்ணி, பழனத்து அல்கும் |
|
5 |
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர், |
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள் |
|
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை |
|
யார்கொல் அளியள்தானே எம் போல் |
|
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, |
|
10 |
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் |
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து, |
|
ஆயமும் அயலும் மருள, |
|
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே? |
|
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் | |
உரை |
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த |
|
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன |
|
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை |
|
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த, |
|
5 |
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, |
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை |
|
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் |
|
நெறி படு கவலை நிரம்பா நீளிடை, |
|
வெள்ளி வீதியைப் போல நன்றும் |
|
10 |
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து, |
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், |
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் |
|
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி, |
|
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே! |
|
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஒளவையார் | |
உரை |
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, |
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், |
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை |
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; |
|
5 |
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; |
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! |
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் |
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, |
|
காணிய செல்லாக் கூகை நாணி, |
|
10 |
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை |
பெரிதால் அம்ம இவட்கே; அதனால் |
|
மாலை, வருதல் வேண்டும் சோலை |
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும் |
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. |
|
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர் | |
உரை |
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த |
|
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், |
|
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் |
|
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் |
|
5 |
அத்த நீள் இடைப் போகி, நன்றும் |
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் |
|
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் |
|
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, |
|
யவனர் தந்த வினை மாண் நன் கலம் |
|
10 |
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் |
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, |
|
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய |
|
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் |
|
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, |
|
15 |
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, |
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, |
|
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து |
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் |
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே. |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென |
|
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக் |
|
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி; |
|
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி, |
|
5 |
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, |
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல் |
|
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை, |
|
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர் |
|
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ, |
|
10 |
மாலை மணி இதழ் கூம்ப, காலைக் |
கள் நாறு காவியொடு தண்ணென மலரும் |
|
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து; |
|
'வாரார்கொல்?' எனப் பருவரும் |
|
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே! |
|
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார் | |
உரை |
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து |
|
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, |
|
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என, |
|
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது |
|
5 |
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு |
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக் |
|
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த |
|
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில் |
|
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள் |
|
10 |
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும் |
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல், |
|
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு |
|
உறுவது கூறும், சிறு செந் நாவின் |
|
மணி ஓர்த்தன்ன தெண் குரல் |
|
15 |
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே! |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார் | |
உரை |
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து, |
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் |
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் |
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை, |
|
5 |
சினம் கெழு தானை, தித்தன் வெளியன், |
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை, |
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும் |
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன |
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் |
|
10 |
முனை முரண் உடையக் கடந்த வென் வேல், |
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ், |
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; |
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் |
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே |
|
15 |
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி |
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த |
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன் |
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, |
|
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச் |
|
20 |
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், |
மாஅல் யானை ஆஅய் கானத்துத் |
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் |
|
வேய் அமைக் கண் இடை புரைஇ, |
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர் | |
உரை |
நோகோ யானே; நோதகும் உள்ளம்; |
|
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ, |
|
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி, |
|
வெம்பும்மன், அளியள்தானே இனியே, |
|
5 |
வன்கணாளன் மார்புஉற வளைஇ, |
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண் |
|
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத் |
|
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு, |
|
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின், |
|
10 |
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப் |
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை |
|
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல் |
|
வல்லுநள்கொல்லோ தானே எல்லி |
|
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி |
|
15 |
மீனொடு பொலிந்த வானின் தோன்றி, |
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின் |
|
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர் |
|
கை விடு சுடரின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது. - சேரமான் இளங்குட்டுவன் | |
உரை |
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் |
|
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை |
|
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க, |
|
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி |
|
5 |
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, |
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன |
|
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ, |
|
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக் |
|
காமர் துணையொடு ஏமுற வதிய, |
|
10 |
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; |
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் |
|
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப |
|
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு |
|
நம் வயிற் புரிந்த கொள்கை |
|
15 |
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் | |
உரை |
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் |
|
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் |
|
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம் |
|
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே |
|
5 |
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம் |
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின் |
|
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் |
|
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய |
|
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி, |
|
10 |
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது |
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி |
|
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி, |
|
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை |
|
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த |
|
15 |
விரல் ஊன்று வடுவின் தோன்றும் |
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் |
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன, |
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் |
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர் |
|
5 |
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, |
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் |
|
தீம் புனல் ஊர! திறவதாகக் |
|
குவளை உண்கண் இவளும் யானும் |
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, |
|
10 |
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, |
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, |
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! |
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக |
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் |
|
15 |
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, |
தணி மருங்கு அறியாள், யாய் அழ, |
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே? |
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட |
|
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த |
|
அரி நிறக் கலுழி ஆர மாந்தி, |
|
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர், |
|
5 |
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின் |
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல் |
|
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி, |
|
கான யானை கவளம் கொள்ளும் |
|
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார் |
|
10 |
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி! |
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து, |
|
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய், |
|
வினை அழி பாவையின் உலறி, |
|
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே! |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வேம்பற்றூர்க் குமரனார் | |
உரை |
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ, |
|
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள், |
|
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப, |
|
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள், |
|
5 |
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, |
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என |
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச் |
|
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து |
|
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே; |
|
10 |
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் |
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான் |
|
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர |
|
மன்ற மராஅத்த கூகை குழறினும், |
|
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப் |
|
15 |
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு, |
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல் |
|
எந்தையும் இல்லன் ஆக, |
|
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் |
|
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை |
|
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி |
|
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின், |
|
5 |
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் |
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி, |
|
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென |
|
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர், |
|
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி, |
|
10 |
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும் |
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி |
|
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி! |
|
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை |
|
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது |
|
15 |
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன் |
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத் |
|
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி, |
|
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில் |
|
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும், |
|
20 |
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின் |
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார் | |
உரை |
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ? |
|
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம். |
|
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக் |
|
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி, |
|
5 |
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த |
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை |
|
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க் |
|
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்: |
|
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல |
|
10 |
வாவு உடைமையின் வள்பின் காட்டி, |
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி |
|
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி |
|
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல், |
|
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப, |
|
15 |
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது |
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் |
|
அரவச் சீறூர் காண, |
|
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே. |
|
தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார் | |
உரை |
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி |
|
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர் |
|
அடி அமை பகழி ஆர வாங்கி; |
|
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை, |
|
5 |
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி |
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும் |
|
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து |
|
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக் |
|
கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு |
|
10 |
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல், |
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள் |
|
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த |
|
நல் வரல் இள முலை நனைய; |
|
பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ. |
|
பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே உணர்ந்தாள். நம் பெருமாட்டி' என்று, தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப் புல்லங்கண்ணனார் | |
உரை |
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து |
|
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல, |
|
கடல் கண்டன்ன மாக விசும்பின் |
|
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க, |
|
5 |
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி, |
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள், |
|
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி, |
|
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை |
|
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக; |
|
10 |
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என |
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண், |
|
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், |
|
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய், |
|
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி, |
|
15 |
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது, |
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி |
|
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய |
|
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன் |
|
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின் |
|
20 |
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, |
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன் |
|
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர |
|
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி, |
|
நேர் கொள் நெடு வரைக் கவாஅன் |
|
25 |
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே. |
இரவுக் குறிக்கண் தலைமகளைத் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய, |
|
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள், |
|
எமியம் ஆக, துனி உளம் கூர, |
|
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ, |
|
5 |
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி |
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது |
|
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை |
|
முளரி கரியும் முன்பனிப் பானாள், |
|
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை! |
|
10 |
எனக்கே வந்தனை போறி! புனற் கால் |
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ, |
|
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது |
|
இனையை ஆகிச் செல்மதி; |
|
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே! |
|
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு |
|
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி, |
|
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் |
|
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்; |
|
5 |
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன் |
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற. |
|
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம். |
|
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி, |
|
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு |
|
10 |
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் |
இது நற் காலம்; கண்டிசின் பகைவர் |
|
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின், |
|
கந்து கால் ஒசிக்கும் யானை, |
|
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே! |
|
பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார் | |
உரை |
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென, |
|
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ, |
|
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி |
|
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண், |
|
5 |
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் |
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு |
|
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும் |
|
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என, |
|
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென, |
|
10 |
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ, |
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி, |
|
'தருமணற் கிடந்த பாவை என் |
|
அருமகளே என முயங்கினள் அழுமே! |
|
மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ...... | |
உரை |
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி |
|
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின், |
|
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் |
