பாடினோர் பகுதி |
இடையன் சேந்தங்கொற்றனார் |
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின் |
|
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை! |
|
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர் |
|
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும் |
|
5 |
கல்லா இளையர் கலித்த கவலை, |
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும் |
|
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல், |
|
அத்த எருவைச் சேவல் சேர்ந்த |
|
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல், |
|
10 |
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன் |
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி |
|
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார், |
|
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி, |
|
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி, |
|
15 |
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும், |
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர் |
|
நோய் இலர் பெயர்தல் அறியின், |
|
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங் கொற்றனார் | |
உரை |
மேல் |