பாடினோர் பகுதி |
இடையன் நெடுங்கீரனார் |
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி |
|
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின், |
|
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் |
|
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், |
|
5 |
நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை, |
பொறி வரி இன வண்டு ஊதல கழியும் |
|
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம், |
|
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின் |
|
அனையேன்ஆயின், அணங்குக, என்!' என |
|
10 |
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின், |
யார்கொல் வாழி, தோழி! நெருநல் |
|
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ, |
|
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு, |
|
புதுவது வந்த காவிரிக் |
|
15 |
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே? |
பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார் | |
உரை |
மேல் |