|
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், |
|
5 |
நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை, |
பொறி வரி இன வண்டு ஊதல கழியும் |
|
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம், |
|
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின் |
|
அனையேன்ஆயின், அணங்குக, என்!' என |
|
10 |
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின், |
யார்கொல் வாழி, தோழி! நெருநல் |
|
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ, |
|
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு, |
|
புதுவது வந்த காவிரிக் |
|
15 |
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே? |
பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார் | |
உரை |
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின் |
|
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு |
|
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை, |
|
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே |
|
5 |
இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப் |
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச் |
|
சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து |
|
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக் |
|
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ, |
|
10 |
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ், |
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை |
|
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி |
|
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென, |
|
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து |
|
15 |
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று |
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப் |
|
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில், |
|
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க் |
|
கூர் முகச் சிதலை வேய்ந்த |
|
20 |
போர் மடி நல் இறைப் பொதியிலானே? |
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது. -கடியலூர் உருத்திரங்கண்ணனார் | |
உரை |
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக, |
|
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே; |
|
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப! |
|
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த |
|
5 |
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் |
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின் |
|
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து, |
|
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்; |
|
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன் |
|
10 |
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, |
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண் |
|
வாள் வரி வயப் புலி கல் முழை உரற, |
|
கானவர் மடிந்த கங்குல்; |
|
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே? |
|
இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது. -கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் | |
உரை |
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட, |
|
அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை, |
|
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன் |
|
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை, |
|
5 |
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக் |
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் |
|
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும் |
|
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி |
|
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து, |
|
10 |
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை |
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக் |
|
கயல் உமிழ் நீரின் கண் பனி வார, |
|
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு |
|
வருந்துமால், அளியள், திருந்திழைதானே! |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - தொண்டியாமூர்ச் சாத்தனார் | |
உரை |
கானலும் கழறாது; கழியும் கூறாது; |
|
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது; |
|
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே; |
|
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் |
|
5 |
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, |
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து, |
|
பறைஇ தளரும் துறைவனை, நீயே, |
|
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால் |
|
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம் |
|
10 |
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு |
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் |
|
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து, |
|
'நின் உறு விழுமம் களைந்தோள் |
|
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே. |
|
தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் | |
உரை |
'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும் |
|
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
பணை எழில் அழிய வாடும்; நாளும் |
|
நினைவல்மாது அவர் பண்பு' என்று ஓவாது |
|
5 |
இனையல் வாழி, தோழி! புணர்வர் |
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து |
|
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த |
|
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள் |
|
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார், |
|
10 |
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை |
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின், |
|
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப் |
|
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய, |
|
கருங் கோட்டு இருப்பை ஊரும் |
|
15 |
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே! |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -கல்லாடனார் | |
உரை |
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் |
|
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி |
|
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக் |
|
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும் |
|
5 |
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்; |
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன் |
|
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து, |
|
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி, |
|
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன் |
|
10 |
புல் வேய் குரம்பை புலர ஊன்றி, |
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில், |
|
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து, |
|
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் |
|
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல் |
|
15 |
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின் |
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள் |
|
மணி ஏர் மாண் நலம் சிதைய, |
|
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் | |
உரை |
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த |
|
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும் |
|
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச் |
|
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல் |
|
5 |
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல் |
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின் |
|
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின், |
|
வருவர் வாழி, தோழி! பல புரி |
|
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ, |
|
10 |
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ, |
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட, |
|
காடு கவின் அழிய உரைஇ, கோடை |
|
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க் |
|
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம் |
|
15 |
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம் |
இன் களி நறவின் இயல் தேர் நன்னன் |
|
விண் பொரு நெடு வரைக் கவாஅன் |
|
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -முள்ளியூர்ப் பூதியார் | |
உரை |
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து, |
|
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும் |
|
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என, |
|
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச் |
|
5 |
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை |
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து, |
|
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ |
|
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து, |
|
பழங்கண் கொண்ட பசலை மேனியள், |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை |
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள, |
|
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள், |
|
நல் மணல் வியலிடை நடந்த |
|
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை |
|
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் |
|
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி |
|
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின், |
|
5 |
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் |
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண |
|
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண் |
|
தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து |
|
வருதும்' என்றனர் அன்றே தோழி! |
|
10 |
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் |
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த |
|
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என |
|
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி, |
|
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன் |
|
15 |
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், |
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு |
|
மண் பயம் பூப்பப் பாஅய், |
|
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே? |
|
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி சாத்தனார். | |
உரை |
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின் |
|
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் |
|
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால், |
|
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில், |
|
5 |
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை |
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க, |
|
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து, |
|
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு |
|
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது |
|
10 |
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல், |
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன் |
|
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர! |
|
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி |
|
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ, |
|
15 |
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, |
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக் |
|
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது |
|
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து, |
|
20 |
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய, |
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து |
|
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி, |
|
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ் |
|
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு, |
|
25 |
கூர்நுனை மழுகிய எயிற்றள் |
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே. |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம் - பாடிய இளங்கடுங்கோ | |
உரை |
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும், |
|
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப் |
|
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண் |
|
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து |
|
5 |
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் |
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின் |
|
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக் |
|
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை, |
|
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ, |
|
10 |
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை |
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் |
|
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும், |
|
வல்லே வருவர்போலும் வெண் வேல் |
|
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர் |
|
15 |
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த |
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின் |
|
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின் |
|
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த |
|
அணங்குடை வன முலைத் தாஅய நின் |
|
20 |
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார் | |
உரை |
வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின், |
|
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி |
|
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி, |
|
நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின் |
|
5 |
பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி, |
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு, |
|
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப் |
|
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன, |
|
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து |
|
10 |
அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக, |
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர, |
|
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து, |
|
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு |
|
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட் |
|
15 |
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும், |
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி |
|
'எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக் |
|
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத் |
|
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' என, |
|
20 |
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை |
முன் தான் கண்ட ஞான்றினு ம் |
|
பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே. |
|
தோழி வரைவு மலிந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில், |
|
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு, |
|
சிறு கண் யானை நெடுங் கை நீட்டி |
|
5 |
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது, |
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் |
|
விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர் |
|
நல் நிலை பொறித்த கல் நிலை அதர, |
|
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச் |
|
10 |
சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை, |
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய், |
|
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம் |
|
மதி ஏர் வாள் நுதல் புலம்ப, |
|
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே? |
|
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார் | |
உரை |
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக, |
|
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி, |
|
வீ ததை கானல் வண்டல் அயர, |
|
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து, |
|
5 |
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை |
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி |
|
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி, |
|
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து, |
|
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே |
|
10 |
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன் |
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத் |
|
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ, |
|
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப் |
|
பொன் நேர் நுண் தாது நோக்கி, |
|
15 |
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே. |
இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க் கண்ணம்பாளனார் | |
உரை |
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய், |
|
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின், |
|
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார் |
|
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை |
|
5 |
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ, |
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப, |
|
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று |
|
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு |
|
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு |
|
10 |
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன், |
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க் |
|
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி, |
|
எக்கர் இட்ட குப்பை வெண் மணல் |
|
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் |
|
15 |
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை, |
நான் மறை முது நூல் முக்கட் செல்வன், |
|
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய |
|
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் |
|
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் |
|
20 |
மகர நெற்றி வான் தோய் புரிசைச் |
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல் |
|
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர் |
|
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால், |
|
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள், |
|
25 |
அணங்குசால், அரிவை இருந்த |
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே. |
|
இடைச் சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து, |
|
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ, |
|
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் |
|
வீளை அம்பின் இளையரொடு மாந்தி, |
|
5 |
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட, |
வேட்டம் போகிய குறவன் காட்ட |
|
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர, |
|
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட! |
|
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து |
|
10 |
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல், |
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும், |
|
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால், |
|
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய |
|
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ, |
|
15 |
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க |
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் |
|
வெறி அயர் வியன் களம் கடுக்கும் |
|
பெரு வரை நண்ணிய சாரலானே. |
|
தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது. - கபிலர் | |
உரை |
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத் |
|
திதலை அல்குல் அவ் வரி வாடவும், |
|
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார் |
|
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும் |
|
5 |
நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று |
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி, |
|
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு, |
|
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி, |
|
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி, |
|
10 |
காலை வந்தன்றால் காரே மாலைக் |
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி |
|
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் |
|
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற, |
|
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு |
|
15 |
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? |
தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -கருவூர்க் கலிங்கத்தார் | |
உரை |
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய |
|
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின் |
|
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும் |
|
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்! |
|
5 |
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு |
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட, |
|
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் |
|
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப் |
|
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை |
|
10 |
