ஆலங்குடி வங்கனார் |
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து, |
|
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன், |
|
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப் |
|
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் |
|
5 |
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை |
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது |
|
செய்யாம்ஆயினும், உய்யாமையின், |
|
செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண் |
|
உலமந்து வருகம் சென்மோ தோழி! |
|
10 |
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் |
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் |
|
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும் |
|
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே. |
|
தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி வங்கனார் | |
உரை |
மேல் |