அந்தி இளங்கீரனார் |
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் |
|
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம் |
|
நயன் இல் மாக்கள் போல, வண்டினம் |
|
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர, |
|
5 |
மை இல் மான் இனம் மருள, பையென |
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, |
|
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு |
|
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன, |
|
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை, |
|
10 |
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக, |
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக் |
|
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது, |
|
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து |
|
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி, |
|
15 |
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து, |
இது கொல் வாழி, தோழி! என் உயிர் |
|
விலங்கு வெங் கடு வளி எடுப்பத் |
|
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே? |
|
பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார் | |
உரை |
மேல் |