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, |
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை |
|
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண், |
|
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர், |
|
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க, |
|
15 |
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் |
செக்கர் வானம் சென்ற பொழுதில், |
|
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த் |
|
தார் மணி பல உடன் இயம்ப |
|
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே. |
|
தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை |
|
நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய, |
|
பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து, |
|
இரும்பின் இன் உயிர் உடையோர் போல, |
|
5 |
வலித்து வல்லினர், காதலர்; வாடல் |
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர் |
|
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய, |
|
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் |
|
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து |
|
10 |
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில், |
பெரு விழா விளக்கம் போல, பல உடன் |
|
இலை இல மலர்ந்த இலவமொடு |
|
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை |
|
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் |
|
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை |
|
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை |
|
5 |
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும் |
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு |
|
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே, |
|
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப் |
|
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே, |
|
10 |
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட, |
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப, |
|
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து, |
|
இன்னும் பிறள் வயினானே; மனையோள் |
|
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல், |
|
15 |
மாரி அம்பின், மழைத்தோற் பழையன் |
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என் |
|
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின் |
|
யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர் |
|
திரு நுதல் பசப்ப நீங்கும் |
|
20 |
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே. |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது. -பரணர் | |
உரை |
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு |
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி |
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு |
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி, |
|
5 |
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் |
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி, |
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர் |
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன, |
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் |
|
10 |
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு |
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண், |
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து, |
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி, |
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன |
|
15 |
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து |
வேனில் வெற்பின் கானம் காய, |
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை, |
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை |
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து, |
|
20 |
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை |
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி, |
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் |
|
வைகு கடல் அம்பியின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உரை |
பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ! |
|
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ, |
|
போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து |
|
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர் |
|
5 |
அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர் |
கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும் |
|
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும் |
|
கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என |
|
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி, |
|
10 |
பொலிந்த ஆயமொடு காண்தக இயலி, |
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும், |
|
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும், |
|
குறமகள் காக்கும் ஏனல் |
|
புறமும் தருதியோ? வாழிய, மழையே! |
|
இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வீரை வெளியன் தித்தனார் | |
உரை |
பசும் பழப் பலவின் கானம் வெம்பி, |
|
விசும்பு கண் அழிய, வேனில் நீடி, |
|
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் |
|
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு |
|
5 |
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி, |
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் |
|
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென, |
|
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற, |
|
திதலை அல்குல் குறுமகள் அவனொடு |
|
10 |
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் |
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ, |
|
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ் |
|
நன்னராளர் கூடு கொள் இன் இயம் |
|
தேர் ஊர் தெருவில் ததும்பும் |
|
15 |
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே. |
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் | |
உரை |
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு |
|
உப்பின் குப்பை ஏறி, எல் பட, |
|
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே |
|
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே; |
|
5 |
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்; |
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப் |
|
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த |
|
வம்ப நாரை இரிய, ஒரு நாள், |
|
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும், |
|
10 |
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை |
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி |
|
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப, |
|
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில |
|
நிரைமணிப் புரவி விரைநடை தவிர, |
|
15 |
இழுமென் கானல் விழு மணல் அசைஇ, |
ஆய்ந்த பரியன் வந்து, இவண் |
|
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே! |
|
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - உலோச்சனார் | |
உரை |
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ |
|
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ, |
|
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி, |
|
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர் |
|
5 |
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி, |
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் |
|
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர் |
|
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி, |
|
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு |
|
10 |
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை, |
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி, |
|
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும், |
|
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை |
|
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி, |
|
15 |
அறல் என விரிந்த உறல் இன் சாயல் |
ஒலி இருங் கூந்தல் தேறும்' என, |
|
வலிய கூறவும் வல்லையோ, மற்றே? |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் | |
உரை |
மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல் |
|
பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ! |
|
யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின் |
|
எய்யா வரி வில் அன்ன பைந் தார், |
|
5 |
செவ் வாய், சிறு கிளி சிதைய வாங்கி, |
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல் |
|
வளை சிறை வாரணம் கிளையொடு கவர, |
|
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள் |
|
நீ வந்து அளிக்குவைஎனினே மால் வரை |
|
10 |
மை படு விடரகம் துழைஇ, ஒய்யென |
அருவி தந்த, அரவு உமிழ், திரு மணி |
|
பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின், |
|
இரவும் இழந்தனள்; அளியள் உரவுப் பெயல் |
|
உரும் இறை கொண்ட உயர்சிமைப் |
|
15 |
பெரு மலைநாட! நின் மலர்ந்த மார்பே. |
தோழி தலைமகனைச் செறிப்பு அறிவுறீஇ இரவுக் குறி மறுத்தது. -பொதும்பில்கிழான் வெண்கண்ணனார் | |
உரை |
கான் உயர் மருங்கில் கவலை அல்லது, |
|
வானம் வேண்டா வில் ஏர் உழவர் |
|
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த, |
|
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய், |
|
5 |
பொறித்த போலும் வால் நிற எருத்தின், |
அணிந்த போலும் செஞ் செவி, எருவை; |
|
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து |
|
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட, |
|
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி |
|
10 |
கொல் பசி முது நரி வல்சி ஆகும் |
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப் |
|
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி, |
|
முருந்து ஏர் முறுவல், இளையோள் |
|
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே. |
|
பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை, |
|
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப் |
|
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து, |
|
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால், |
|
5 |
வித்திய மருங்கின் விதை பல நாறி, |
இரலை நல் மானினம் பரந்தவைபோல், |
|
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர், |
|
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி, |
|
களை கால் கழீஇய பெரும் புன வரகின் |
|
10 |
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட, |
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை |
|
காமர் கலவம் பரப்பி, ஏமுறக் |
|
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த |
|
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து, |
|
15 |
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் |
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக் |
|
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி, |
|
விரிஉளை, நல் மான் கடைஇ |
|
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே. |
|
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார் | |
உரை |
'அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள் |
|
திருந்துவேல் விடலையொடு வரும்' என, தாயே, |
|
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி, |
|
மனை மணல் அடுத்து, மாலை நாற்றி, |
|
5 |
உவந்து, இனிது அயரும் என்ப; யானும், |
மான் பிணை நோக்கின் மட நல்லாளை |
|
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும், |
|
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள், |
|
கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய |
|
10 |
நலம் புனை உதவியும் உடையன்மன்னே; |
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல; |
|
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி, |
|
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல், |
|
ஆகுவது அறியும் முதுவாய், வேல! |
|
15 |
கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்; |
மாறா வருபனி கலுழும் கங்குலில், |
|
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர், |
|
எம் மனை முந்துறத் தருமோ? |
|
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே? |
|
மகட் போக்கிய நற்றாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து, |
|
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் |
|
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி, |
|
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி |
|
5 |
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு |
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து, |
|
விடியல் வைகறை இடூஉம் ஊர! |
|
தொடுகலம்; குறுக வாரல் தந்தை |
|
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, |
|
10 |
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய, |
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை |
|
அன்னிமிஞிலியின் இயலும் |
|
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே. |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர் | |
உரை |
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும், |
|
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும், |
|
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த |
|
தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம் |
|
5 |
இனையல் வாழி, தோழி! முனை எழ |
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின், |
|
மறம் மிகு தானை, கண்ணன் எழினி |
|
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும், |
|
நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ |
|
10 |
தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல் |
மடவோள் தழீஇய விறலோன் மார்பில் |
|
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு, |
|
கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு |
|
இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர, |
|
15 |
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி, |
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம் |
|
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு |
|
இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -மாமூலனார் | |
உரை |
'கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?' எனக் |
|
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது, |
|
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி, |
|
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து; |
|
5 |
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை |
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின் |
|
இள மழை சூழ்ந்த மட மயில் போல, |
|
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து, |
|
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல் |
|
10 |
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, |
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள், |
|
ஆன்ற கற்பின் சான்ற பெரியள், |
|
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது |
|
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில், |
|
15 |
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன், |
ஏர் மலர் நிறை சுனை உறையும் |
|
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே! |
|
புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன், |
|
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும் |
|
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து, |
|
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர, |
|
5 |
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் |
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ, |
|
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, |
|
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன, |
|
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின், |
|
10 |
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய |
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே |
|
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் |
|
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல் |
|
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும் |
|
15 |
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, |
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல் |
|
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட, |
|
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது, |
|
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், |
|
20 |
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, |
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள், |
|
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் |
|
இழந்த நாடு தந்தன்ன |
|
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், |
|
புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை, |
|
ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து, |
|
இன்னா உறையுட்டுஆயினும், இன்பம் |
|
5 |
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள், |
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி |
|
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப! |
|
பொம்மற் படு திரை கம்மென உடைதரும் |
|
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி, |
|
10 |
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற, |
நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று, |
|
சேந்தனிர் செல்குவிர்ஆயின், யாமும் |
|
எம் வரை அளவையின் பெட்குவம்; |
|
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே. |
|
தலைமகள் குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார் | |
உரை |
அம்ம, வாழி தோழி! 'பொன்னின் |
|
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை |
|
வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன் |
|
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை, |
|
5 |
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, |
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் |
|
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ, |
|
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை, |
|
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு, |
|
10 |
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும் |
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்' என்று |
|
எவன் கையற்றனை, இகுளை? சோழர் |
|
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும், |
|
ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது |
|
15 |
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன், |
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை |
|
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத் |
|
தோல் முலைப் பிணவொடு திளைக்கும் |
|
வேனில் நீடிய சுரன் இறந்தோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன், |
|
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப, |
|
புலிப் பகை வென்ற புண் கூர் யானை |
|
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின், |
|
5 |
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் |
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி, |
|
சிறு பல் மின்மினி போல, பல உடன் |
|
மணி நிற இரும் புதல் தாவும் நாட! |
|
யாமே அன்றியும் உளர்கொல் பானாள், |
|
10 |
உத்தி அரவின் பைத் தலை துமிய, |
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை, |
|
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக, |
|
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி |
|
தேராது வரூஉம் நின்வயின் |
|
15 |
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? |
இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் | |
உரை |
'உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும், |
|
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய் |
|
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர், |
|
'இன்னள் இனையள், நின் மகள்' என, பல் நாள் |
|
5 |
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன், |
'நாணுவள் இவள்' என, நனி கரந்து உறையும் |
|
யான் இவ் வறு மனை ஒழிய, தானே, |
|
'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை |
|
எனக்கு எளிது ஆகல் இல்' என, கழற் கால் |
|
10 |
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற, |
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான் |
|
அன்னேன் அன்மை நன் வாயாக, |
|
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி |
|
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப் |
|
15 |
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர், |
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த, |
|
நுனை குழைத்து அலமரும் நொச்சி |
|
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே! |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கபிலர் | |
உரை |
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை, |
|
கடல் போல் தானை, கலிமா, வழுதி |
|
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச் |
|
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே |
|
5 |
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில், |
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி |
|
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப, |
|
