பாடினோர் பகுதி |
இம்மென்கீரனார் |
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர, |
|
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ, |
|
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை |
|
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய |
|
5 |
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து, |
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான், |
|
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று, |
|
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க, |
|
நன்று புறமாறி அகறல், யாழ நின் |
|
10 |
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ? |
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி, |
|
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப் |
|
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி, |
|
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி, |
|
15 |
நயன் அறத் துறத்தல் வல்லியோரே, |
நொதுமலாளர்; அது கண்ணோடாது, |
|
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ, |
|
மாரி புறந்தர நந்தி, ஆரியர் |
|
பொன் படு நெடு வரை புரையும் எந்தை |
|
20 |
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண் |
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ? |
|
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து, |
|
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை |
|
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர் |
|
25 |
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே! |
காமம் மிக்க கழி படர் கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார் | |
உரை |
மேல் |