ஆலம்பேரி சாத்தனார் |
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப |
|
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து |
|
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை |
|
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து, |
|
5 |
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி |
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து, |
|
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும் |
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு, |
|
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின் |
|
10 |
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின், |
குறு நடைப் புறவின் செங் காற் சேவல் |
|
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும் |
|
புலம்பொடு வந்த புன்கண் மாலை, |
|
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி, |
|
15 |
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன் |
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச் |
|
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின் |
|
வேய் புரை பணைத் தோள், பாயும் |
|
நோய் அசா வீட, முயங்குகம் பலவே. |
|
தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் | |
உரை |
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் |
|
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், |
|
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை |
|
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, |
|
5 |
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் |
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக் |
|
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை |
|
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள |
|
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை |
|
10 |
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த |
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் |
|
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் |
|
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம் |
|
மை எழில் உண்கண் கலுழ |
|
15 |
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே? |
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் | |
உரை |
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக் |
|
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின், |
|
நீடு சினை வறிய ஆக, ஒல்லென |
|
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும் |
|
5 |
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு, |
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச் |
|
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும் |
|
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய! |
|
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே, |
|
10 |
வசை இல் வெம் போர் வானவன் மறவன் |
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும், |
|
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன் |
|
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன் |
|
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த |
|
15 |
தண் கமழ் நீலம் போல, |
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே. |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி சாத்தனார் | |
உரை |
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை |
|
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் |
|
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி |
|
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின், |
|
5 |
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் |
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண |
|
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண் |
|
தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து |
|
வருதும்' என்றனர் அன்றே தோழி! |
|
10 |
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் |
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த |
|
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என |
|
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி, |
|
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன் |
|
15 |
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், |
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு |
|
மண் பயம் பூப்பப் பாஅய், |
|
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே? |
|
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி சாத்தனார். | |
உரை |
மேல் |