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து, |
|
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர் |
|
10 |
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை |
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும் |
|
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித் |
|
தண்டலை கமழும் கூந்தல், |
|
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் | |
உரை |
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின் |
|
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல, |
|
தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப் |
|
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி, |
|
5 |
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே |
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர, |
|
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே |
|
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை |
|
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி, |
|
10 |
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி, |
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க் |
|
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன |
|
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற |
|
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல |
|
15 |
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி, |
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில், |
|
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ |
|
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி, |
|
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து, |
|
20 |
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர, |
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை |
|
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக் |
|
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய |
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர் | |
உரை |
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப் |
|
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப, |
|
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை |
|
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம், |
|
5 |
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத் |
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன், |
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன |
|
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர் |
|
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து |
|
10 |
ஆராக் காதலொடு தார் இடை குழைய, |
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், |
|
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து, |
|
அடுபோர் வேளிர் வீரை முன்துறை, |
|
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை, |
|
15 |
பெரு பெயற்கு உருகியாஅங்கு, |
திருந்துஇழை நெகிழ்ந்தன, தட மென் தோளே? |
|
வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் |
|
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் |
|
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப் |
|
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர் |
|
5 |
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக் |
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின், |
|
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை, |
|
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள, |
|
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல் |
|
10 |
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல் |
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை, |
|
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து, |
|
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ |
|
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக் |
|
15 |
கூழை உளர்ந்து மோழைமை கூறவும், |
மறுத்த சொல்லள் ஆகி, |
|
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் | |
உரை |
யாம இரவின் நெடுங் கடை நின்று, |
|
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் |
|
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு |
|
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் |
|
5 |
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், |
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, |
|
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு |
|
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, |
|
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு |
|
10 |
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று |
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி, |
|
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப் |
|
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து, |
|
உரு வினை நன்னன், அருளான், கரப்ப, |
|
15 |
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் |
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல், |
|
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை |
|
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல் |
|
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல, |
|
20 |
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி, |
நல்கினள், வாழியர், வந்தே ஓரி |
|
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக் |
|
கார் மலர் கடுப்ப நாறும், |
|
ஏர் நுண், ஓதி மாஅயோளே! |
|
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும் |
|
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே, |
|
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான், |
|
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன், |
|
5 |
நேரா எழுவர் அடிப்படக் கடந்த |
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என, |
|
ஆழல் வாழி, தோழி! அவரே, |
|
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி |
|
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர் |
|
10 |
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து |
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல் |
|
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி |
|
செல்லா நல் இசை நிறுத்த வல் வில் |
|
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த |
|
15 |
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, |
நிலை பெறு கடவுள் ஆக்கிய, |
|
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார் | |
உரை |
குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர் |
|
எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன் |
|
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட, |
|
விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த் |
|
5 |
|
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன், |
|
பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி, |
|
தான் இவண் வந்த காலை, நம் ஊர்க் |
|
கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி, |
|
10 |
ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன் |
சாயல் மார்பின் பாயல் மாற்றி, |
|
'கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச் |
|
செலவு அரிது என்னும்' என்பது |
|
பல கேட்டனமால் தோழி! நாமே. |
|
தோழி தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - உலோச்சனார் | |
உரை |
கேளாய், எல்ல! தோழி! வாலிய |
|
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் |
|
பறை கண்டன்ன பா அடி நோன் தாள் |
|
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும், |
|
5 |
தண் மழை ஆலியின் தாஅய், உழவர் |
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் |
|
பனி படு சோலை வேங்கடத்து உம்பர், |
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர் |
|
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை |
|
10 |
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய, |
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி, |
|
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட |
|
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய |
|
வன்கண் கதவின் வெண்மணி வாயில், |
|
15 |
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை, |
நீர் ஒலித்தன்ன பேஎர் |
|
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே. |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
தா இல் நல் பொன் தைஇய பாவை |
|
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன, |
|
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால், |
|
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற |
|
5 |
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய், |
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் |
|
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி, |
|
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று |
|
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில், |
|
10 |
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும், |
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே |
|
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு |
|
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று, |
|
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ, |
|
15 |
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை |
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன் |
|
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து, |
|
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி, |
|
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய |
|
20 |
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக் |
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது |
|
எளியள் அல்லோட் கருதி, |
|
விளியா எவ்வம் தலைத் தந்தோயே. |
|
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. -பரணர் | |
உரை |
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் |
|
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு |
|
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர், |
|
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி |
|
5 |
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி, |
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை |
|
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும் |
|
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து, |
|
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை |
|
10 |
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது, |
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப் |
|
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப் |
|
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து, |
|
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் |
|
15 |
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை |
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள் |
|
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர் |
|
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும், |
|
சென்று, தாம் நீடலோஇலரே என்றும் |
|
20 |
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை, |
வலம் படு வென்றி வாய் வாள், சோழர் |
|
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த |
|
அறல் என நெறிந்த கூந்தல், |
|
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார் | |
உரை |
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய், |
|
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம் |
|
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி, |
|
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது; |
|
5 |
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை, |
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை, |
|
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே; |
|
அமரும் நம் வயினதுவே; நமர் என |
|
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப் |
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி |
|
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ, |
|
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப, |
|
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை |
|
15 |
மாரி மாலையும் தமியள் கேட்டே? |
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | |
உரை |
'விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர், |
|
வேறு பல் மொழிய தேஎம் முன்னி, |
|
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு |
|
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி, |
|
5 |
செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே, |
வலன் ஆக!' என்றலும் நன்றுமன் தில்ல |
|
கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த |
|
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி, |
|
கொடுமரம் பிடித்த கோடா வன்கண், |
|
10 |
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர், |
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை, |
|
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல் |
|
படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ, |
|
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு, |
|
15 |
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண், |
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு |
|
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே. |
|
செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன் | |
உரை |
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள் |
|
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல், |
|
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு, |
|
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் |
|
5 |
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் |
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப் |
|
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்; |
|
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும், |
|
கழனி உழவர் குற்ற குவளையும், |
|
10 |
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, |
பல் இளங் கோசர் கண்ணி அயரும், |
|
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் |
|
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் |
|
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய |
|
15 |
பெருங் களிற்று எவ்வம் போல, |
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே. |
|
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார் | |
உரை |
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, |
|
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, |
|
துவலை தூவல் கழிய, அகல் வயல் |
|
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் |
|
5 |
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, |
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை |
|
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய |
|
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, |
|
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, |
|
10 |
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, |
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென |
|
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, |
|
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, |
|
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச் |
|
15 |
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; |
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த |
|
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, |
|
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, |
|
எயிறு தீப் பிறப்பத் திருகி, |
|
20 |
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு |
|
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, |
|
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, |
|
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, |
|
5 |
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, |
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள், |
|
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல், |
|
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை, |
|
படாஅவாகும், எம் கண்' என, நீயும், |
|
10 |
'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, |
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் |
|
பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய், |
|
வர எளிதாக எண்ணுதி; அதனால், |
|
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் |
|
15 |
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் |
அடைய முயங்கேம்ஆயின், யாமும் |
|
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே |
|
அன்னை அறியினும் அறிக! அலர் வாய் |
|
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க! |
|
20 |
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, |
ஒண் பூ வேங்கை கமழும் |
|
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி, |
|
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும், |
|
'வாராயோ!' என்று ஏத்தி, பேர் இலைப் |
|
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் |
|
5 |
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி, |
'என் பாடு உண்டனைஆயின், ஒரு கால், |
|
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டி, |
|
'பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான் |
|
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள் |
|
10 |
அறனிலாளனொடு இறந்தனள், இனி' என, |
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் |
|
'பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச் |
|
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் |
|
பொரி அரை விளவின் புன் புற விளை புழல், |
|
15 |
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர் |
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை, |
|
மடத் தகை மெலியச் சாஅய், |
|
நடக்கும்கொல்? என, நோவல் யானே. |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ, |
|
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும், |
|
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர், |
|
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய, |
|
5 |
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் |
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி, |
|
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின், |
|
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும் |
|
காணலாகா மாண் எழில் ஆகம் |
|
10 |
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே |
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின், |
|
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும், |
|
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண், |
|
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து, |
|
15 |
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், |
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை |
|
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் |
|
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து, |
|
யாணர்த் தண் பணை உறும் என, கானல் |
|
20 |
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள் |
நல் எழில் சிதையா ஏமம் |
|
சொல் இனித் தெய்ய, யாம் தெளியுமாறே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
நனை விளை நறவின் தேறல் மாந்தி, |
|
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ, |
|
'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என, |
|
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால், |
|
5 |
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல், |
மதி உடம்பட்ட மை அணற் காளை |
|
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து, |
|
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின் |
|
தண் நறு முச்சி புனைய, அவனொடு |
|
10 |
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை, |
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை |
|
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ, |
|
இரும் பிடி இரியும் சோலை |
|
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே. |
|
தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார் | |
உரை |
வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக் |
|
கான நாடன் உறீஇய நோய்க்கு, என் |
|
மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்; |
|
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண், |
|
5 |
கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும், |
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின், |
|
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ, |
|
தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின், |
|
மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த |
|
10 |
ஆதிமந்தி காதலற் காட்டி, |
படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின் |
|
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர், |
|
சென்மோ வாழி, தோழி! பல் நாள், |
|
உரவு உரும் ஏறொடு மயங்கி, |
|
15 |
