ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார், பெருந்தலைச் சாத்தனார் |
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், |
|
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத் |
|
தெறல் அரு மரபின் கடவுட் பேணி, |
|
குறவர் தந்த சந்தின் ஆரமும், |
|
5 |
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் |
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் |
|
குழியில் கொண்ட மராஅ யானை |
|
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது, |
|
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும், |
|
10 |
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் |
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின், |
|
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு, |
|
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து, |
|
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், |
|
15 |
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட |
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை, |
|
கவவு இன்புறாமைக் கழிக வள வயல், |
|
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற |
|
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல் |
|
20 |
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, |
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை, |
|
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த |
|
வெண் குருகு நரல, வீசும் |
|
நுண் பல் துவலைய தண் பனி நாளே! |
|
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார் | |
உரை |
செல்க, பாக! எல்லின்று பொழுதே |
|
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன் |
|
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா, |
|
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை, |
|
5 |
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி, |
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன, |
|
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம் |
|
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி, |
|
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக, |
|
10 |
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில், |
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள் |
|
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த |
|
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல் |
|
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ, |
|
15 |
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என, |
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால் |
|
அருங் கடி வியல் நகர் நோக்கி, |
|
வருந்துமால், அளியள் திருந்திழைதானே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் | |
உரை |
மேல் |