ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் |
களையும் இடனால் பாக! உளை அணி |
|
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா |
|
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய, |
|
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி, |
|
5 |
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் |
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக, |
|
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல |
|
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின், |
|
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர, |
|
10 |
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, |
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு |
|
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ, |
|
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன், |
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
|
15 |
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை |
புலம்பு கொள் மாலை கேட்டொறும் |
|
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் | |
உரை |
மேல் |