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர் |
|
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி, |
|
ஆழல் வாழி, தோழி! கேழல் |
|
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய் |
|
5 |
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர், |
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு |
|
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் |
|
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை, |
|
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின் |
|
10 |
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் |
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி |
|
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் |
|
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட, |
|
நன் முகை அதிரல் போதொடு, குவளைத் |
|
15 |
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின் |
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
செல்க, பாக! எல்லின்று பொழுதே |
|
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன் |
|
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா, |
|
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை, |
|
5 |
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி, |
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன, |
|
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம் |
|
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி, |
|
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக, |
|
10 |
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில், |
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள் |
|
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த |
|
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல் |
|
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ, |
|
15 |
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என, |
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால் |
|
அருங் கடி வியல் நகர் நோக்கி, |
|
வருந்துமால், அளியள் திருந்திழைதானே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் | |
உரை |
அன்பும், மடனும், சாயலும், இயல்பும், |
|
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும், |
|
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி, |
|
இன்றே இவணம் ஆகி, நாளை, |
|
5 |
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற |
அகலா அம் துளை, கோடை முகத்தலின், |
|
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல் |
|
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், |
|
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து, |
|
10 |
யாத்த தூணித் தலை திறந்தவைபோல், |
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர் |
|
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர, |
|
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச் |
|
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை |
|
15 |
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், |
செறி தொடி முன்கை, நம் காதலி |
|
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே? |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்; |
|
நாண் இலை மன்ற யாணர் ஊர! |
|
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை, |
|
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின், |
|
5 |
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக் |
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும், |
|
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான், |
|
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை, |
|
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய, |
|
10 |
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி, |
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு |
|
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள், |
|
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த் |
|
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப் |
|
15 |
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி, |
போர் அடு தானைக் கட்டி |
|
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே. |
|
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
'நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே; |
|
திதலை அல்குல் வரியும் வாடின; |
|
என் ஆகுவள்கொல் இவள்?' என, பல் மாண் |
|
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி, |
|
5 |
இனையல் வாழி, தோழி! நனை கவுள் |
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு |
|
முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப் |
|
புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப, |
|
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் |
|
10 |
செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து, |
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் |
|
பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ, |
|
நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள், |
|
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின், |
|
15 |
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை, |
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப் |
|
பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன் |
|
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர், |
|
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர், |
|
20 |
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, |
எல் உமிழ் ஆவணத்து அன்ன, |
|
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே! |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது; பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர் | |
உரை |
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென |
|
வரை இழி அருவி ஆரம் தீண்டித் |
|
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில், |
|
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக் |
|
5 |
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி, |
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே |
|
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல |
|
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின் |
|
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று, |
|
10 |
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப் |
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய் |
|
இரும் பிடி இரியும் சோலைப் |
|
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லி யது. - அண்டர் மகன் குறுவழுதியார் | |
உரை |
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் |
|
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென, |
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
|
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி |
|
5 |
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் |
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண், |
|
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி, |
|
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள் |
|
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென, |
|
10 |
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்! |
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் |
|
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப, |
|
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி |
|
நல் மா மேனி தொலைதல் நோக்கி, |
|
15 |
இனையல் என்றி; தோழி! சினைய |
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப் |
|
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து, |
|
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை, |
|
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம் |
|
20 |
இன் இளவேனிலும் வாரார், |
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த |
|
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப் |
|
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல், |
|
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று, |
|
5 |
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்! |
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த |
|
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு, |
|
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம், |
|
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின், |
|
10 |
தீதும் உண்டோ, மாதராய்?' என, |
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர் |
|
கை வல் பாகன் பையென இயக்க, |
|
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில் |
|
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி, |
|
15 |
சிறிய இறைஞ்சினள், தலையே |
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே. |
|
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு |
|
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும், |
|
இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி, |
|
நல் இசை வலித்த நாணுடை மனத்தர் |
|
5 |
கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர், |
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கைக் |
|
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ, |
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை |
|
வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக |
|
10 |
வருவர் வாழி, தோழி! பொருவர் |
செல் சமம் கடந்த செல்லா நல் இசை, |
|
விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன் |
|
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் |
|
ஆடு வண்டு அரற்றும் முச்சித் |
|
15 |
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
காண் இனி வாழி, தோழி! பானாள், |
|
மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின், |
|
மாஅல் யானை புலி செத்து வெரீஇ, |
|
இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும் |
|
5 |
பெருங் கல் நாடன் கேண்மை, இனியே, |
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண், |
|
மன்ற வேங்கை மண நாட் பூத்த |
|
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் |
|
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர் |
|
10 |
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் |
ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும், |
|
விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை |
|
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி, |
|
'முருகு' என வேலற் தரூஉம். |
|
15 |
பருவமாகப் பயந்தன்றால், நமக்கே. |
தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்,சொல்லியது. - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் | |
உரை |
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின் |
|
அலர் முலை நனைய, அழாஅல் தோழி! |
|
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம் |
|
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென, |
|
5 |
ஊன் இல் யானை உயங்கும் வேனில், |
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின், |
|
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை |
|
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல் |
|
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல் |
|
10 |
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு, |
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த |
|
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி |
|
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ, |
|
பொருள்வயின் நீடலோஇலர் நின் |
|
15 |
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே. |
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை, |
|
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின், |
|
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப் |
|
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய, |
|
5 |
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய |
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப, |
|
கால் என மருள, ஏறி, நூல் இயல் |
|
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர் |
|
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந! |
|
10 |
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை |
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள, |
|
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி |
|
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத, |
|
எல்லை போகிய புல்லென் மாலை, |
|
15 |
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர், |
கழி படர் உழந்த பனி வார் உண்கண் |
|
நல் நிறம் பரந்த பசலையள் |
|
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து |
|
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும், |
|
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ? |
|
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து, |
|
5 |
விண்டு முன்னிய கொண்டல் மா மழை |
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப, |
|
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி |
|
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ, |
|
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ |
|
10 |
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய, |
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல் |
|
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ |
|
மாரி அம் குருகின் ஈரிய குரங்க, |
|
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி, |
|
15 |
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை |
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய, |
|
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு |
|
தொல் நலம் சிதையச் சாஅய், |
|
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
மணி மருள் மலர முள்ளி அமன்ற, |
|
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன் |
|
அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி, |
|
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை, |
|
5 |
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப் |
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக் |
|
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ |
|
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன் |
|
காமம் பெருமை அறியேன், நன்றும் |
|
10 |
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல் |
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப, |
|
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை |
|
அறியாமையின் அழிந்த நெஞ்சின், |
|
'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின், |
|
15 |
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை, |
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என |
|
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின், |
|
'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என, |
|
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த |
|
20 |
ஆதிமந்தி போல, |
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே. |
|
ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பரணர் | |
உரை |
'புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ |
|
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப, |
|
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் |
|
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ, |
|
5 |
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து |
இன்னா கழியும் கங்குல்' என்று நின் |
|
நல் மா மேனி அணி நலம் புலம்ப, |
|
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல் |
|
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை |
|
10 |
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு, |
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின் |
|
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு, |
|
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும் |
|
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும், |
|
15 |
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து |
ஐய அமர்த்த உண்கண் நின் |
|
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார் | |
உரை |
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின், |
|
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென, |
|
மட மான் வல்சி தரீஇய, நடு நாள், |
|
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த |
|
5 |
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து, |
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற, |
|
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு, |
|
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி, |
|
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் |
|
10 |
பெருங் கல் நாட! பிரிதிஆயின், |
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு |
|
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும் |
|
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ், |
|
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி |
|
15 |
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து, |
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள் |
|
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த |
|
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே? |
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - கபிலர் | |
உரை |
அளிதோதானே; எவன் ஆவதுகொல்? |
|
மன்றும் தோன்றாது; மரனும் மாயும் |
|
'புலி என உலம்பும் செங் கண் ஆடவர், |
|
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர், |
|
5 |
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய |
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும் |
|
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி, |
|
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், |
|
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் |
|
10 |
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய, |
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே, |
|
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என, |
|
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு |
|
நெருநலும் தீம் பல மொழிந்த |
|
15 |
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே! |
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார் | |
உரை |
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத் |
|
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை |
|
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப, |
|
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் |
|
5 |
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் |
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, |
|
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில் |
|
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி, |
|
யாயும் ஆயமோடு அயரும்; நீயும், |
|
10 |
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி, |
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து, |
|
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட |
|
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர், |
|
பூ வேய் புன்னை அம் தண் பொழில், |
|
15 |
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே. |
தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. - எழுஉப்பன்றி நாகன் குமரனார் | |
உரை |
'துனி இன்று இயைந்த துவரா நட்பின் |
|
இனியர் அம்ம, அவர்' என முனியாது |
|
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும், |
|
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய |
|
5 |
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை |
மூங்கில் இள முளை திரங்க, காம்பின் |
|
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து |
|
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை, |
|
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி, |
|
10 |
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை |
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை |
|
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும் |
|
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய் |
|
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச் |
|
15 |
செம் முக மந்தி ஆடும் |
நல் மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் | |
உரை |
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச் |
|
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது |
|
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு |
|
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை, |
|
5 |
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம், |
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் |
|
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ் |
|
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு |
|
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ, |
|
10 |
அறியா வேலற் தரீஇ, அன்னை |
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி, |
|
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம், |
|
