அண்டர்மகன் குறுவழுதியார், குறுவழுதியார் |
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென |
|
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக் |
|
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி; |
|
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி, |
|
5 |
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, |
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல் |
|
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை, |
|
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர் |
|
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ, |
|
10 |
மாலை மணி இதழ் கூம்ப, காலைக் |
கள் நாறு காவியொடு தண்ணென மலரும் |
|
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து; |
|
'வாரார்கொல்?' எனப் பருவரும் |
|
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே! |
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார் | |
உரை |
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென |
|
வரை இழி அருவி ஆரம் தீண்டித் |
|
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில், |
|
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக் |
|
5 |
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி, |
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே |
|
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல |
|
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின் |
|
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று, |
|
10 |
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப் |
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய் |
|
இரும் பிடி இரியும் சோலைப் |
|
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லி யது. - அண்டர் மகன் குறுவழுதியார் | |
உரை |
மேல் |