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை |
|
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள், |
|
15 |
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய, |
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ் |
|
முயங்கல் இயைவதுமன்னோ தோழி! |
|
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில் |
|
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச் |
|
20 |
சாந்த மென் சினை தீண்டி, மேலது |
பிரசம் தூங்கும் சேண் சிமை |
|
வரையக வெற்பன் மணந்த மார்பே! |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார் | |
உரை |
அவரை ஆய் மலர் உதிர, துவரின |
|
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப, |
|
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக் |
|
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய, |
|
5 |
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு |
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி |
|
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக் |
|
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை! |
|
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப் |
|
10 |
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை |
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை |
|
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல; |
|
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது |
|
நமக்கே எவ்வம் ஆகின்று; |
|
15 |
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே! |
தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் 'ஆற்றேன்' என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் | |
உரை |
'''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன |
|
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை |
|
பகல் உறை முது மரம் புலம்பப் போகி, |
|
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை |
|
5 |
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை |
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை |
|
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு |
|
இனிதுகொல், வாழி தோழி?'' என, தன் |
|
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப, |
|
10 |
அருந் துயர் உடையள் இவள்' என விரும்பிப் |
பாணன் வந்தனன், தூதே; நீயும் |
|
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி, |
|
நெடுந் தேர் ஊர்மதி, வலவ! |
|
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை.......மள்ளனார் | |
உரை |
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் |
|
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என |
|
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் |
|
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி, |
|
5 |
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில், |
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை |
|
வல் வில் இளையர் தலைவர், எல் உற, |
|
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை, |
|
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில், |
|
10 |
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள் |
கான யானை வெண் கோடு சுட்டி, |
|
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் |
|
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற, |
|
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து |
|
15 |
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக் |
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண், |
|
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு |
|
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் |
|
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி, |
|
20 |
அம் மா அரிவை ஒழிய, |
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை |
|
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக, |
|
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் |
|
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர! |
|
5 |
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு |
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு |
|
ஆடினை என்ப, நெருநை; அலரே |
|
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் |
|
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில், |
|
10 |
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் |
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய, |
|
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, |
|
மொய் வலி அறுத்த ஞான்றை, |
|
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை |
|
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் |
|
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து, |
|
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை, |
|
5 |
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின், |
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும் |
|
அரிய கானம் என்னார், பகை பட |
|
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக் |
|
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் |
|
10 |
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி, |
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின் |
|
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக் |
|
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார் | |
உரை |
நகை நீ கேளாய் தோழி! அல்கல்; |
|
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ, |
|
இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு |
|
நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து, |
|
5 |
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற |
தறுகட் பன்றி நோக்கி, கானவன் |
|
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி |
|
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது, |
|
'அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்' என, |
|
10 |
எய்யாது பெயரும் குன்ற நாடன் |
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி அவிழ்ந்து, |
|
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை, |
|
ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து துயல்வர, |
|
இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை; |
|
15 |
வல்லே என் முகம் நோக்கி, |
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந்தோளே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப, தோழி சொல்லியது. - கபிலர் | |
உரை |
அம்ம வாழி, தோழி! பல் நாள் |
|
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார் |
|
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை |
|
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும் |
|
5 |
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி, |
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் |
|
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ, |
|
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண் |
|
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் |
|
10 |
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார் |
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ, |
|
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர் |
|
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற |
|
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை |
|
15 |
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த |
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து, |
|
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி, |
|
உழை மான் இன நிரை ஓடும் |
|
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர் |
|
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை |
|
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப, |
|
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர, |
|
5 |
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட, |
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி, |
|
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன், |
|
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும் |
|
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு |
|
10 |
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய், |
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி, |
|
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு |
|
துறையும் துஞ்சாது, கங்குலானே! |
|
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் | |
உரை |
தூதும் சென்றன; தோளும் செற்றும்; |
|
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்; |
|
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு |
|
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின், |
|
5 |
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண் |
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித் |
|
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர் |
|
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில், |
|
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, |
|
10 |
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் |
பணியாமையின், பகை தலைவந்த |
|
மா கெழு தானை வம்ப மோரியர் |
|
புனை தேர் நேமி உருளிய குறைத்த |
|
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர், |
|
15 |
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை |
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி |
|
மா நிலம் நெளியக் குத்தி, புகலொடு |
|
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை |
|
நிரம்பா நீள் இடைப் போகி, |
|
20 |
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து |
|
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி |
|
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி, |
|
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப் |
|
5 |
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி, |
தனியன் வருதல் அவனும் அஞ்சான்; |
|
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட, |
|
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்; |
|
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத் |
|
10 |
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித் |
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப் |
|
பெருங் குளம் காவலன் போல, |
|
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது. - நக்கண்ணையார் | |
உரை |
'வைகல்தோறும் பசலை பாய, என் |
|
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென; |
|
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே, |
|
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி, |
|
5 |
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன் |
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய |
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான் |
|
சில நாள் உய்யலென் போன்ம்' எனப் பல நினைந்து, |
|
ஆழல் வாழி, தோழி! வடாஅது, |
|
10 |
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய, |
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய், |
|
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து, |
|
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத் |
|
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய |
|
15 |
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த |
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி, |
|
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம் |
|
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன், |
|
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை |
|
20 |
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து |
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள், |
|
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின், |
|
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், |
|
மாக விசும்பின் திலகமொடு பதித்த |
|
25 |
திங்கள் அன்ன நின் திரு முகத்து, |
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
'நரை விராவுற்ற நறு மென் கூந்தற் |
|
செம் முது செவிலியர் பல பாராட்ட, |
|
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி |
|
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ, |
|
5 |
மனை உறை புறவின் செங் காற் சேவல் |
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல, |
|
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும் |
|
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை |
|
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல, |
|
10 |
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி, |
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும், |
|
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி |
|
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப, |
|
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய, |
|
15 |
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென |
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின் |
|
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான் |
|
சொல்லிய அளவை, நீடாது, வல்லென, |
|
தார் மணி மா அறிவுறாஅ, |
|
20 |
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே! |
வினை முற்றி வந்து எய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம் |
|
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ, |
|
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி, |
|
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட, |
|
5 |
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான் |
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய, |
|
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல |
|
கழியாமையே, அழி படர் அகல, |
|
வருவர்மன்னால் தோழி! தண் பணைப் |
|
10 |
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண், |
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை |
|
பெரு வளம் மலர அல்லி தீண்டி, |
|
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல் |
|
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க, |
|
15 |
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை |
கடி மனை மாடத்துக் கங்குல் வீச, |
|
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய, |
|
நிரை வளை ஊருந் தோள்' என, |
|
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில |
|
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை |
|
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப் |
|
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் |
|
5 |
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு |
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது |
|
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர! |
|
பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே |
|
கையகப்பட்டமை அறியாய்; நெருநை |
|
10 |
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை |
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து, |
|
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது |
|
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத் |
|
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி, |
|
15 |
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர், |
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய |
|
அறனிலாளன்,'அறியேன்' என்ற |
|
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய், |
|
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி, |
|
20 |
நீறு தலைப்பெய்த ஞான்றை, |
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் | |
உரை |
வேனிற் பாதிரிக் கூனி மா மலர் |
|
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம், |
|
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப, |
|
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின் |
|
5 |
பொம்மல் ஓதி பொதுள வாரி, |
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் |
|
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின் |
|
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் |
|
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள |
|
10 |
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை |
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி, |
|
வல்லுவைமன்னால் நடையே கள்வர் |
|
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார், |
|
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து, |
|
15 |
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து, |
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் |
|
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும், |
|
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு |
|
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ, |
|
20 |
வெள் அரா மிளிர வாங்கும் |
பிள்ளை எண்கின் மலைவயினானே. |
|
உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி, |
|
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த |
|
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும், அன்னோட் |
|
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய் |
|
5 |
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக் |
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து |
|
மாய இருள் அளை மாய் கல் போல, |
|
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும், |
|
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ, |
|
10 |
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி, |
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப் |
|
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து |
|
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக, |
|
காமம் கைம்மிக உறுதர, |
|
15 |
ஆனா அரு படர் தலைத்தந்தோயே! |
அல்லகுறிப்பட்டுப் பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பரணர் | |
உரை |
வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்; |
|
தாரும் தையின; தழையும் தொடுத்தன; |
|
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப் |
|
பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக் |
|
5 |
குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர் |
வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன் |
|
தேம் படப் பொதுளின பொழிலே; கானமும், |
|
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள், |
|
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப் |
|
10 |
போது வந்தன்று, தூதே; நீயும் |
கலங்கா மனத்தை ஆகி, என் சொல் |
|
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி! |
|
தெற்றி உலறினும், வயலை வாடினும், |
|
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும், |
|
15 |
நின்னினும் மடவள் நனி நின் நயந்த |
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர் |
|
புலி மருள் செம்மல் நோக்கி, |
|
வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே! |
|
உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - கயமனார் | |
உரை |
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர, |
|
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக் |
|
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப, |
|
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப, |
|
5 |
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, |
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில் |
|
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர, |
|
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப் |
|
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ, |
|
10 |
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, |
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது, |
|
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் |
|
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள், |
|
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த |
|
15 |
அன்பிலாளன் அறிவு நயந்தேனே. |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது. - மோசிக் கரையனார் | |
உரை |
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ |
|
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர, |
|
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த் |
|
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல் |
|
5 |
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச் |
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின் |
|
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி |
|
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென |
|
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய், |
|
10 |
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு, |
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை |
|
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி |
|
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு |
|
வில்லோர் குறும்பில் ததும்பும், |
|
15 |
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே. |
புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி, |
|
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய், |
|
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து, |
|
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென, |
|
5 |
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, |
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின், |
|
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள், |
|
சினத்தின் கொண்ட படிவம் மாறாள், |
|
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன், |
|
10 |
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் |
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய |
|
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து, |
|
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து |
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் |
|
15 |
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும் |
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன் |
|
கொண்டல் மா மலை நாறி, |
|
அம் தீம் கிளவி வந்தமாறே. |
|
இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத் தோன்றி, |
|
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம் |
|
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம் |
|
பயம் கெடத் திருகிய பைது அறு காலை, |
|
5 |
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு, |
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார், |
|
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி, |
|
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம் |
|
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு, |
|
10 |
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ! |
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் |
|
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க, |
|
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று |
|
திரு நுதல் பொலிந்த என் பேதை |
|
15 |
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே! |
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார் | |
உரை |
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன, |
|
குழை அமல் முசுண்டை வாலிய மலர, |
|
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப் |
|
பெரிய சூடிய கவர் கோல் கோவலர், |
|
5 |
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு, |
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர, |
|
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து, |
|
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக, |
|
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி, |
|
10 |
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர் |
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை |
|
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக் |
|
காய் சின யானை கங்குல் சூழ, |
|
அஞ்சுவர இறுத்த தானை |
|
15 |
வெஞ் சின வேந்தன் பாசறையோரே? |
பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார் | |
உரை |
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து, |
|
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும் |
|
இமயச் செவ் வரை மானும்கொல்லோ? |
|
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் |
|
5 |
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை |
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ? |
|
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி |
|
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல், |
|
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து, |
|
10 |
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு |
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து, |
|
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய |
|
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து, |
|
அணங்கு அரு மரபின் பேஎய் போல |
|
15 |
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க, |
துகள் அற விளைந்த தோப்பி பருகி, |
|
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் |
|
புலாஅல் கையர், பூசா வாயர், |
|
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு |
|
20 |
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும் |
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ, |
|
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர் |
|
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின் |
|
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை, |
|
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ, |
|
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல் |
|
5 |
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ, |
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண் |
|
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலையாகி, |
|
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து, |
|
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே |
|
10 |
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் |
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் |
|
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் |
|
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண், |
|
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன, |
|
15 |
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது |
அவலம் அன்றுமன், எமக்கே; அயல |
|
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த |
|
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை |
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும் |
20 |
திரு மணி விளக்கின் அலைவாய்ச் |
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே! |
|
பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. -பரணர் | |
உரை |
'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து, |
|
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து, |
|
திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி, |
|
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து, |
|
5 |
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை, |
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை, |
|
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ |
|
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர, |
|
மை பட்டன்ன மா முக முசுவினம் |
|
10 |
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென |
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய், |
|
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் |
|
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் |
|
தாம் பழி உடையர்அல்லர்; நாளும் |
|
15 |
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை |
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த, |
|
தோளே தோழி! தவறு உடையவ்வே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப் |
|
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த |
|
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை |
|
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் |
|
5 |
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய |
காமம் கலந்த காதல் உண்டுஎனின், |
|
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி; |
|
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின், |
|
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே |
|
10 |
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது, |
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த |
|
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி, |
|
செய்து பின் இரங்கா வினையொடு |
|
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே! |
|
குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | |
உரை |
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க! |
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக! |
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது, |
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய |
|
5 |
தறுகணாளர் நல் இசை நிறுமார், |
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின், |
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல் |
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி, |
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய |
|
10 |
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் |
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி |
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால் |
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர், |
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள், |
|
15 |
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் |
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர, |
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து |
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப, |
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ, |
|
20 |
திரு நுதல் மகளிர் குரவை அயரும் |
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை, |
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின் |
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த |
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின் |
|
25 |
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம், |
|
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து |
|
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும் |
|
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே; |
|
5 |
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை |
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும் |
|
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே, |
|
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான் |
|
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன, |
|
10 |
அம் மா மேனி தொல் நலம் தொலைய, |
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே, |
|
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச் |
|
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை |
|
இன்னாது உயங்கும் கங்குலும், |
|
15 |
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே. |
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார் | |
உரை |
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல் |
|
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி, |
|
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு, |
|
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக் |
|
5 |
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி, |
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர் |
|
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப் |
|
பல் காய் அம் சினை அகவும் அத்தம் |
|
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு |
|
10 |
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே, |
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே, |
|
களி மலி கள்ளின் நல் தேர் அவியன் |
|
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும் |
|
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின் |
|
15 |
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள், |
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின், |
|
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே? |
|
செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் | |
உரை |
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப் |
|
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல் |
|
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு |
|
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி, |
|
5 |
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, |
தனியன் வந்து, பனி அலை முனியான், |
|
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற |
|
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி |
|
அசையா நாற்றம் அசை வளி பகர, |
|
10 |
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் |
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும், |
|
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு, |
|
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி, |
|
உருவச் செந் தினை நீரொடு தூஉய், |
|
15 |
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! |
என் ஆவது கொல்தானே பொன் என |
|
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய |
|
மணி நிற மஞ்ஞை அகவும் |
|
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
|
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின், |
|
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ, |
|
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப, |
|
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம், |
|
5 |
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர் |
அறியார்கொல்லோ, தாமே? அறியினும், |
|
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின், |
|
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ? |
|
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு |
|
10 |
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு |
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை |
|
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி, |
|
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை, |
|
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி, |
|
15 |
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம் |
நில வரை எல்லாம் நிழற்றி, |
|
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே. |
|
பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-ஒளவையார் | |
உரை |
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து, |
|
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம் |
|
பருவம் செய்த பானாட் கங்குல், |
|
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப, |
|
5 |
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி, |
திண் கால் உறியன், பானையன், அதளன், |
|
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, |
|
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன், |
|
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப, |
|
10 |
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ, |
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும் |
|
தண் நறு புறவினதுவே நறு மலர் |
|
முல்லை சான்ற கற்பின் |
|
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக் காடனார் | |
உரை |
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி, |
|
குடை அடை நீரின் மடையினள் எடுத்த |
|
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி, |
|
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி! |
|
5 |
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என, |
யாம் தற் கழறுங் காலை, தான் தன் |
|
மழலை இன் சொல், கழறல் இன்றி, |
|
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல் |
|
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள், |
|
10 |
ஏதிலாளன் காதல் நம்பி, |
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக் |
|
குருளை எண்கின் இருங் கிளை கவரும் |
|
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய, |
|
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம், |
|
15 |
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி |
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும் |
|
கூழை நொச்சிக் கீழது, என் மகள் |
|
செம் புடைச் சிறு விரல் வரித்த |
|
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த |
|
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன் |
|
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக் |
|
கடி இலம் புகூஉம் கள்வன் போல, |
|
5 |
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு |
ஆவது ஆக! இனி நாண் உண்டோ? |
|
வருகதில் அம்ம, எம் சேரி சேர! |
|
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண, |
|
தாரும் தானையும் பற்றி, ஆரியர் |
|
10 |
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல, |
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன் |
|
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று |
|
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல், |
|
பரந்து வெளிப்படாது ஆகி, |
|
15 |
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே! |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர் | |
உரை |
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப் |
|
பகல் அழி தோற்றம் போல, பையென |
|
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார், |
|
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக, |
|
5 |
கடையல்அம் குரல வாள் வரி உழுவை |
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது, |
|
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர், |
|
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும் |
|
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை, |
|
10 |
பொத்துடை மரத்த புகர் படு நீழல், |
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும், |
|
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின் |
|
வாரா அளவை ஆயிழை! கூர் வாய் |
|
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர் |
|
15 |
மனை உறை கோழி மறனுடைச் சேவல் |
போர் புரி எருத்தம் போலக் கஞலிய |
|
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி, |
|
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் |
|
வந்தன்று அம்ம, தானே; |
|
20 |
வாரார் தோழி! நம் காதலோரே. |
தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன் | |
உரை |
குண கடல் முகந்த கொள்ளை வானம் |
|
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத் |
|
தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு, |
|
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி, |
|
5 |
உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள், |
பெரு மலை மீமிசை முற்றினஆயின், |
|
வாள் இலங்கு அருவி தாஅய், நாளை, |
|
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி |
|
வருவதுமாதோ, வண் பரி உந்தி, |
|
10 |
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை; |
பனி பொரு மழைக் கண் சிவப்ப, பானாள் |
|
முனி படர் அகல மூழ்குவம்கொல்லோ |
|
மணி மருள் மேனி ஆய்நலம் தொலைய, |
|
தணிவு அருந் துயரம் செய்தோன் |
|
15 |
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே? |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. - கபிலர் | |
உரை |
'நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும், |
|
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ, |
|
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல |
|
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய |
|
5 |
மென் முலை முற்றம் கடவாதோர்' என, |
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து |
|
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி |
|
ஆள்வினை மாரியின் அவியா, நாளும் |
|
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை |
விளரி நரம்பின் நயவரு சீறியாழ் |
|
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு |
|
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் |
|
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை |
|
15 |
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி, |
கையறு நெஞ்சினள், அடைதரும் |
|
மை ஈர் ஓதி மாஅயோளே? |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் | |
உரை |
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப் |
|
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள், |
|
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி |
|
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள், |
|
5 |
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும், |
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து, |
|
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு |
|
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும், |
|
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும், |
|
10 |
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின், |
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக் |
|
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த் |
|
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும் |
|
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே? |
|
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், - அம்மூவனார் | |
உரை |
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும், |
|
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய |
|
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது, |
|
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி, |
|
5 |
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை |
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் |
|
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை |
|
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர் |
|
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு |
|
10 |
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து, |
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த |
|
அறை இறந்து, அவரோ சென்றனர் |
|
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய, |
|
செறி மடை அம்பின், வல் வில், கானவன் |
|
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு, |
|
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன், |
|
5 |
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப, |
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க |
|
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, |
|
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு, |
|
சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார் |
|
10 |
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு |
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து |
|
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய் |
|
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்; |
|
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி, |
|
15 |
யாயும், 'அவனே' என்னும்; யாமும், |
'வல்லே வருக, வரைந்த நாள்!' என, |
|
நல் இறை மெல் விரல் கூப்பி, |
|
இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன் | |
உரை |
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, |
|
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும், |
|
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி |
|
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி, |
|
5 |
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் |
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப் |
|
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும், |
|
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு |
|
அரிய ஆகும் என்னாமை, கரி மரம் |
|
10 |
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி, |
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென, |
|
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து, |
|
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன |
|
15 |
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப, |
இனிய ஆகுக தணிந்தே |
|
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே. |
|
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன |
|
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல் |
|
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு, |
|
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி, |
|
5 |
இன் துயில் எழுந்து, துணையொடு போகி, |
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் |
|
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி, |
|
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர், |
|
விசைத்த வில்லர், வேட்டம் போகி, |
|
10 |
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும் |
காமர் புறவினதுவே காமம் |
|
நம்மினும் தான் தலைமயங்கிய |
|
அம் மா அரிவை உறைவு இன் ஊரே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - இடைக்காடனார் | |
உரை |
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம் |
|
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து |
|
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று |
|
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர், |
|
5 |
காடு தேர் மடப் பிணை அலற, கலையின் |
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை |
|
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி |
|
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன |
|
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை |
|
10 |
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி, |
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை |
|
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள் |
|
குவளை உண்கண் இவளும் நம்மொடு |
|
வரூஉம் என்றனரே, காதலர்; |
|
15 |
வாராய் தோழி! முயங்குகம், பலவே. |
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை, |
|
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க; |
|
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ, |
|
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி, |
|
5 |
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த |
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் |
|
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர! |
|
விழையா உள்ளம் விழையும் ஆயினும், |
|
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு, |
|
10 |
அறனும் பொருளும் வழாமை நாடி, |
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன் |
|
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்; |
|
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால், |
|
அரிய பெரியோர்த் தெரியுங்காலை, |
|
15 |
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன |
பொய்யொடு மிடைந்தவை தோன்றின், |
|
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே? |
|
'வரைந்து எய்துவல்' என்று நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. - ஓரம்போகியார் | |
உரை |
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ, |
|
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக, |
|
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை, |
|
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின் |
|
5 |
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் |
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை, |
|
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து |
|
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை |
|
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை, |
|
10 |
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க, |
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த |
|
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க, |
|
அரம்பு வந்து அலைக்கும் மாலை, |
|
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே. |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார் | |
உரை |
சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை |
|
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை, |
|
சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ |
|
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை, |
|
5 |
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல், |
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்! |
|
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின், |
|
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக் |
|
கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து, |
|
10 |
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி |
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க் |
|
கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர், |
|
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும், |
|
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து, |
|
15 |
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக் |
கொந்தொடு உதிர்த்த கதுப்பின், |
|
அம் தீம் கிளவித் தந்தை காப்பே. |
|
பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் |
|
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் |
|
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும் |
|
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின், |
|
5 |
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும், |
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது, |
|
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது |
|
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி |
|
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த |
|
10 |
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி, |
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப, |
|
மை அற விரிந்த படை அமை சேக்கை |
|
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ, |
|
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் |
|
15 |
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி, |
'நல்ல கூறு' என நடுங்கி, |
|
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே? |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார் | |
உரை |
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை, |
|
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய |
|
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர், |
|
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென, |
|
5 |
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது, |
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென, |
|
அம் கண் பெண்ணை அன்புற நரலும் |
|
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன், |
|
கழி சேர் புன்னை அழி பூங் கானல், |
|
10 |
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் |
மணவா முன்னும் எவனோ தோழி! |
|
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன் |
|
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, |
|
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல் |
|
15 |
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ, |
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே? |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
வானம் பெயல் வளம் கரப்ப, கானம் |
|
உலறி இலை இலவாக, பல உடன் |
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப, |
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப் |
|
5 |
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் |
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு |
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல், |
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும் |
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை |
|
10 |
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் |
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப, |
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர |
|
உவலை சூடிய தலையர், கவலை |
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும் |
|
15 |
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர |
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய் |
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று, |
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி, |
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி, |
|
20 |
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் |
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு |
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப் |
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல், |
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி |
|
25 |
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. |
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ | |
உரை |
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து, |
|
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச் |
|
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ, |
|
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி |
|
5 |
ஏதில் வேலன் கோதை துயல்வரத் |
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்; |
|
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து, |
|
இரவின் மேயல் மரூஉம் யானைக் |
|
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள், |
|
10 |
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன் |
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல் |
|
உடு உறு கணையின் போகி, சாரல் |
|
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ, |
|
பலவின் பழத்துள் தங்கும் |
|
15 |
மலை கெழு நாடன் மணவாக்காலே! |
வெறி அச்சுறீஇ,தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை |
|
வலை வலந்தனைய ஆக, பல உடன் |
|
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின், |
|
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன |
|
5 |
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி, |
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி, |
|
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி, |
|
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும் |
|
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே, |
|
10 |
செல்ப என்ப தோழி! யாமே, |
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த |
|
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து, |
|
இன்னா மொழிதும் என்ப; |
|
என் மயங்கினர்கொல், நம் காதலோரே? |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி, |
|
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப் |
|
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய, |
|
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் |
|
5 |
நீர் வார் கண்ணின் கருவிளை மலர, |
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை |
|
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர் |
|
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர, |
|
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல் |
|
10 |
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச, |
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள், |
|
'காய் சின வேந்தன் பாசறை நீடி, |
|
நம் நோய் அறியா அறனிலாளர் |
|
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என |
|
15 |
ஆனாது எறிதரும் வாடையொடு |
நோனேன் தோழி! என் தனிமையானே. |
|
பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப, |
|
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின், |
|
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை, |
|
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி, |
|
5 |
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள் |
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி, |
|
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும் |
|
கல்லுடை அதர கானம் நீந்தி, |
|
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் |
|
10 |
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து |
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல் |
|
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும், |
|
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து, |
|
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத் |
|
15 |
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர், |
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும் |
|
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும், |
|
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ |
|
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும் |
|
20 |
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண், |
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின் |
|
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
கோதை இணர, குறுங் கால், காஞ்சிப் |
|
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல், |
|
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு |
|
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும் |
|
5 |
பெரு நீர் வையை அவளொடு ஆடி, |
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின் |
|
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில் |
|
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி |
|
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும் |
|
10 |
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல் |
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன், |
|
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய |
|
மலிதரு கம்பலை போல, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே. |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது. -மதுரைப் பேராலவாயார் | |
உரை |
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும், |
|
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி, |
|
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக, |
|
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின் |
|
5 |
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, |
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென, |
|
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல், |
|
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து |
|
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன் |
|
10 |
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் |
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின், |
|
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில், |
|
எழுதியன்ன கொடி படு வெருகின் |
|
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை, |
|
15 |
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம் |
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு |
|
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும் |
|
வெரு வரு கானம், நம்மொடு, |
|
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே? |
|
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு |
|
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி, |
|
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட, |
|
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை |
|
5 |
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத் |
தண் துளி அசைவளி தைவரும் நாட! |
|
கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது, |
|
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது, |
|
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை |
|
10 |
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின், |
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி, |
|
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ, |
|
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண் |
|
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே |
|
15 |
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை |
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும் |
|
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள், |
|
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன், |
|
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு, |
|
20 |
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர் |
நீடலர் ஆகி வருவர், வல்லென; |
|
கங்குல் உயவுத் துணை ஆகிய |
|
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே! |
|
இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் | |
உரை |
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த |
|
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய |
|
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும், |
|
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே |
|
5 |
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை |
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு, |
|
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன் |
|
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய், |
|
கவலை கரக்கும் காடு அகல் அத்தம், |
|
10 |
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென, |
வைகு நிலை மதியம் போல, பையென, |
|
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த |
|
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா, |
|
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண் |
|
15 |
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப, |
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி, |
|
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு, |
|
அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல் மாண்டு |
|
திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா, |
|
20 |
பருவரல் எவ்வமொடு அழிந்த |
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே. |
|
இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் |
|
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார், |
|
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க |
|
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை, |
|
5 |
எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர், |
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல் |
|
செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி, |
|
'செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை' எனச் |
|
சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து, |
|
10 |
தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது, |
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப் |
|
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால், |
|
சேணின் வருநர் போலப் பேணா, |
|
இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின், |
|
15 |
வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ, |
'துறையும் மான்றன்று பொழுதே; சுறவும் |
|
ஓதம் மல்கலின், மாறு ஆயினவே; |
|
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என, |
|
எமர் குறை கூறத் தங்கி, ஏமுற, |
|
20 |
இளையரும் புரவியும் இன்புற, நீயும் |
இல் உறை நல் விருந்து அயர்தல் |
|
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே. |
|
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார் மணி மிடை பவளம் முற்றும்நித்திலக் கோவை | |
உரை |
மேல் |